Pages

Saturday 29 December 2012

FLOP 10 தமிழ் படங்கள் 2012

FLOP 10 தமிழ் படங்கள் 2012



2012 முடிய போகிறது .எல்லோரும் இந்த ஆண்டின் TOP 10 படங்களை பேசிவருகிறார்கள்.நாம் ஒரு மாறுதலுக்காக FLOP 10 படங்களை பார்க்கலாம்.சொல்லி வைத்தாற்போல் இந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு படம் எப்படா வரும் என்று ஏங்கவைத்து அந்த படம் பார்த்த பின் ஏன்டா இந்த படத்தையா இப்படி எதிர்பார்த்தோம் ? ச்சே என்று ஆனது ஒரு வாடிக்கையானது .


இந்த படங்களை FLOP 10 சுமாருக்கும் கீழே ---- மிகவும் மோசம் .
                                                                    10---1

இப்படி எடுத்து கொள்ளவும்.

10.மாற்றான் : படத்தில் விஷயம் இல்லை என்று சொல்லிவிட முடியாது .அதை நீட்டி முழக்கி ,நீளமான சண்டைகள்,இறுதியில் வெளிநாடு ,பின் வடநாடு என்று சுற்றி வந்து ஒரு அயர்ச்சி வந்துவிட்டது.கொஞ்சம் குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.இந்த கதைக்கு ரெட்டை விஷயம் தேவையா என்று தோன்றியது.மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு படம் பார்க்கும்படி தான் இருந்தது.

9.அரவான்: படம் கொஞ்சம் ராவாக இருந்தது.அங்காடி தெருவுக்கு பின் வசந்த பாலன் இப்படி சறுக்குவார்  என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.படத்தை எதிர்பார்த்தேன்.எதோ குறைந்தது.பசுபதி நல்ல நடிகர் ,ஆனால் அவர் நடிக்கும் படங்கள் ஒன்றும் தேறவே இல்லை.எங்கே மீண்டும் வில்லனாக ஆகி விடுவாரோ என்று பயம் வருகிறது.

8.முகமூடி : எனக்கு மிஷ்கின் விஷயங்கள் பிடிக்கும் .ஆனால் படத்தில் விஷயம் இல்லை.இவர்களே படத்தை பற்றி ஓவராக பேசி கெடுத்து விட்டனர்.படத்தில் குறிப்பிடும்படி சம்பவங்களோ காட்சிகளோ இல்லை. ஒரே ஆறுதல் நல்ல இசை .குறிப்பாக பின்னணி இசை.

7.வேட்டை: மாதவன் ,ஆர்யா ,யுவன்,லிங்குசாமி .கொஞ்சமாவது பார்க்கும்படி இருக்கும் என்று நினைத்தேன்.அதே அண்ணன் தம்பி.வீரன்,கோழை .அக்கா  தங்கை ,ஒரு வில்லன்,அண்ணன் அடிபட்டு விட தம்பி அண்ணனுக்கு தைரியம் வரவைத்து வில்லனை காலி செய்கிறான் .எப்பா சாமி .இதை போய் ஹிந்தியில் வேறு ரீமேக் ஆகபோகுதாம்.

6.மெரினா: பசங்க படம் நல்ல படம்.அதே போல் சிறுவர்களை வைத்து படம் என்றதும் எதோ ஒரு இன்னொரு விஷயம் சொல்லப்போறாரு அப்படின்னு நினைத்தால் சும்மா பசங்க விளையாடுவதும் ,பீச்சில் சுண்டல் விற்பதும் என்று படுத்தி எடுத்து விட்டார்.ஒரே ஆறுதல் சிவகார்த்திகேயன்..அனால் படம் செலவு பண்ணுனதை விட 5 மடங்கு சம்பாதிதுவிட்டது என்று கேள்வி.

5. 3. ரஜினி மகள் டைரக்டர் ,ஒரு நல்ல கம்மேர்சியல் படமாக இருக்கும் என்று நினைத்தேன்.கொலைவெறி வேறு கிளப்பிவிட்டது.படம் பார்த்தவர்களுக்கு கொலைவெறி வந்தது தான் மிச்சம்.இதிலும் ஆறுதல் சிவகார்த்திகேயன் .

4.நீதானே என் பொன்வசந்தம்: கௌதம் எப்பவும் எடுக்கும் லவ் படம்.படு மெதுவாக போனது .இளையராஜா பாட்டு இல்லாவிட்டால்,நினைக்கவே முடியல.ஜீவா பாவம்.பெரிய இயக்குனர் படங்களில் அவர் நடிக்கும் படங்களும் ஊத்தி கொள்கின்றன.

3.தாண்டவம்: எனக்கு தெரிந்த முதல் குறை ஏற்கனவே மெதுவாக போகும் படத்தில் ஏன் எல்லோரும் ரொம்ப மெதுவாக பேசுகிறார்கள்? பாடல்கள் கேட்க்கும்படி இருந்தாலும் படம் உட்கார முடியல.இதை விட 20 வருஷத்திற்கு முன் இதே கண்தெரியாத ஹீரோ பழிவாங்கும் படமான இரவு சூரியன் நன்றாக இருக்கும். விக்ரம் மார்க்கெட்டை அடுத்த ஷங்கர் படமாவது தூக்குமா ?

2.பில்லா 2:  அஜித் ? ----NO COMMENTS (புரிஞ்சுதா)



1.சகுனி : நல்ல வளர்ந்து வர்ற ஹீரோ கார்த்தி.கதையில் ஒன்னும் இல்லாமல்,ஒரு லாஜிக் இல்லாமல் இவர் சொல்வதை எல்லா அரசியல்வாதிகளும்,சாமியாரும் அப்படியே நம்புகிறார்.ட்ரைலர் பார்த்து செம படமா இருக்குமோ ? அரசியலை ஒரு வாங்கு வாங்குமோ என்று எதிர்பார்தேன்.சந்தனமும் ஆரம்ப ரஜினி-கமல் மேட்டர் தவிர சிரிப்பும் ஒன்றும் இல்லை.இந்த ஆண்டு நான் பார்த்த மிக மோசமான படம் இதுதான்.எனக்கு என்னவோ அலெக்ஸ் பாண்டியனும் சந்தேகமாக தான் இருக்கு .


சரி எனக்கு எதிர்பாராமல் 100% திருப்தி தந்த படங்கள் என்றால் தடையற தாக்க ,பிட்சா இரண்டும் தான்.எதிர்பார்த்து திருப்தி தந்தது துப்பாக்கி .

ஒரு படம் ஹிட் ஆகி எனக்கு பிடிக்காதது ஒரு கல் ஒரு கண்ணாடி .இன்னும் கொஞ்சம் ஓடி இருக்கலாம் என்று நினைத்தது நண்பன் ,சாட்டை

நன்றாக சிரிக்க வைத்த படம் கலகலப்பு.

இது போய் ஹிட்டா என்று நினைத்தது சுந்தரபாண்டியன் .



Thursday 27 December 2012

SINISTER--முதுகுதண்டை சில்லிட வைக்கும் திகில் படம்


SINISTER--முதுகுதண்டை சில்லிட வைக்கும் திகில் படம் 



தொடக்க காட்சியிலேயே ஒரு மரத்தின் நீண்ட கிளையில் வரிசையாய் நான்கு பேர் முகம் மறைத்து தூக்கில் தொங்க தயாராக இருக்கிறார்கள்.மெதுவாக கயிறு இறுக்கப்பட்டு  கால்களை உதைத்து துடித்து  இறக்கிறார்கள்.இப்படி தொடங்கும் படம் இது.இந்த ஆண்டு வெளி வந்த ஹாரர் படங்களுள் முதன்மையான படம்.

நாயகன்  ஒசவல்ட் ஒரு எழுத்தாளன் .ஒரு வெற்றிகரமான புத்தகத்தால் உலகிற்கு அறியப்பட்டவன்.அதன்பின் எழுதியவை எல்லாம் தோல்வி அடைய,இழந்த பேரை மீண்டும் மீட்க விரும்புகிறான்.அவன் மனைவியோ அவனை வேறு வேலைகளுக்கு செல்ல கேட்டுகொள்கிறாள் .அவன் பிடிவாதமாக எழுத்திலேயே இருக்கிறான்.இந்த நிலையில் காவல் துறையால் இன்னும் முழுதும்  முடிக்கமுடியாத  கொலைகள் நடந்த அந்த வீட்டிற்கு குடி வருகிறான்.அவன் வீட்டின் வெளியில் உள்ள மரத்தில் தான் தொடக்க காட்சியில் வந்த தூக்கு நடந்த இடம்.ஊரை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் தனிமையான வீடு அது.

அவனுக்கு ஒரு மகன் ,ஒரு மகள்.அவனை தவிர அவன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இங்கே வந்தது பிடிக்கவில்லை.அவனும் இந்த புதிய கதை எழுதி முடித்ததும் மீண்டும் பழைய வீட்டிற்க்கே போய்  விடலாம் என்று சொல்கிறான்.அன்று இரவு சாமான்களை அடுக்க வீட்டின் மேலுள்ள தளத்திற்கு செல்கின்ற அவன் அங்கே ஒரு அட்டை பெட்டி .அதில் சில பிலிம் ரோல்கள் ,ஒரு ப்ரொஜெக்டர் போன்றவை இருக்கின்றன .இரவு எல்லோரும் உறங்கிய பின் அவன் அவனது அறையில் அந்த பிலிம் ரோல்களை ஓட விடுகிறான்.அவை SNUFF FILM வகையாறக்கள் .

அந்த படங்களில் நான்கு குடும்பங்கள் தனித்தனியே பல முறைகளில் கொல்லபடுவதை பார்த்து உறைகிறான்.கடைசியாக அவன் பார்க்கும் கொலை அவன் வீட்டின் வெளியே உள்ள மரத்தில் நான்கு பேர் தூக்கில் தொங்குவது .இவற்றை பார்த்ததும் இதில் உள்ளவற்றை ஆராய்ந்து அதை கதையாக எழுதி மீண்டும் வெற்றி பெற நினைக்கிறான்.மீண்டும் மீண்டும் அவற்றை ஓட விடுகிறான்.யார் இந்த படங்களை எடுத்தது? அந்த படத்தில் இருக்கும் சிறுமி என்ன ஆனால்? என்று பல கேள்விகள் அவனுள் எழுகின்றது.

எல்லா கொலைகளிலும் ஒரு பயங்கரமான உருவம் எங்கோ ஒரு இடத்தில இருப்பதை கண்டு பிடிக்கிறான்.அந்த முகத்தை பிரிண்ட் எடுத்து கொள்கிறான்.போலீசை அழைக்கும் ஒஸ்வல்ட் அவரிடம் தான் கண்டுபிடித்ததை சொல்கிறான்.1960 களில் தொடங்கி பல்வேறு நகரங்களில் பல்வேறு காலங்களில் இது போல் கொலைகள் நடந்துள்ளதாக சொல்கிறார் போலீஸ்.மேலும் எல்லா கொலைகளிலும் அந்த குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் காணமல் போகிறது என்றும் சொல்கிறார்.

சில நாட்கள் கழித்து ஒரு இரவு ,அவர் அறையில் இருந்து சத்தம் .பார்த்தால் என்ன? சஸ்பென்ஸ் உடைக்க வேண்டாம்.

அந்த இரவே அந்த படங்களை கொளுத்தி விட்டு அவசரமாக குடும்பத்தோடு வீட்டில் இருந்து காலி செய்து வேறு  இடம் சென்று விடுகிறான் .புதிய வீட்டில் இருக்கும் ஒஸ்வல்ட் அந்த போலீஸ் அதிகாரி மூலம் சில உண்மைகள் அறிகிறான்.அது என்ன? இறந்த 4 குடும்பங்களுக்கும் என்ன சம்பந்தம் ? வீடு மாறியுள்ளதால் இப்பொது அவன் சந்திக்க இருக்கும் ஆபத்து என்ன? புதிய வீட்டிலும் அவனுக்கு ஒரு அட்டை பெட்டியில் சில பிலிம் ரோல்கள் .அதில் தொடர்ச்சி என்று எழுதப்பட்டுள்ளது .அவற்றை ஓடவிட்டு பார்க்கிறான். என்ன பார்க்கிறான்? 

படத்தின் சஸ்பென்ஸ் உடைய வேண்டாம் என்று நிறைய எழுதவில்லை.சில காட்சிகளில் முதுகு தண்டு சில்லிடவைக்கும் பயம் வருவது நிச்சயம்.ஒரு இரவில் படம் பாருங்கள் .அப்புறம் சொல்லுங்கள் .கொஞ்சமும் ஆபாசமோ ,கொடூரமான கொலைகளோ படத்தில் இல்லை.அதனால் பெண்களும் பார்க்கலாம்.

IMDB RATING --6.8

ROTTEN TOMATTOES--  63% FRESH

2012 அக்டோபரில் வந்த படம் 1.40 நிமிடம் ஓடும் .

Wednesday 26 December 2012

COOL HAND LUKE (1967) --ஆங்கில சிறை படம்


COOL HAND LUKE (1967) --ஆங்கில சிறை படம் :



உலகில் சிறை வாழ்கையை சொல்லும் படங்கள் தனி ரகம் .நான் பார்த்தவற்றில் THE SHAWSHANK REDEMPTION,PAPILLON,ESCAPE FROM ALCATRAZ,FELON போன்ற படங்கள் குறிபிடத்தக்கவை.THE GREEN MILE படமும் நல்ல படம் என்று கேள்விபட்டுள்ளேன்.நான் நம்பி ஏமாந்த படம் THE GREAT ESCAPE.இந்த படம் COOL HAND LUKE முதலில் நாவலாக வந்து பின் திரை படமாக்க பட்டது.PAUL NEWMAN கதையின் நாயகன்.


கடும் விதிமுறைகளுடன் இருக்கும் ஒரு சிறையில் புதிதாக வரும் கைதி அந்த விதிகளுக்கு அடங்க மறுத்து,எல்லோரும் அஞ்சும் தண்டனைகளை ஏளனம் செய்தபடி அவற்றை ஏற்கிறான்.இதனால் மற்ற கைதிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்து விடுகிறான்.இரண்டு மூன்று முறை தப்பிக்க முயற்சித்து மாட்டிகொள்கிறான்.அடுத்த முறை தப்பித்து மாட்டினால் சுட்டு விடுவோம் என்று எச்சரித்தும் தப்பிக்கிறான்.மாட்டி கொள்கிறானா? 


ப்ளோரிடாவில் தனிமை பாலைவனத்தில் ஒரு சிறை.கடும் விதிமுறைகள்.மீறுவோர் தனிமை அறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கபடுவர்.சிறு குற்றம் புரிந்து உள்ளே வரும் நாயகன் லூக் .அங்கே உள்ள கைதிகள் அந்த சிறையை அடுத்த உள்ள ஒரு இடத்தில பாதை அமைக்கும் பணிக்கு கூட்டி செல்ல படுகிறார்கள்  .அங்கு வெய்யிலின் கொடுமை தாங்கமால் பலர் சுருண்டு  விழுகிறார்கள்.அந்த சிறையில் ஏற்கனவே ஒருவன் அவர்களுள் தலை போல இருப்பவன்.அவன் முதலில் லூக்குடன் மோதி பின் நண்பன் ஆகிறான்.

அந்த சிறையின் எந்த விதிக்கும் அடங்க மறுக்கும் லூக் அதற்கான தண்டனைகள் பெறுகிறான்.அந்த தண்டனைகளுக்கு மற்றவர்கள் அஞ்சும் நிலையில் அவற்றை எதிர்கொள்ளும் லூக் மற்ற கைதிகளின் அன்பை பெறுகிறான்.ஒரு முறை 50 முட்டைகளை 1 மணி நேரத்தில் சாப்பிட  பந்தயம் கட்டி வென்று அவனால் முடியாதது எதுவும் இல்லை என்று கைதிகள் என்னும் அளவுக்கு ஆகிவிடுகிறான்.அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்து தப்பிக்கிறான்.


அவன் தப்பித்ததை எண்ணி மகிழும் கைதிகள் அவன் சிக்கி கொண்டதை பார்த்து வருந்துகிறார்கள்.மீண்டும் தப்பிக்கிறான்.இந்த முறை சில நாட்கள்.மீண்டும் சிக்குகிறான்.அடுத்த முறை தப்பித்து மீண்டும் சிக்கினால் சுட்டு கொன்றுவிடுவோம் என்று எச்சரிக்கிறார்கள் சிறை அதிகாரிகள்.அவர்கள் தரும் தண்டனைகள் தாங்க முடியாமல்  அவர்களிடம் அடிமை போல் நடக்க ஆரம்பிக்கிறான்.அப்படியே மீண்டும் எஸ்கேப் .இப்போ சிக்கினான இல்லையா ?

1967 இல் வந்த கலர் படம்.ஒரு வினாடி கூட போர் அடிக்காமல் செல்கிறது.ஒரு படத்திற்கு அந்த படத்தின் கதை நிகழும் களம் அழுத்தமாக பதிவு செய்தால் தான் நம் மனதை விட்டு போகாது .இதில் அந்த இடங்களும் தனிமையான பாலைவனமும்,சிறையும் அசத்தல் .ஹீரோ அசால்டாக நடித்துள்ளார்.அவர் புன்னகை இன்னமும் என் கண்முன் உள்ளது.இசை பற்றியும் சொல்ல வேண்டும் .அதிரும் இசை எல்லாம் இல்லை .அவன் தப்பித்து ஓடும்போது கூட வெறும் இரண்டு மூன்று கருவிகளுடன் அருமையாய் இசை அமைத்துள்ளனர்.

படம் 2.06 மணி நேரம் ஓடுகிறது .

IMDB RATING-- 8.2

ROTTEN TOMATTOES --100% FRESH

படம் சூப்பர்.  FEEL THE EXPERIENCE OF PRISON LIFE...

Monday 17 December 2012

கௌதம் மேனன் இதுவரை என்ன கிழித்துவிட்டார்?

கௌதம் மேனன்  இதுவரை என்ன கிழித்துவிட்டார்? 





கடந்த மூன்று நாட்களாக பதிவுகளில் ஒரே குரலில் அழுகை  சத்தம் .கௌதம் ஏமாற்றிவிட்டார்.படத்தில் ஒன்றுமே இல்லை ஏற்கனவே பார்த்த அவரது படங்கள் போலவே இருக்கு .படம் ஒரே இழுவை.ரொம்ப ஸ்லோ .கதை நகரவே மாட்டேன் என்கிறது என்று பல்வேறு விமர்சனங்கள்.இதில் கௌதம் மேனன் பட ரசிகர்கள் வேறு தனி ட்ராக்கில் விமர்சனம் போடுகிறார்கள் .நான் கேட்கிறேன் அப்படி இதுவரை அசத்தும் படங்கள் எத்தனை கொடுத்துவிட்டார்.அவர் படங்களுக்கு ஏன் இவ்வளோ எதிர்பார்ப்பு.என் எதிர்பார்ப்பு இந்த படத்தை பொறுத்தவரை அவர் படம் தொடங்கும் போதே முடிவு செய்துவிட்டேன்.இது லவ் படம்.ரொம்ப மெதுவாக போகும்.பாட்டு அருமையாய் இருக்கும்.ஆனால் படம் மொக்கையாய் இருக்கும்.என்று.

கௌதம் மேனன் இதுவரை இரண்டு வகையான படங்களே அதிகம் எடுத்து உள்ளார்.
1.slow moving love stories
2.partly fast paced police stories.

இதுவரை 13 படங்கள் எடுத்துள்ளார்.

1.மின்னலே , 2.மின்னேலே (ஹிந்தி).3.காக்க காக்க 4.காக்க காக்க (தெலுகு) 5.வேட்டையாடு விளையாடு  6.பச்சைக்கிளி முத்துச்சரம் 7.வாரணம் ஆயிரம் 
8.விண்ணை தாண்டி வருவாயா 9.தெலுகு 10.ஹிந்தி 11. நடு  நிசி நாய்கள் 12.நீதானே என் பொன்வசந்தம் 13.தெலுகு 

ரீமேக் கழித்தால் 8 படம் .

1.மின்னலே :  முதல் படம் ஓரளவு பார்க்கும்படி இருந்தது.கதையோ,திரைக்கதையோ எதுவும் புதிதில்லை.இருந்தாலும் அலைபாயுதே மாதவன் ,ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என்று கரை ஏறிய படம்.இன்று அவர் எடுக்கும் படங்களுக்கு மின்னலே பரவாயில்லை 

2.காக்க காக்க : அவரது முழு ஸ்டைல் வெளியே வந்த படம்.இன்றும் போலீஸ் படங்களில் இடம் உண்டு.எனக்கு முழு திருப்தி தந்த படம்.சூர்யாவை வெளி காட்டிய படம்.

3.வேட்டையாடு விளையாடு: கமலுக்கு  அப்படியொரு அறிமுக காட்சி ரொம்ப நாட்களுக்கு பின்.அடக்கி வாசித்த கமல்,ஆர்பாட்டம் செய்யும் வில்லன்கள் ,கௌதமின் அமெரிக்கா என்று படம் விளையாடியது.சரி கௌதம் என்று ஒரு ஆள் வந்துவிட்டார் என்று நினைத்தேன்.

4.பச்சைக்கிளி முத்துச்சரம்: எனக்கு பிடித்த படம்.சரத் படத்திற்கு பொருந்தவில்லை.இந்த கதையை முதலில் கமலிடம் வேட்டையாடு விளயாடுவிர்க்கு முன் சொன்னாராம்.கமலுக்கு பிடிக்கவில்லை .நிறைய பேருக்கு படம் பிடிக்க வில்லை.

இதற்க்கு பின் வந்த படங்கள் எல்லாமே எனக்கு பிடிக்கவில்லை 

5.வாரணம் ஆயிரம்: ரொம்ப போர்,படம் ரொம்ப நீளம்.கடத்தல் காட்சிகள் என்று தேவை இல்லாத நிறைய காட்சிகள் படத்தில் உண்டு.படம் முடிவதற்குள் ஒரு வித அயர்ச்சி வந்து விட்டது.வழக்கம் போல ஹாரிஸ் காப்பாற்றினார்.

6.விண்ணை தாண்டி வருவாயா :  இந்த படம் சிலருக்கு பிடித்திருக்கிறது என்று கேள்வி பட்டு ஆச்சர்யம் அடைந்தேன்.எப்பா செம போர்.ரகுமான் இல்லாவிட்டால் என்ன ஆகி இருக்கும். ரெட் ஜியான்ட் -உதயநிதி இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்காவிட்டால் படம் ஊத்தி கொண்டிருக்கும்.நான் இந்த படத்தை டி.வி.டியில் பார்க்க தொடங்கி போர் அடித்தால் பொறுமை இழந்து நிறுத்தி நிறுத்தி அடுத்த நாள் அடுத்த நாள் என்று 5 நாள் பார்த்தேன்.இன்றும் கிளைமாக்ஸ் என்ன என்று நினைவில்லை .

7.நடுநிசி  நாய்கள் :  எப்பா படமா அது .உவ்வே .

எனக்கு தெரிந்து கௌதமிடம் எதிர்பார்க்க ஒன்றும் இல்லை.அவர் படம் இப்படிதான் இருக்கும் என்று தெரியும் .பல உலக சினிமா கரைத்து குடித்த பல பதிவர்கள் நீதானே என் பொன்வசந்தம் பார்த்து ஏன் புலம்புகிறீர்கள் ? கௌதம் படத்தை ஏன் எதிர்பார்க்க வேண்டும்.?கிட்டத்தட்ட அதே மன நிலையோடு
மணிரத்னத்தின் கடல் படத்தையும் எதிர்பார்த்து ஏமாற போகிறீர்கள்.வாழ்த்துக்கள்.கௌதமின் அடுத்த படம் சூர்யா உடன் .செம ஜாலி .

Sunday 16 December 2012

1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு


1981 இல்  ரஜினி -கமல் இடையே நடந்த  கை கலப்பு :


தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் நட்பு என்பது ரொம்பவும் அரிதான விஷயம் . பார்த்தால் கட்டி அனைத்து கொள்வதும் பின் அவருக்கே குழி பறிக்கும் வேலைகளும் கருப்பு வெள்ளை காலங்கள் முதலே தெரிந்தது தான்.எம்.ஜி.ஆர் -சிவாஜி இருவரும் நேரில் தம்பி-அண்ணே என்று பாசத்தால் கட்டி அனைத்தாலும் சிவாஜிக்கு முன்பிருந்தே சிறு சிறு வேடங்களில் நடித்து வந்து அப்போதுதான் எம்.ஜி ஆரின் வளர்பிறை நேரம் .ஆனாலும் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் நிலை.ஒரு படம் ஓடினால் பின் சில சரிவுகள்.அதன் பின் வந்த சிவாஜி பராசக்தி மூலம் மின்னல் போல நுழைந்து தடதடவென மேலே வந்து விட்டார்.ஆமாம் எம்.ஜி ஆரை முந்தி முதல் இடத்தில இருந்தது அவர் நிலை. தொடர்ச்சியாக சிவாஜியை வைத்து மட்டுமே படம் எடுத்து கொண்டிருந்தனர் பி.ஆர்.பந்துலு போன்ற சில தயாரிப்பாளர்கள்.எம்.ஜி ஆர் தனது முறை வந்ததும் சிவாஜியை வைத்து படம் எடுத்த அனைவரையும் தன்னை நோக்கி வரவைத்தார்.மேலும் தேவர் போன்ற தயாரிப்பாளர்கள் சிவாஜியை நாடாமல் பார்த்துகொண்டார்.ஒரு நேரம் எம்.ஜி ஆர் குரூப் நடிகர்கள் ,சிவாஜி குரூப் நடிகர்கள் என்று இரு பிரிவாக நடிகர்கள் இருந்தார்கள்.எம்.ஜி ஆர் க்ரூபில் அசோகன் ,வி.எஸ்.ராகவன்,தேங்காய் ஸ்ரீனிவாசன்  இன்னும் சிலர் .சிவாஜியிடம் மேஜர் சுந்தர்ராஜன்,பாலாஜி போன்றோர் .இவர்களை ஒரு க்ரூப் நடிகர் பெரும்பாலும் இன்னொரு நடிகர் படத்தில் நடிக்க மாட்டார்.இருந்தாலும் நேரடியாக எம்.ஜி.ஆர் -சிவாஜி நட்பு பாராட்டி கொள்வார்கள் ..


காலம் கடந்து அடுத்த செட் நடிகர்கள் முன்னணிக்கு வருகிறார்கள்.கமல்-ரஜினி  என்று தொடங்கியது.இருவரும் சேர்ந்து பல படங்களில் நடிக்கிறார்கள்.நட்பு பலப்படுகிறது .பின் இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து பிரிகிறார்கள்.இருவருமே அடுத்தடுத்து ஹிட்கள் கொடுத்து முன்னணிக்கு வருகிறார்கள்.இருந்தாலும் பழைய பழக்கத்தில் நட்புடனே இருக்கிறார்கள்.இனி விஷயத்திற்கு வருவோம்.இது என் கற்பனையோ அல்லது வேறு எதுவோ இல்லை.நான் ஒரு புத்தகத்தில் படித்ததை இங்கே விவரிக்க்றேன்.அப்போது குமுதம் வார புத்தகம் இருவரையும் நேரடியாக பேர் சொல்லாமல் இந்த விஷயத்தை குறிப்பிட்டு இருந்தது.பின் கமல் ஒரு பேட்டியில் நேரடியாகவே அதை ஒப்புக்கொண்டு அதன் பின் நடந்தவற்றை விவரித்துள்ளார்.அந்த சம்பவங்களை அப்படியே 

தயாரிப்பாளர் கே.பாலாஜி .பில்லா,தீ ,விடுதலை போன்ற ரஜினி படங்களும் சவால்,சட்டம்,வாழ்வே மாயம் போன்ற கமல் படங்களும் தயாரித்தவர்.

வருஷம் ---1981. மே மாதம். பாலாஜி ரஜினின் திருமணத்தையொட்டி ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார்.ரஜினி ,கமல்,பாலாஜி,ஜெய்சங்கர் ,விஜயகுமார் ,ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .நட்சத்திரங்களின் சங்கமத்தில் மது கரை புரண்டு ஓடியது .கமல் ஏக துஜே கேலியே மூலம் உச்சத்தில் இருந்தார்.ரஜின்க்கும் நல்ல  மார்க்கெட். புகழ் மயக்கம் எல்லோருக்கும் இயல்பே.மகிழ்ச்சி உற்சாகத்தில்  தனி நபர் தாக்குதல் விமர்சனங்கள் தலை தூக்கின .

ஏழுமலையான் பெயர் கொண்ட தயாரிப்பாளர் பார்டியில் இரண்டு பெரிய நடிகர்கள் மோதிக்கொண்டதை  பற்றி எல்லா பத்திரிக்கைகளும் செய்தி வந்தது.

"ஸ்டைல் நடிகர் கமலாரின் சட்டை காலரை பிடித்தாராம்.அதுவரை பொறுமையாய் இருந்த அவர் இதற்குமேல் இடம் கொடுக்க கூடாது என்று விட்டாராம் ஒரு குத்து .தடால் என்று விழுந்து விட்டாராம் முரட்டு காளை " (குமுதம் லைட்ஸ் ஆன் ,28.05.1981)

பிறகு நடந்தவை கமல் வார்த்தைகளில் :

ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலகி இருவரையும் சமாதனம் செய்தார் .அதற்காகவே ஜெய் சாரை எங்கள் இருவருக்குமே பிடிக்கும்.இந்த சம்பவம் நடந்த மறு நாள் நான் வாகினி ஸ்டுடியோவில் இருந்தேன்.என்னை பார்க்க ரஜினி வேகமாக வந்துகொண்டிருந்தார் .வந்த வேகத்தை பார்த்தல் தகராறு செய்யத்தான் வருகிறார் போலிருக்கு ,சரி வரட்டும் வந்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று யோசித்து கொண்டிரும்போதே அருகில் வந்து ரஜினி என் கையை அழுத்தமாக பிடித்தார்."சாரி ..நேத்து நடந்தை மறந்திடுங்க என்றார்.எனக்கு வெட்கமாகி விட்டது.அவரது பெருந்தன்மை என்னை சுட்டது.

மறுநாள் ரஜினி தன்னோடு பேசிக்கொண்டிருந்தவர்களிடம் "கமலிடம் மன்னிப்பு கேட்க்க போனபோது பகை உணர்ச்சியை மாற்ற மாட்டாரோ என்று நினைத்தேன்.பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் என்று கூறி இருக்கிறார்.அதை கேள்வி பட்டதும் நாம் முந்தி கொள்ளாமல் போனோமே என்று என்னையே நொந்து கொண்டேன் ..



Friday 2 November 2012

DREAM HOUSE -- டேனியல் கரைக் நடித்த த்ரில்லர் படம்


DREAM HOUSE -- டேனியல் கரைக் நடித்த த்ரில்லர் படம் 


இப்போது ஜேம்ஸ் பாண்ட் படம் வந்துள்ளது.அதன் ஹீரோ டேனியல் கிராக் உங்களுக்கு பிடித்தால்,அவரது வேறு படம் ஏதாவது பார்க்கலாம் என்றால்,இந்த படத்தை பார்க்க யோசிக்கலாம்.படம் ஒரு மிஸ்டரி த்ரில்லர் வகை படம்.நீங்கள் இதுவரை (நானும் தான்) டேனியல் கிராகை அடிதடியில் மட்டும் பார்த்து இருந்தால் ,ஒரு மாற்றத்திற்காக இந்த படத்தை பார்க்கலாம்.இதில் கொஞ்சம்(?) நடித்தும் உள்ளார்.

வழக்கமான ஹாரர் படங்களை போல் ஹீரோ தன் குடும்பத்தோடு புதிய வீட்டிற்கு குடி வருகிறார்.அங்கே நடக்கும் சில புதிரான சம்பவங்களுக்கு பின் அந்த வீட்டில் அதற்க்கு முன் இருந்தவன் தன மனைவியையும் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்போது மன நல காப்பகத்தில் இருப்பதாக தெரிய வருகிறது.நாமாக இருந்தால் என்ன செய்வோம் அந்த வீடு வேண்டாம் என்று காலி செய்து வேறு வீடு ஓடி வந்திருப்போம்.ஆனால் இந்த திகில் பட ஹீரோக்கள் அப்படி ஒரு நாளும் செய்ய மாட்டார்கள்.இதிலும் நம் ஹீரோ போலீஸ் உதவியை நாடி அந்த வீட்டில் என்ன நடந்தது என்று கேட்கிறான்.

போலீஸ் ஒரு மாதிரி பூசி மொழுகி  பயப்படாமல் இருக்க சொல்லி அனுப்பி விடுகிறது.அதன் பின் எதிர் வீட்டில் இருக்கும் பெண் தன்னை பார்த்து ஒரு மாதிரி நடந்து கொள்வதை பார்த்து அவளை நாடுகிறான்.அவள் அவன் வீட்டில் நடந்த சம்பவங்களுக்கு காரணமான அந்த ஆளின் பேரை (பீட்டர் வார்டு) சொல்லி , ஒரு மருத்துவமனை பேரை சொல்லி அங்கே அனுப்புகிறாள்.அங்கே செல்லும் நாயகன் காண்பது என்ன? (படத்தில் ஒரு முக்கிய திருப்பம் அங்கே) அங்கே அவன் கண்டது தான் நிஜமா? (இறுதியில் மீண்டும் ஒரு ட்விஸ்ட் ).

இது போல் சில படங்கள் நிறைய வந்திருந்தாலும் சில இடங்களில் வரும் ட்விஸ்ட் படத்தை தனித்து காண்பிக்கிறது.டேனியல் கிராக் ஓகே என்று சொல்லும்படி தான் இருக்கு நடிப்பு.நாயகி மம்மி படத்தில் வந்தவர்.எதிர்  வீடு பெண்ணாக கிங் காங் படத்தில் வந்தவர்.

படம் பிளாப் ஆன படம் தான்.படத்தின் இயக்குனர்,நாயகன் ,நாயகி ஆகியோர் படத்தின் இறுதி வடிவம் பார்த்து அதிருப்தி ஆகி படத்தின் விளம்பர நிகழ்சிகளுக்கு  வரவில்லை.படத்தின் பெரிய திருப்பம் ஒன்று ட்ரைலரில் வந்து விட்டதாலும் பெரிய சறுக்கல்.உங்களுக்கு டேனியல் கிராக் ரொம்ப பிடிக்கும்,ஒரு லீவ் நாளை கொஞ்சம் த்ரில்லான படம் பார்க்கலாம் என்றால் பார்க்கலாம்.இல்லையா எஸ்கேப் .2011 இல் வந்த படம் 1.30 மணி நேரம் ஓடும்.

Tuesday 30 October 2012

LE TROU -- பார்த்தே ஆக வேண்டிய பிரெஞ்சு படம்

LE TROU -- பார்த்தே ஆக வேண்டிய பிரெஞ்சு படம் 

ஒரு படம் உங்களை எவ்வளவு தூரம் படத்தினுள் இழுக்கும்? சரி சிறைச்சாலை பற்றி ஆங்கிலத்தில் நிறைய படங்கள் வந்துள்ளன.PRISON ESCAPE FILMS என்று ஒரு சின்ன GENRE கூட உண்டு.எல்லோருக்கும் தெரிந்த படம்  THE SHAWSHANK REDEMPTION .அதை விட அருமையான PAPILLON,THE ESCAPE FROM ALCATRAZ,THE GREAT ESCAPE (நான் பார்த்தவரையில் ) போன்ற படங்களும் ஒன்று.நான் இப்போது சொல்ல போகும் படம் எல்லாவற்றிற்கும் தலை .இது ஒரு பிரெஞ்சு மொழி படம்.1960 வந்த கருப்பு வெள்ளை படம்.அப்படி என்ன படத்தில்? .படத்தில் நடித்த ஒரு நடிகர் நிஜ கைதியாய் இருந்தவர்.அவர் சிறையில் இருந்து தப்பிய உண்மை அனுபவங்களே படம். 

அந்த நிஜ பாத்திரம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு 1947 இல் தான் சந்தித்த நிகழ்வுகளே படம் என்ற அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது.பிரான்ஸ் நாட்டில் 1947 இல் "ல சாண்டே" என்ற மிக பெரிய சிறையில் ஒரு கைதி கஸ்பர்ட் .மனைவியை கொள்ள முயற்சி செய்த புகாரில் சிறையில் இருக்கிறான்.ஒரு சின்ன தப்புக்காக வேறு ஒரு செல்லுக்கு மாற்ற படுகிறான்.அவன் சென்ற அறையில் ஏற்கனவே 4 பேர் இருக்கின்றனர்.அவர்களிடம் அன்பாக பழகும் கஸ்பரட் தான் சிறை வந்த காரணத்தை சொல்கிறான்.

சில நாட்களுக்கு பின் அந்த நால்வரும் தாங்கள் சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் இருப்பதாக அவனிடம் சொல்கிறார்கள்.ஆர்வம் அடையும் அவன் தானும் வருவதாக சொல்கிறான்.அந்த சிறையில் அறைகளில்  தினமும் அதிகாலையில் ஒரு போலீஸ் வந்து சோதனை இட்டு செல்லும்.அதன் பின் நாள் தோறும் அவ்வபோது ,மீண்டும் இரவு உறங்கும் போது அவர்கள் அறை  கதவை தட்டி கதவு ஓட்டை வழியே பார்க்கும்போது கைதிகக் கை அசைக்க வேண்டும்.இது தான் அங்கே விதி.

முதலில் ஒரு சிறிய  கண்ணாடி அவர்களிடம் கிடைக்கிறது .அதை ஒரு பிரஷ்ஷில்  கட்டி அதை கதவு ஓட்டை வழி வைத்து யாரவது வருகிறார்களா என்று பார்க்க பயன்படுத்தி கொள்கிறார்கள்.பின் சிறையில்  அட்டை பெட்டி செய்யும் வேலை அவர்களின் அறையிலேயே செய்து வருகிறார்கள்.அதற்காக பெரிய அளவில் அட்டைகளை ஒரு மூலையில் அடுக்கி வைக்கிறார்கள்.அவ்வபோது அந்த அட்டைகளை நகர்த்தி கட்டிலின் காலில் இருந்து எடுத்த இரும்பால் தரையை இடித்து குழி தோண்டுகிறார்கள்.

அவர்கள் தோண்டும் மணலை என்ன செய்தார்கள்? உள்ளே வழி அவ்வளோ எளிதாக உள்ளதா? அங்கே வழியில் போலீஸ் இல்லையா? இவர்கள் தோண்டும்போது போலீஸ் இவர்கள் அறைக்கு வரவில்லையா? இரவு போலீஸ்  கதவு தட்டினால் இவர்கள்  கை அசைக்க வேண்டுமே அதற்க்கு ? இப்படி எண்ணற்ற கேள்விகள் வருகிறதா? அப்போது நிச்சயம் படம் பாருங்கள்.நான் மேலே கொஞ்சம் காட்சிகளை சொன்னதே படம் பார்க்கும் ஆவலை தூண்டத்தான்.
கொஞ்சமும் போர் அடிக்காத ஆனால் அழுத்தமான படம் .கிளைமாக்ஸ் எனக்கு கொஞ்சம் திருப்தியில்லை ,இருந்தாலும் எற்றுக்கொளும்படி இருக்கும் .

படத்தை பற்றி சில விஷயங்கள்- படத்தின் இயக்குனர் படத்தை எடுத்து முடித்த 2 வாரங்களில்  மரணம் அடைந்து விட்டார்.பெரும்பாலும் தொழில் முறை நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட படம்.மொத்த  படமும் 10 வாரத்தில் எடுத்து முடிக்கப்பட்டது.படத்தில் இசையே கிடையாது.இதுவரை நீங்கள் இதுபோல் எத்தனை படம் பார்த்திருந்தாலும் இது இன்னும் fresh ஆக இருக்கும்.தவற விட கூடாத படம்.2 மணி நேரம் ஓடும் படம்.

IMDB RATING- 8.4

HIGHLY RECOMMENDED 



Monday 29 October 2012

TRIANGLE (2009) --குழப்பும் ஆங்கில த்ரில்லர் படம்


TRIANGLE (2009) --குழப்பும் ஆங்கில த்ரில்லர்  படம் 



நீங்கள் பெர்முடா முக்கோணம் பற்றி கேள்விபட்டு இருக்கிறீர்களா? அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு கடற்பகுதியே அது.அந்த பகுதியில் போன பல கப்பல்கள் மாயமாய் காணாமல் போய்  உள்ளது.அதை ஆராய சென்ற பறக்கும் விமானங்கள் உள்ளே இழுக்கப்பட்டு காணமல் போயின.அதற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.நீங்கள் "MOMENTO" " THE MACHINIST " போன்ற படங்களின் ரசிகரா? அதற்கும் இந்த படத்திற்கும் சம்மந்தம்.உங்களை குழப்பி அடிக்கும் படம் திரும்ப திரும்ப ஒவ்வொரு காட்சியிலும் உங்களுக்கு எதோ ஒன்றை காண்பித்து சென்று அதை பின்னர் தெளிவு படுத்தும்( எனக்கு தெளியவில்லை.) 

கதையை எப்படி சொல்லி அறிமுக படுத்துவது என்று தெரியவில்லை.சரி பாயிண்ட் பை பாயிண்ட் என்று போவோம்.
1.ஒரு பெண்.அவளுக்கு மன குறைபாடோடு ஒரு சின்ன பையன்.
2.அவனை பள்ளியில் விட்டு அவள் ஒரு கப்பல் பயணத்திற்கு சில நண்பர்களோடு போகிறாள்.
3.நடுக்கடலில் அவள் சென்ற கப்பல் விபத்து ஏற்பட, அங்கே வரும் ஒரு பெரிய கப்பலில் எல்லோரும் ஏறுகிறார்கள்.
4.கப்பல் முழுக்க தேடியும் யாரும் காணோம்.ஓட்டுபவரும் இல்லை.
5.நாயகி தான் இந்த கப்பலில் ஏற்கனவே வந்தது போல் உள்ளதாகவும் அந்த இடங்களை உணருவதாகவும் சொல்கிறாள்.
6.அடுத்தடுத்து ஒவ்வொருவராக கொள்ள படுகிறார்கள்.இறப்பவர்கள் இவளை கொலையாளி என்று சொல்லி இறக்கிறார்கள்.
7.புரியாமல் சுற்றி வரும் வரும் இவள் மீண்டும் தாங்களே இந்த கப்பலில் ஏறுவதை பார்க்கிறாள்.
8.மீண்டும்  பாயிண்ட் 4- பாயிண்ட் 7
9.கடைசியில் திரும்ப பாயிண்ட் 1 முதல் ஆரம்பம் .

எனக்கு உண்மையில் படம் தெளிவாக என்ன நடக்கிறது என்று புரியவில்லை.ஆனால் நல்ல படம் தான்.எனக்குதான் புரியவில்லை.அது மட்டும் எனக்கு புரிந்து போனது.குழப்பறேனா? நான் படம் பார்த்து ரொம்ப குழம்பி போய் இருக்கேன்.இது என்ன படம் ,இது கூட புரியலையா என்று சிலர் கேட்கலாம்.இருந்தாலும் நான் அவ்வளதான்.

படமாக்கப்பட்ட இடங்கள் (ஆஸ்திரேலியா ) அருமை.அந்த கப்பல் ,படத்தின் கேமரா எல்லாமே பாராட்டும்படி உள்ளது.
படத்தை பற்றி சில விஷயங்கள் :

99 நிமிடங்கள் ஓடும் படம் 2009 இல் வெளி வந்தது.
படத்தை எழுதியவர் திரைகதை எழுதி முடிக்க 2 ஆண்டுகள் ஆனதாக கூறியுள்ளார்.
விமர்சகர்களால் பலத்த பாராட்டை பெற்றாலும் படம் வசூலில் சுமார்தான்.
ஏறக்குறைய எல்லா விமர்சனங்களும் சராசரியாக 4 OUT OF 5 RATING கொடுத்துள்ளது.
ROTTEN TOMATOES -81% FRESH 
IMDB- 6.8 

இப்போது வரும் எளிதில் யூகிக்க கூடிய படங்கள் பார்த்து வெறுத்து போய் உள்ளீர்களா?  MIND TWISTING வகை படங்கள் பிடிக்குமா ? நிச்சயம் பாருங்கள்.

TIME CRIMES என்று ஒருபடம் சென்ற வருடம் பார்த்தேன்.அதுவும் எனக்கு புரியாத படம் தான்.ஒரு நண்பரிடம் கேட்டபோது கொஞ்சம் கவனித்து பார்த்தல் புரியும் என்றார்.

Thursday 25 October 2012

பிட்சா : பார்த்தே தீர வேண்டிய த்ரில் படம்


பிட்சா : பார்த்தே தீர வேண்டிய த்ரில் படம் 



தமிழில் திகில் த்ரில்லர் படங்கள் ரொம்ப குறைவு.விரல் விட்டு எண்ணி விடலாம்.பெரும்பாலும் ஆங்கில படங்களின் தழுவல் படங்களே அதிகம்.அதே கண்கள் ,யாவரும் நலம் போன்ற மிக சில படங்களே சொந்த சரக்காக வந்த படங்கள்.நான் கொஞ்சம் எதிர்பார்த்த அம்புலி கூட முழுதும் எனக்கு திருப்தி தரவில்லை.இந்த நிலையில் பிட்சா படம் ஒரு த்ரில்லர் படம் என்று கேள்வி பட்டேன்.இருந்தாலும் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தேன்.ட்ரைலர் கவனிக்கும்படி இருந்தாலும் அதை நம்பி இப்போதெல்லாம் படம் பார்க்க முடிவதில்லை.படம் வந்த அடுத்த நாள் பார்த்த எல்லோரும் படம் சூப்பர் என்று சொல்ல அதுவும் படித்த ப்ளாக் எல்லாம் கதையை சொல்லாமல் விட்டதால் படம் பார்க்கும் ஆவல் கூடி விட்டது.ஒரு வழியாக பார்த்துவிட்டேன்.

சமீப காலங்களில் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்றே சொல்லவேண்டும்.சும்மா மிரட்டி இருக்கிறார்கள்.நானும் கதை சொல்ல போவதில்லை.என்ன விஷயம் என்றால் மற்ற த்ரில்லர் படம் என்றால் ஒரு விஷயத்தை சொல்லி இறுதியில் என்ன நடக்கிறது என்பதை சொல்லாமல் விட்டால் போதும்.ஆனால் இந்த படம் கதை என்று ஆரம்பித்தால் படத்தின் ஆச்சர்யம் போய்விடும்.

படம் மெதுவாக கொஞ்சம் சோம்பலாகதான் தொடங்குகிறது.ஆனால் ஹீரோ தன் முதலாளி வீட்டிற்கு சென்றதும் அங்கே சூடு பிடிகிறது.அதோடு படம் முடியும் வரை உங்களை அடுத்து என்ன என்று யோசிக்க செய்துகொண்டே இருக்கும்.சில படங்கள் இடைவேளை எப்படா வரும் என்று இருக்கும்.இந்த படத்தில் இடைவேளை விட்டதும் அடச்சே என்று திட்டிகொண்டேன்.இடைவேளை நேரத்தில் கூட படத்தில் இருந்து கவனம் போகவில்லை.

படத்தில் பணி புரிந்த எல்லோருக்கும் இந்த படம் ஒரு லைப்.அசத்தி  இருக்கிறார்கள்.கேமரா ,இசை சூப்பர்.இயக்குனர் கார்த்திக் இதுவரை யாரிடமும் உதவியாளரை இருந்ததில்லை.குறும்படங்களில் கவனம் பெற்று அதை சினிமாவாகவும் செய்து காட்டி இருக்கிறார்.ஒரு வெல்கம் .

பேய்களை நம்பாத ஹீரோ .அவனை பயமுறுத்த நாயகி செய்யும் வேலைகள் தான் படம் இறுதியில் எல்லாம் நாடகம் .WAIT WAIT. .இது ட்ரைலர் பார்த்து நான் நினைத்த கதை. உண்மையில் நாயகி என்று ஒருவள் இல்லை.நாயகன் மன அளவில் பாதிக்க பட்டவன் .அவனின் பேய் கற்பனையே படம்.இது படம் ஓடி கொண்டிருக்கும் போது என் மனதில் வந்த கதை. மேல் சொன்ன எதாவது ஒன்றை நீங்கள் படத்தின் கதையாக நினைத்திருந்தால் அதை மறந்திருங்கள்.

                     படத்தை பற்றிய ஒரு சின்ன TAGLINE: ஒவ்வொருவருக்கும் ஒரு வீக்னெஸ் .பணம்,பெண் பேய் ,கடவுள் இப்படி.

இது படத்தின் சஸ்பென்சை உடைக்காது என்று நினைக்கிறன்.படத்தை மினி உதயம் அரங்கில் பார்த்தேன்.படம் HOUSEFULL . நான் ப்ளாக்கில் 70 ருபாய் டிக்கெட்டை 130 கொடுத்து வாங்கி பார்த்தேன்.படம் முடிந்து வரும் போது இந்த படத்தை போய்  ப்ளாக்கில் பார்த்தோமே என்று கொஞ்சமும் இல்லை.நம் ரசிகர்கள் தமிழில் த்ரில் படம் பார்த்து பழக்கம் இல்லாததால்,அரங்கில் வெறுப்பேற்றி விட்டார்கள்.கூட கூட கமெண்ட்.படத்தின் ஆரம்ப காட்சி கருப்பு வெள்ளையில் ஒலி குறைவாக நடக்கும்.அதை கேட்கவிடாமல் ரொம்பவும் கடுப்பேற்றி விட்டார்கள்.இருந்தாலும் படத்தை ரசிக்கிறார்கள்.இது போல் இன்னும் நிறைய படங்கள் தமிழில் வர வேண்டும்.எனக்கு த்ரில் படங்கள் பிடிக்கும் என்பது தெரிந்திருக்கும்.

Tuesday 23 October 2012

கமலஹாசன் எழுதிய "நாயகன்" திரைப்பட நினைவுகள்


கமலஹாசன்  எழுதிய "நாயகன்" திரைப்பட  நினைவுகள்  


தமிழ் சினிமாவில் நாயகன் தவிர்க்க முடியாத படம்.அந்த படம் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.அதன் பொருட்டு அந்த பட அனுபவங்களை  நடிகர் கமல்ஹாசன் 'தி ஹிந்து ' ஆங்கில தினசரியில் அக்டோபர் 21 ஞாயிறு ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அதன் தமிழாக்கம்..

நாயகன் படம்  டைம் இதழின் சிறந்த 100 படங்களுள் ஒன்றாக தேர்வு செய்யபட்டதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.ஒரு வித்யாசமான படம் எடுக்க நினைத்தோம் அவ்வளவுதான்.அதிகம் படிக்காததால் நான் எப்போதும் எழுத்தாளர்களும் ,சிந்தனையாளர்களும் சூழ இருப்பேன்.அப்படி சந்தித்த ஒரு நண்பர் தான் சுப்பு என்கிற சுப்ரமணியம்.பின்னர் மணிரத்னம் ஆனார்.எனக்கு நடிகர் கிட்டி மூலம் அறிமுகம் ஆனவர் தான் மணிரத்னம்.கிட்டி அப்போது சோழா செர்டான்  ஹோட்டலில் மேலாளராக இருந்தார்.நாங்கள் அவரை அப்போது சோழா கிருஷ்ணமூர்த்தி என்று அழைப்போம்.மணி அப்போதும் அமைதி ஆனவர் தான்.நாயகன் தொடங்கப்பட்ட பின் தான் மணி "வீனஸ் " pictures  ரத்னம் அவர்களின் மகன் என்பதே.அதுவரை அவர் தன்னை வெளிபடுதிக்கொண்டதே இல்லை.எனக்கு அதுவரை அவரை பைனான்சியர் ஜி.வி.அவர்களின் சகோதரர் என்றே தெரியும்.

அப்போது நான் ராஜபார்வை எழுதிக்கொண்டிருந்த நேரம்.1980.மணி திரை கதை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார்.JOSEPH HAYES  எழுதிய THE LONG DARK NIGHT நாவலை  விரும்பி படித்தார்.அது போல் ஒரு கதை எழுத விரும்பினார்.நாங்கள் பல கதைகளை விவாதித்தோம்.நாங்கள் FRANSIS FORD COPPOLA வின்  THE GODFATHER பட ரசிகர்கள்.எத்தனை நாள்  தான் தமிழ் பட மறை உலக வில்லன்கள்  கட்டம் போட்ட சட்டையும் கழுத்தில் கை குட்டையை கட்டிக்கொண்டும் வீரப்பா  போல் சிறிது கொண்டும் இருப்பார்கள் என்று நாங்கள் கேட்டு கொள்வோம்.

அப்போது மணி தனது முதல் படத்தை (பல்லவி அனுபல்லவி)கன்னடத்தில் இயக்குவதாக சொன்னார்.நான் ராஜபார்வையில் பிசியாக இருந்தேன்.அந்த நேரம் ஹிந்தி படங்களில் வேறு நடிக்க துவங்கி இருந்தேன்.அதனால் நானும் மணியும் சேர முடிய வில்லை.ஆனால் நேரம் கிடைத்தால் பேசுவோம்.1986 இல் விக்ரம் படம் முடிந்த பின் அந்த படம் மணிரத்னம் இயக்கி இருக்க வேண்டிய படம் என்று எனக்கு தோன்றியது.IT WAS HIS CUP OF TEA.பட தோல்விக்கு பின் என்ன ஆனது என்று என்று என்னை கேட்டார் மணி.ஏன் என்றால் விக்ரம் பட கதை நான் முன்பே அவரிடம் கூறி இருந்தேன்.அதற்கும் படத்திற்கு நிறைய மாற்றம்."கமல் ,சுஜாதா இருவரின் அறிவும் கோடம்பாக்கத்தில் கரைந்துவிட்டதாக பதில் சொல்லி "இது உங்களுக்கும் நேரலாம் என்றும் சொன்னேன்.

சில மாதங்களுக்கு பின் தயாரிப்பாளர்  முக்தா ஸ்ரீனிவாசன் (அவர் தயாரிப்பு இயக்கத்தில் சிம்லா ஸ்பெஷல் படம் ஏற்கனவே நடித்துள்ளேன்) என்னிடம் கால்ஷீட் கேட்டு வந்தார்.நான் மணிரத்னம் பெயரை இயக்குனராக சொன்னேன்.அவருக்கு ஆச்சர்யம் காரணம் வழக்கமாக கதாநாயகியை தான் ஹீரோக்கள்  பரிந்துரைப்பார்கள்.நான் ஒரு இயக்குனரை  பரிந்துரைத்தேன்.மணி இரு கதைகளை எனக்கு சொன்னார் ஒரு கதை GANGSTER கதை.பம்பாய் களமாக  கொண்டு நடக்கும் கதை என்றும் சொன்னார்.நான் அந்த கதை தேர்வு செய்தேன் காரணம் பம்பாய் தளம் என்றால் தேசிய அளவில் கவனிக்கபடும் என்று நினைத்தேன்.ஆனால் முக்தா பிலிம்ஸ் சிறிய பட்ஜெட்  படம் எடுத்து பழக்கப்பட்ட நிறுவனம்.தயாரிப்பாளர் பம்பாய் என்றவுடன் மறுத்தார். என் நடிப்பில் ஒரு படம் அவருக்கு  ஒரு 5 லட்சம் லாபம் பார்க்க வேண்டும் அவ்வளவுதான்.அவர் அதுவரை அப்படிதான் படங்கள் எடுத்து வந்தார்.கலையாக கருதாமல் படம் வியாபாரம் மட்டுமே என்று நினைத்துவிட்டார்.நாங்கள் படம் முழுதும் பம்பாயில் எடுக்க போவதில்லை.சில முக்கிய காட்சிகள் மட்டுமே ,என்று சொன்னதும் அரை மனதுடன் சம்மதித்தார்.

பின் நாங்கள் ACTION காட்சிகள் உலக தரத்தில் எடுக்க முடிவு செய்தோம்.அதற்கென பட்ஜெட்டில் 12 லட்சம்  ஒதுக்கினோம் .அதுவரை தமிழ் சினிமாவில் அப்படி ஒதுக்கியது கிடையாது.  JIM ALLEN என்பவரை இங்கிலாந்தில் இருந்து வரவழைத்தோம்.அவர் அதற்கு முன் ஷோலே போன்ற இந்திய படங்களில் பணி புரிந்துள்ளார்.அனால் தயாரிப்பாளர் அவரை 3 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த சம்மதித்தார்."இதற்கெல்லாம் இப்படி செலவு செய்ய கூடாது,ஹிந்தி சினிமா உன்னை கெடுத்து விட்டது என்று என்னிடம் சொன்னார்.அந்த 3 நாட்களில் அவர் கொடுத்த ஐடியாக்களை குறிப்பெடுத்துகொண்டு அவற்றை பயன்படுத்தினோம்.கார் முன்புற கண்ணாடியில் இரும்புக்கம்பி சொருகி சண்டை காட்சி எடுக்க திட்டமிட்டோம் .அனால் தயாரிப்பளர் காரை நிஜமாக சேதபடுத்த ஒத்துக்கொள்ளவில்லை.பின்னாளில் தேவர் மகன் படத்தில் அதை பயன் படுத்தி கொண்டேன்.படத்தில் மேக்கப் செய்ய தனி பட்ஜெட் கிடையாது.என் மேக்கப் குரு MICHAEL WESTMORE அவர்களிடம் பேசினேன்.அதற்குமுன் "ஒரு கைதியின் டைரி " படத்திற்காக அவரோடு பணிபுரிந்துள்ளேன்.ஒரு உதவியாளர் மட்டும்' கொண்டு நாமே கண்ணாடி முன் ஒப்பனை செய்து கொள்ள அவரிடம் பயிற்சி பெற்று இருந்தேன்.அப்போது  சரிகா உதவியுடன் நானே மேக்கப் போட்டுக்கொண்டேன்.நான் ஏற்கனவே வயதான வேடத்தில் நடித்துள்ள கடல் மீன்கள்,சலங்கை ஒலி போன்ற படங்களை பார்த்துள்ள மணிரத்னம் ,அந்த படங்கள் போல விக் வைக்காமல் நிஜமாகவே தலை முடியை அட்ஜஸ்ட் செய்ய விரும்பினார்.நானும் படத்தை காட்சி வரிசைப்படி எடுத்தால் அதை செய்யலாம் என்று சொன்னேன்.படத்தில் தெரியும் வழுக்கை உண்மையாக என் முடியை அப்படி சீர் செய்யப்பட்டது.அது மட்டும் போதாது என்று ஒரு பல் மருத்துவரை கொண்டு வாயில் ஒரு பொருளை வைத்து முகவாய் ,தாடைகள் அகலமாக தெரியும்படி செய்தோம் .

நாங்கள் ஒரு பெரிய விஷயத்தை,புதிதாய் செய்கிறோம் என்று உணர்ந்தோம்.நான்,மணி,பி.சி .ஸ்ரீராம்,தோட்டாதரணி ஒரு குழுவாக கால்ஷீட் எல்லாம் பார்க்காமல் உழைத்தோம்.முழுதும் பம்பாயில் எடுக்க முடியாததால் வெளிகாட்சிகள் மட்டும் அங்கே போய்  எடுத்தோம்.படம் நன்றாக வளர்ந்து வந்தது.ஒரு நாள் ,வேலு நாயகரின் மகன் இறந்து விட்ட காட்சி.நாங்கள் அந்த காட்சியை ஒத்திகை பார்த்தோம்.நான் இந்த காட்சியில் கொஞ்சம் பில்ட்அப்  இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்,அதாவது மற்றவர்கள் முதலில் அழுது கொண்டிருப்பது போலும் அங்கே வரும் வேலு நாயக்கர் எல்லோரிடமும் என்ன என்று விசாரித்தவாறு வந்து மகனின் பிணத்தை பார்த்தால்  நன்றாக இருக்கும் என்று மணியிடம் சொல்ல அவரும்  ஒப்புக்கொண்டார்.நான் அந்த காட்சிக்கு தயாராகி வந்த போது மணி,ஸ்ரீராம் இருவரும் வருத்தமாக இருந்தார்கள்.விசாரித்த போது  தயாரிப்பாளர் அன்றைய பிலிம் கோட்டா முடிந்து விட்டதென்றும் அடுத்து பிலிம் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று சொன்னார்.அந்த நாளில் பிலிம்  வேஸ்ட் ஆவதை குறைக்க அப்படி செய்வது தான் பழக்கம்.என்னால் தாங்க முடியாமல் என் அலுவலகத்திற்கு போன் செய்து 20 நிமிடத்தில் பிலிம் வரவைத்தேன்,அந்த 20 நிமிடத்தில் நான் அழ ஆயத்தமானேன்.உண்மையில் அந்த சூழ்நிலை என் குழந்தை இறந்த மன நிலையை உருவாக்கியது.அந்த காட்சியில் சிறப்பான நடிப்பிற்கு தயாரிப்பாளரின் பங்கும் உண்டு.அதற்காக அவர் ரொம்ப கொடியவர் என்று சொல்ல வர வில்லை.அவர் அந்த காலங்களில் அதுபோல் பழக்கபட்டிருந்தார்.
மணிரத்னதிற்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை.அந்த நேரத்தில் நானும் ரொம்ப களைப்பு அடைந்திருந்தேன்.படம் முடியவேண்டும் என்று நினைத்தேன்.நாங்கள் பம்பாய் சென்றிருந்தபோது வரதராஜ முதலியாரை(அவர் வாழ்கையை சித்தரிதே நாயகன்  படம் உருவானது) சந்தித்து உரையாடினோம்.அவரிடம் மணி உங்கள் வாழ்கை எப்படி முடிய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.அமைதியாக மருத்துவமனையில் அது நடக்க விரும்புகிறேன் என்று பதில் சொன்னார்(பின்னாளில் அப்படியே இறந்தார் ).போலீஸ் சாட்சி இல்லாததால் அவரை விடுதலை செய்யும்.அதன் பின் வேலு நாயக்கரை யாரோ அடித்துவிட அதனால் ஏற்படும் கலவரத்தை பயன்படுத்தி போலீஸ் அவரை சுட்டுகொல்வதாக மணி முடிக்க விரும்பினார்.

ஹோலி பாடலில் நான் மணியிடம் வேலுநாயக்கர் ஆடமாட்டார் என்று சொன்னேன்.அவரும் ஒப்புகொண்டார்.அந்த காலங்களில் நான் நடனம் ஆடாததை ஒப்புக்கொள்ள எந்த இயக்குனரும் சம்மதிக்க மாட்டார்கள் .சிகப்பு ரோஜாக்கள் எடுக்கும் போது பாரதிராஜாவிடம் கூட நான் அந்த பட நாயகன் ஒரு சைக்கோ கொலைகாரன்.அவன் நடனம் ஆடினால் சரிவராது என்று சொல்லிப்பார்த்தேன்.அவர் இது நாயகி கனவுப்பாடல்(நினைவோ ஒரு பறவை) என்று நான் சொன்னதை மறுத்துவிட்டார்.மணி ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி.இப்படி பல தடைகளை தாண்டி எடுத்து முடிக்கப்பட்டது படம்.நான் சிரித்தால் தீபாவளி பாடலில் நான் பார்த்த ஒரு பார்வை ரொம்பவும் அன்னியமாக தோன்றியதாகவும் நம் இந்திய முறையில் நடிப்பை வெளிப்படுத்துமாறும் என்னை கேட்டுக்கொண்டார்.இப்படி சின்ன விஷயங்களிலும் ரொம்பவும் கவனித்து  சொன்னதால் என்னால் அந்த நடிப்பை தரமுடிந்தது.நாயகன்  படம் என்னை இனி மசாலா வணிக படங்களில் நடிக்க கூடாது என்ற முடிவை எடுக்க வைத்தது.நான் நடு  வயதை அடைந்திருந்தேன் .இனி இப்படி பட்ட வேடங்களில் நடிக்காமல் இன்னும் எப்போது நடிப்பது என்று எனக்குள் கேட்டு கொண்டேன்.படம் முடிந்தவுடன் அந்த செட் கலைக்கபட்டவுடன் சரிகாவுடன் திருப்தியாக பேசிக்கொண்டே நடத்து இன்னும் நினைவில் உள்ளது.

படம் சவேராவில் சிறப்பு காட்சி பார்த்தோம்.ஒருவர் படம் முடிந்து தயாரிப்பாளர் காலில் விழுந்து அழுதார்.நான் தயாரிப்பாளரிடம் இந்த படத்திற்கு விருதுகள் வாங்குவீர்கள் என்று சொன்னேன்.அதற்க்கு அவர் லாபம் பார்க்கவே படம் எடுத்ததாகவும் ஆனால் படத்தின் புதிய தொழில்நுட்ப விஷங்கள் மக்கள் ஏற்பார்களா என்று பயந்தார்.அவர் லாபம் அடையாத படத்தை நான் அவருக்கு பரிந்துரை செய்ததாக  வருத்தப்பட்டார் .அவரிடம் இருந்து அந்த படத்தை வாங்கி கொள்ள கூட நினைத்தேன்.பின்னர் ஜி.வி வாங்கி வெளியிட்டார்.படம் வெளிவந்து ஹிட் ஆனது.அதன் பின் அது ஸ்டைல் ஆனது.ஹீரோக்கள்  ஜெல் வைத்து அழுத்தி தலை வாருவதை ஆரம்பித்தனர்.படத்தின் வெள்ளி விழா நேரத்தில் தயாரிப்பாளரின் சகோதரர் இறந்துவிட்டார்.எங்கள் மொத்த  பட குழுவும் அவர் வீட்டிற்கு போய் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம்.அதனால் தயாரிப்பாளரோடு எந்த பிரச்னையும் இல்லை.அவர் எங்களை இன்னும் சுதந்திரமாக படம் எடுக்க விட்டிருந்தால் மணி இன்னும் சிறப்பாக எடுத்திருப்பார். பின்னாளில் அவருக்கு இதய நோயும் இன்னும் காலம் கழித்து வந்திருக்கும்.என்னிடம் பலர் கேட்க்கும் கேள்வி மணிரத்னத்தோடு மீண்டும் படம் எப்போது? இப்போது ரொம்பவும் எதிர்பார்ப்பு உள்ளது .

Sunday 21 October 2012

BHOOT RETURNS -ஹிந்தி திகில் பட விமர்சனம் ---சரக்கு தீர்ந்து போன ராம் கோபால் வர்மா.

BHOOT RETURNS -ஹிந்தி திகில் பட விமர்சனம் ---சரக்கு தீர்ந்து போன ராம் கோபால் வர்மா.


ராம் கோபால் வர்மா .ரங்கீலா படம் மூலம் அசத்தலாக ஹிந்தியில் நுழைந்து சத்யா,கம்பெனி ,சர்கார் போன்ற பல புதுமையான படங்களை தந்து வழக்கமான மூன்றை மணி நேர குடும்ப ஹிந்தி பட பார்முலாவை தகர்த்து பல தளங்களில் ,பல உண்மை சம்பவங்களை ,பல நிஜ கதா பாத்திரங்களை தன்  படங்களில் உலாவ விட்டு கலக்கி கொண்டிருந்தவர். அமிதாப் சில வருட இறக்கங்களுக்கு பின் வெற்றி பெற துவங்கிய பின் மீண்டும் சர்கார் படம் மூலம் மாஸ்  சேர்த்தவர்.


இப்படி தான் இவர் படம் இருக்கும் என்று கணிக்க முடியாதபடி படம் எடுப்பவர்.படம் எடுப்பது குடிசை தொழில் போல என்று டிஜிட்டல் கேமரா ,ஒரு ஐந்து பேர் பணம் போடுவது என்று நடிகர்களுக்காக காத்திராமல் கிடைத்தவர்களை கொண்டு படம் எடுத்து பேச வைத்தவர்.மேலும் தென் இந்திய தெலுங்கு ,கன்னட ,தமிழ் நடிகர்களை தன ஹிந்தி படங்களிலும் பயன் படுத்தி அவர்களுக்கும் அங்கே ஒரு முகவரி தந்தவர்.தன்  வெளிபடையான பேச்சு ,நடிகர்களை பற்றிய விமர்சனம்,குடும்ப உறவுகள் பற்றி தன் எண்ணம் என்று எதற்கும் அஞ்சாமல் தான்  நினைத்ததை சொல்பவர்.ஹிந்தி சினிமாவில் செல்லமாக "ராமு ".

சில வருடங்களுக்கு முன் 'பூத் ' என்று ஒரு பேய் படம் எடுத்தார்.ஹிட் ஆன படம்.அதை தமிழில் நம்ம பிரசாந்த் "ஷாக் " என்று ரீமேக் செய்தார்.இப்போது ராமுவுக்கு தொட்டதெல்லாம் காலி ஆகும் நேரம்.வரிசையாய் அடி.இருந்தாலும் சராமரியாக படம் எடுத்து தள்ளி கொண்டிருக்கிறார்.அந்த படங்கள் ஓடுவதும் இல்லை.கடைசியாக அவர் படம் எது ஹிட் என்று அவருக்கே மறந்து போய் இருக்கும்.இப்போது அவருக்கு ஹிட் தேவை.என்ன செய்வது என்று யோசித்தவர்,தன்  ஹிட் படமான பூத் படத்தின் இரண்டாம் பாகம் என்று எடுத்துள்ளார்.ஏதாவது ஒரு கன்றாவியை எடுத்து அதற்க்கு எப்போதோ ஓடிய தன்  ஹிட் படத்தின் பேரை போட்டால் கல்லா நிரம்பிவிடும் என்று நினைத்து விட்டார்.(இங்கே நம் பில்லா 2 உங்களுக்கு நினைவுக்கு வரணும் ).

ஒரு பேய் வீடு .
அங்கே வரும் குடும்பம்.
அவர்கள் குழந்தை கண்ணுக்கு மட்டும் தெரியும் பேய்.
அதனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபரீதங்கள்.
இறுதியில் முடிக்க கூடாது அந்த பேய் எங்கோ மீண்டும் செல்வது போல் முடிக்க வேண்டும் .
ஒரு பேய் படம் ரெடி.

கொஞ்சமும் மாறாமல் அதே கதை தான்.என்ன கொஞ்சம் இந்திய சினிமாவிற்கு புதிதாய் cctv  அந்த வீட்டில் இணைத்து பேய் உலாவுவதை காட்டுகிறார்கள்.
நான்கே நடிகர்கள்.இரண்டு குழந்தைகள்,ஒரு பொம்மை .படத்தில் நிறைய நேரம் யாரவது ஏதாவது சத்தம்  கேட்டு வீட்டில் இருட்டில் உலாவுகிறார்கள்.தேவைக்கு அதிகமாய் சவுண்ட்என்ஜினியர் சத்தம்  கொடுத்துள்ளார்.ஒரே ஆறுதல் பாடல் ,காதல் என்று எதுவும் இல்லாமல் ஒன்றரை மணி நேரத்தில் படத்தை முடித்தது .ராம் கோபால் வர்மாவிடம் சரக்கு தீர்ந்து விட்டது (நம்ம மணிரத்னம் போல ) என்று நினைக்க தோன்றுகிறது  .

Friday 19 October 2012

மாற்றான் படத்தில் என்ன பிரச்சனை?


மாற்றான் படத்தில் என்ன பிரச்சனை?

முந்தைய கே.வி.ஆனந்தின் படங்களான அயன்,கோ இரண்டுமே எனக்கு பிடித்த படங்கள்.ஒரு கதையை லாஜிக் அது இது என்று மற்ற விஷயங்களை பற்றி யோசிக்க விடாமல் பரபர திரை கதையால் அதே நேரம் ஹரி படம் போல் வீண் பரபரப்பு இல்லாமல் இளமை ததும்பும் வசனங்களோடு கொஞ்சம் விரசமான வசனங்களோடும் ,பாடல்களை வித்யாசமான இடங்களில் படமாக்குவதும் என்று ஒரு ஸ்டைல் ஏற்படுத்தி கொண்டவர்  கே.வி.ஆனந்த்.அவரது கவனிக்க படாத படமான கனா கண்டேன் படமே நல்ல படம் தான் .சூர்யா தற்போதைய தமிழ் சினிமாவின் விராத் கோஹ்லி .ஹிட் பாடல்களுடன் ஹாரிஸ் ஜெயராஜ் என ஜோராக களம் இறங்கிய மாற்றான் வெள்ளி கிழமை முதல் பதிவுகளில் கிழித்து தொங்கவிடபட்டு கொண்டு இருக்கிறது.நான் ஏற்கனவே இந்த படம் திரை அரங்கில் பார்க்க முடிவு செய்தபடியால் அதன்படி சென்றேன்.முக்கால் வாசி அரங்கம் காலியாக இருந்தது.படம் வந்து ஐந்தாவது நாள் .

ஆனால் படம் அந்த அளவு மோசம் இல்லை என்றே சொல்வேன்.ஆனால் நிச்சயம் எதோ குறைகிறது .கதை வலுவில்லை .இந்த கதைக்கு ஒட்டி பிறந்த மேட்டர் எல்லாம் தேவை இல்லை.ஆனால் ஆனந்த் இந்த ஒட்டி பிறந்த ரெட்டை விஷயத்தை முதலில் வைத்து கொண்டு பிறகே அதற்க்கு ஏற்றாற்போல் இந்த கதை உருவாக்கி உள்ளார் என்பதை அவர் படம் தொடர்பாக கொடுத்த பேட்டிகளில் மூலம் அறியலாம் .

படத்தின் நீளம் பெரிய குறை.படம் முடிவதற்குள் நிறைய விஷயங்கள் ஒரே அடியாக நிறைய நமக்குள் அழுத்த படுகிறது.ஒரு கதை இயல்பாக நம்முள் தொடருவதற்கும் ஒரு விஷயத்திற்கு கதை பண்ணுவதற்கும் இருக்கும் வித்யாசத்தை இந்த படம் காட்டிவிட்டது.கனா கண்டேன் -2005,அயன்- 2009,கோ-2011.இப்படி ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் நிறைய நேரம் எடுத்து அதை சீர்படுத்தி எடுத்த ஆனந்த் இதில் கோ முடித்த கையேடு அவசரமாக களம் இறங்கி  விட்டாரோ ? 

தன்  பட ஹீரோக்கள் வகிடு எடுத்து தலை வாரி நெற்றியில் மூன்று முடிகளை விட வேண்டும் என்பது வரை கவனமாக பார்க்கும் ஆனந்த்  திரை கதையிலும் இன்னும் உழைத்திருக்கலாம்.

Tuesday 2 October 2012

தாண்டவம் : படதேர்வில் மீண்டும் சறுக்கிய விக்ரம்


தாண்டவம் : படதேர்வில் மீண்டும் சறுக்கிய விக்ரம் 

படம் மொக்கை என்று தெரிந்தே இந்த படத்திற்கு போனேன்.காரணம் தெரியவில்லை.பதிவர் நண்பர் ராஜ் சொன்னது போல் மூணு மாதம் கழித்து  விஜய் டி.வியில் போடும்போது பார்த்திருக்கலாம்.விக்ரம் மீண்டும் படதேர்வில் சறுக்கி இருக்கிறார்.அவரை சொல்லி குற்றமில்லை.தெய்வ திருமகள் எடுத்த இயக்குனருடன் என்பதால் ஓகே சொல்லி இருப்பார்.தெய்வ திருமகள் சீன் பை  சீன் IAM SAM ரெடி ஆக இருந்தது.

படத்தின் கதை இந்நேரம்  எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.கடந்த மூன்று நாட்களாக எல்லா ஊடகங்களிலும் இந்த பட விமர்சனம் தான் ஓடுது அதனால் நான் அதற்குள் போக போவதில்லை.படத்தின் பிளஸ் ,மைனஸ் இவை மட்டுமே பார்க்கலாம்.

படத்தின் பிளஸ்; 
விக்ரம் : கடும் உழைப்பு .பார்வை இல்லாதவரின் உடல் மொழி அப்படியே .WELL DONE.
ECHOLOCATION என்ற தமிழுக்கு புதிய விஷயம் .
இசை 

மைனஸ் :
கதை : எளிதில் யூகிக்க கூடிய ,திருப்பங்கள் அற்ற கதை.
திரைக்கதை ( படம் கொஞ்சம் கூட நகரவே மாட்டேன் என்கிறது)
எல்லோரும் ஏன் ரொம்ப மெதுவாக பேசுகிறார்கள்.? அதுவும் விக்ரம் கண்  தெரியும் போது கூட அப்படியே தான் பேசுகிறார். (கண் தெரியாத போது சோகத்தில் இருக்கிறார்)
அனுஷ்கா -அழகாகவே இருக்கிறார்.ஆனால் முத்திபோய் மூணு குழந்தைகளுக்கு அம்மா ஆன ஆண்டி போல் இருக்கிறார்.
சந்தானம்: ரொம்ப பிஸி ஆக இருக்கும் அவரை போய் ஏன் இந்த வேடத்திற்கு ? சுத்தமாக ஒன்றும் இல்லை.இதற்க்கு தெய்வ திருமகள் படத்தில் அனுஷ்காவின் தோழியை லவ் பண்ணும் கிஷோரை கூட நடிக்க வைத்திருக்கலாம்.
படத்தின் நீளம் .
வேகம்: தொடக்கத்தில் ஆமை வேகத்தில் நகரும் படம் ,கிராமத்து காட்சி கொஞ்சம் செல்ல டெல்லி வந்ததும் படுத்து லண்டனில் தூங்கி விடுகிறது.


மொத்தத்தில் செண்டிமெண்ட் படமான தெய்வ திருமகள் படத்தையே ஓரளவு பார்க்கும்படி நகர்திசென்ற விஜய் ,த்ரில்லர் படம் என்று சொல்லி இப்படி இழு இழுவென இழுத்துவிட்டார்.கொஞ்சம் கூட வொர்த் இல்லாத படம் .பதிவர் ராஜ் சொன்னதையே வழி மொழிகிறேன்.பார்க்க விருப்பம் உள்ளவர்கள் விஜய் டி.வியில் போடும் வரை காத்திருக்கலாம்.

இந்த ஆண்டு என்ன ஆச்சு ? ஓடும் என்று பெரிதாக எதிர்பார்க்க பட்ட அரவான்,மூணு,சகுனி,பில்லா 2,முகமூடி என எல்லா படங்களுமே ஏமாற்றி விட்டது.இன்னும் இந்த ஆண்டு மிச்சம் இருப்பது துப்பாக்கி,மாற்றான் மட்டுமே.விஸ்வரூபம் இந்த ஆண்டு வெளி வரும் என்று நான் நினைக்கவில்லை.பார்க்கலாம் துப்பாக்கி ,மாற்றான் இரண்டும் என்ன செய்கிறது என்று.

Monday 1 October 2012

விக்ரம் -சூர்யா ---குறிக்கோள் கமல் நாற்காலி

விக்ரம் -சூர்யா ---குறி  கமல் நாற்காலி 



விக்ரம் -வயது 46 
சூர்யா- வயது 37 
விக்ரம் ,சூர்யா இருவரும் இன்றைய தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்திருப்பவர்கள்.எடுத்துக்கொண்ட கதையின் கதாபாத்திரங்களுக்காக உடலை எப்படியும் மாற்ற முயற்சித்து வருபவர்கள்.ரஜினின் இடத்திற்கு ஆசைப்படாமல் கமலின் நாற்காலி மேல் ஆசை கொண்டு உழைத்து வருபவர்கள்.இருவருமே ஒரே இடத்திற்கு முயல்பவர்கள்.இருவரின் முயற்சிகள் ,வெற்றிகள் ,எதிர்காலம் பற்றி பார்க்கலாம்.

விக்ரம் .முதல் படம் வெளிவந்தது 1990.முதல் வெற்றியை பார்த்தது 1999.ஸ்ரீதர்,பி.சி.ஸ்ரீராம்,விக்ரமன் போன்றவர்களின் படங்களில் நடித்தபோதும் தோல்வியே கண்டார்.பட வாய்ப்பு இல்லாமல் மலையாளம்,தெலுங்கு படங்களில் துணை நடிகர் லெவலுக்கு போனவர்.தமிழில் ,பிரபுதேவா, அப்பாஸ் ,அஜீத் (அமராவதி ) போன்றவர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தார்.பம்பாய் படத்தில் நடிக்க தேர்வு செய்யபட்டு பின் வாய்ப்பை இழந்தார்.ஒரே எதிர்பார்பான உல்லாசம் தோல்வி அடைந்தது.விக்ரமின்  தந்தை நடிகர் என்றாலும் பெரிய பின்புலம் எல்லாம் இல்லை.விக்ரமின் அம்மாவின் அண்ணன் நடிகர் தியாகராஜன் (நடிகர் பிரசாந்தின் அப்பா) என்ற போதும் பெரிதாக இவருக்கு உதவவில்லை.

ராதிகாவுடன் லண்டனில் எடுக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சி படத்தில் நடிக்கும் நேரம் .சேது படம் பாதி முடித்த நிலையில் உள்ளது.ராதிகா அடுத்த தொடரில் முக்கிய வேடம் தருவதாக அழைக்கிறார்.விக்ரம்"ஒரு நல்ல படம் (சேது) நடித்துகொண்டிருக்கிறேன்.அது கை கொடுக்கும் என்று நினைக்கிறன்".ஒரு வழியா சேது ஹிட்.அதன் பின் கவனமாக படம் தேர்வு.தில்,ஜெமினி,தூள்,சாமி,பிதாமகன்,அந்நியன் இவை அதன் பின் இவர் கொடுத்த ஹிட் படங்கள்.ஆனாலும் போலீஸ் வேடமா முடியை ஓட்ட வெட்டி ,உடம்பை முறுக்கேற்றி காட்டுதல்.காசியில் பார்வையற்ற பாடகன்.அதிலும் இவரது அற்பணிப்பை பார்க்கலாம்.சமுராய்,கிங்,அருள்,மஜா,பீமா,கந்தசாமி,ராவணன்,ராஜபாட்டை இவை (இன்னும் சில)சறுக்கிய படங்கள்.

சூர்யா -தந்தை 70-80 களின் நாயகன்.முக்கியமாக நல்லபேர் பெற்றவர்.சூர்யாவின் அறிமுகம் எளிதாகவே இருந்தது.அஜீத் வெளியேறிய நேருக்கு நேர் படத்தில் நடிக்க தொடங்கினார்.அந்த படத்தில் ஒழுங்காக நடிப்பு  வராமல் கஷ்டப்பட்டவர்.பாடல் எடுக்க கல்கத்தா போனபோது இங்கே பிரியாணி நல்லயிருன்னு கேள்விபட்டேனே என்று சொல்லி டைரக்டர் வசந்திடம் வாங்கி கட்டிகொண்டார்.அத பட விமர்சனத்தில் (குமுதமோ ,விகடனோ ) சூர்யா நடனம் ஆடுவது அவருக்கும் கஷ்டம் ,அதை பார்க்கும் நமக்கு கஷ்டம் என்று எழுதினார்கள்.எதோ ஒரு விழாவுக்கு எல்லா நடிகர்களோடும் ரயிலில் சென்றபோது தூங்கிகொண்டிருந்த இவரையும் அப்பாஸையும் அதட்டி எழுப்பிய நடிகர்  ரகுவரன் "எப்படிடா உங்களுக்கு தூக்கம் வருது ? சினிமாவில் என்ன சாதிச்சுட்டு தூங்கறீங்க ? என்று திட்டி இவரை உசுப்பி விட்டார்.போய் சேரும்வரை கடும் வார்த்தைகளால் திட்டி அறிவுறுத்தி இருக்கிறார்.அதன் பின் மனதில் உறுதி எடுத்த சூர்யா தன் தனி வெற்றிக்காக(விஜய் இல்லாமல் ) ஆறு ஆண்டுகள் நந்தா வரும்வரை காத்திருந்தார்.அதன்பின் அஜீத் விலகியதால் ஜோதிகா சிபாரிசில் காக்க காக்க நடிக்கிறார்.தொடர்ந்து பிதாமகன்,கஜினி,வாரணம் ஆயிரம்,அயன்,சிங்கம் போன்ற வெற்றி படங்களை தந்துள்ளார்.நந்தாவுக்கு பின் என்றால் உன்னை நினைத்து,ஸ்ரீ,பேரழகன்,ஆயுத எழுத்து,மாயாவி,போன்ற படங்கள் சரிக்கி விட்டது.சில சுமாரான படங்களும் ( ஆறு,வேல்,ஆதவன் )உள்ளன.

இருவருமே படத்திற்கு படம் கடும் உழைப்புடன் செயல்படுகிறார்கள். இருவருமே நடுநடுவே கமல் எண்பதுகளில் முயற்சித்து போல் வணிக மசாலா படங்களிலும் அவ்வபோது நடிக்கிறார்கள்.இருந்தாலும் இருவரின் குறியும் ஒன்றுதான்.அது கமல் நாற்காலி.இதில் வயது சூர்யாவிற்கு கை கொடுக்கிறது.அவர் இன்னும் நாற்பதை தொடவில்லை.அதனால் உடல்,மனம் இரண்டும் பல பரீட்சைகளுக்கு ரெடி.ஐம்பது வயதை நெருங்கும் விக்ரம் உடல் அளவில் தயார் என்றாலும் இயற்க்கை வயதை முகத்தில் காட்டிவிடுகிறது.இன்றைய தமிழ் சினிமாவில் படங்களை தேர்வு செய்வதில் சூர்யாவை மிஞ்ச ஆளில்லை.அவசரப்படாமல் நாள் எடுத்துக்கொண்டு யோசித்து படங்களை தேர்வு செய்கிறார்.அந்த விஷயத்தில் விக்ரம் இன்னும் பொறுமையுடன் செயல் பட வேண்டும்.ராஜபாட்டை எல்லாம் தேவையே இல்லை.ஆனாலும் சூர்யா ஒப்பனையில் ,உடல் தோற்றத்தில் காட்டும் அக்கறை நடிப்பில் விக்ரமை ஒப்பிட்டால் குறைவு என்றே சொல்ல வேண்டும்.உடல் மொழி ,குரல், நடிக்கும் போது  சில PAUSE என்று சொல்லப்படும் அமைதி போன்றவற்றை விக்ரம் சூர்யாவை விட நன்றாக வெளிபடுத்துகிறார்.

என்ன இருந்தாலும் இருவருமே தன் நேரத்திற்காக காத்திருந்து ,கிடைத்ததும் அதில் முழுமையாக வெளிப்படுத்தி,அதில் வெற்றி கண்டதும் அதன் பின்னும் பொறுமையாக படங்களை தேர்வு செய்து வெற்றி பெறுவது என்று ஒரு "வெற்றி கதையை " நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.எந்த துறைக்கும் அந்த வெற்றி கதைகள் ஒரு பாடம் தான்.

Wednesday 26 September 2012

CANNIBAL HOLOCAUST - 18+ படம் :


CANNIBAL HOLOCAUST - 18+ படம்  : 

நீங்கள் HOSTEL ,WRONG TURN போன்ற படங்களை பார்த்ததுண்டா? அது போன்ற படங்கள் பிடிக்கும் என்றால் இந்த படம் அந்த படங்களை விட நான்கு மடங்கு கோரம் நிறைந்ததாக இருக்கும் .பார்க்கும் எண்ணம் இல்லை என்றால் விட்டுவிடலாம்.உலகின்  மிக கோரமான படத்தை நீங்கள் பார்க்க போவதில்லை அவ்வளவுதான்.என்ன ரொம்ப பில்ட் அப் தரேனா? 

உலகின் மிக மோசமான ,கொடூரமான காட்சிகள் நிறைந்த படம் என்று சொல்லலாம்.MOST CONTROVERSIAL FILM EVER MADE என்று சொல்லப்பட்டு வரும் படம்.படம் பல நாடுகளில் தடை செய்ய பட்டுள்ளது .இன்றும் தடை உள்ளது.படம் வெளியான நேரத்தில் இந்த பட இயக்குனர் RUGGERO DEODATO மீது வழக்கு போடப்பட்டு கைது செய்யபட்டார்.அவர் மீது சொல்ல பட்ட குற்றம் "SNUFF FILM" எடுத்துள்ளார் .மேலும் படத்தில் உண்மையிலேயே நான்கு நடிகர்கள் கொல்லபடுகிறார்கள் என்பதே.கோர்ட்டில் இயக்குனர் மறுத்தாலும் அந்த நால்வரையும் அவரால் கோர்ட்டில் தோன்ற வைக்க முடியவில்லை.காரணம் அவர்கள் முன்பே தயாரிப்பு மற்றும் இயக்குனரோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி படம் வெளியாகி ஒரு ஆண்டுக்கு வெளியே தலை காட்ட கூடாது ,அதாவது வேறு படங்களிலோ ,பட விளம்பர நிகழ்ச்சிகளிலோ,மீடியா முன்  தோன்ற கூடாது என்பது.காரணம் நிஜ FOUND FOOTAGE பிலிம் என்று விளம்பர படுத்த பட்டதால். இதனால் மேலும் சிக்கலாகி போனது.ஒப்பந்தத்தை ரத்து  செய்து அவர்களை தொலை காட்சியில் காட்டிய  பின் தான் அவரால் வெளியே வர முடிந்தது.இருந்தாலும் படத்தை வெளியிட தடை விதித்து விட்டார்கள்.

மேலும் படத்தில் கொள்ளப்படும் மிருகங்கள் நிஜமாக கொள்ளபடுகின்றன என்பதை இயக்குனர் ஒத்துக்கொண்டார்.ஒரு ஆமை உயிரோடு கொல்லப்பட்டு கிழிக்கப்பட்டு உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாக வெளியே எடுக்கபடுவதை சாவகாசமாக காட்டுவார்கள்.ஒரு காட்டு குரங்கை பிடித்து தலையின் மேல் பாகத்தை மட்டும் வெட்டி அதை தலை கீழாக அழுத்தி ரத்தத்தை பிடித்து குடிப்பார்கள்.ஒரு பன்றியை நிஜமாகவே சுடுவார்கள்.இப்படி பல கண்றாவிகள்.

சரி மேற்கொண்டு தொடர விரும்பவில்லை.இவ்வளவு கொடூரங்கள் இருக்கும் படத்தின் கதை தான் என்ன? நான்கு ஆண்கள் ,ஒரு பெண் கொண்ட ஒரு பட குழு டாகுமெண்டரி எடுக்க அமேசான் காடுகளில் உள்ள பழங்குடியினரில் ஒரு குழுவை பற்றி ஆராய்ச்சி செய்ய காட்டின் உள்ளே போகிறார்கள்.போனவர்கள் திரும்ப வராததால் அவர்களை தேடி ஒரு ப்ரோபெசர் புறப்படுகிறார்.அங்கே அந்த பழங்குடியினரை சந்திக்கிறார்.தான் தேடி வந்த பட குழு இந்த பழங்குடியினருக்கு பெரும் கொடுமை செய்திருப்பதை அறிந்து கொள்கிறார்.மெல்ல அவர்களோடு பழகி அந்த பட குழு கொள்ள பட்டு விட்டதை தெரிந்து கொள்கிறார்.அவர்கள் ஷூட்செய்த வீடியோவை அவர்களிடம் இருந்து பெற்று திரும்புகிறார்.தன் அதிகாரிகளுக்கு அந்த பட குழு செய்த கொடுமைகளை அந்த வீடியோ மூலம் தெரிய படுத்துகிகிறார்.

படம் பார்பவர்கள் சகிக்க முடிய வில்லை என்றால் அந்த வீடியோ கிடைக்கும் காட்சியுடன் படத்தை நிறுத்தி விடுங்கள்.மேற்கொண்டு பார்க்க வேண்டாம்.அதற்க்கு மேல் வருபவை எல்லாம் கொடுமையின் உச்சம்.படத்தின் தரம் நிஜ டாகுமெண்டரி போன்ற உணர்வை தரும்.நாகரீகம் அடைந்தாலும் நாமும் காட்டு மிரண்டிகளே என்பதே படம் சொல்வது.படத்தில் நிறைய 18+ காட்சிகள் உண்டு.அதை நாம் அப்படி நினைத்து கொண்டு பார்க்க முடியாது.படத்தை பற்றி எனக்கு சொன்ன மலர்வண்ணன் ,கிரி இருவருக்கும் நன்றிகள்.

Tuesday 25 September 2012

T20 SUPER EIGHT -அணிகள் ஒரு அலசல் :

T20 உலக கோப்பை  SUPER EIGHT -அணிகள் ஒரு அலசல் :

T20 உலக கோப்பையில் ஒரு வழியாக லீக் போட்டிகள் முடிந்து விட்டன.எல்லா முன்னணி அணிகளும் சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறி விட்டன.எந்த ஒரு அதிர்ச்சியும் தராமல் சிறிய அணிகளான பங்களாதேஷ் ,அயர்லேன்ட் ,ஆப்கானிஸ்தான்,ஜிம்பாப்வே அணிகள் போட்டியில்  இருந்து வெளியேறி விட்டன.உலக கோப்பைகளில் சிறிய அணிகள் திடீரென பெரிய அணி ஒன்றை வென்று அதிர்ச்சி தருவது அவ்வபோது நடந்து வரும் ஒன்று.இந்த உலக கோப்பையில் அது மிஸ்ஸிங் .இனி சூப்பர் எட்டுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் லீக் போட்டியில் ஆடியது பற்றியும் அதன் வாய்ப்புகள் பற்றி பார்க்கலாம்.

பாகிஸ்தான் : இப்போதைக்கு கோப்பை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணியாக நான் நினைப்பது இந்த அணியைதான்.காரணம் எப்படியோ உலக கோப்பை போட்டிகளில் நன்றாக விளையாடி விடுகிறார்கள்.மற்ற அணிகள் ஆண்டுக்கு ஒரு மூன்று ஆல்லது நான்கு சர்வதேச T20 போட்டிகள் ஆடி உள்ளார்கள் என்றால் பாகிஸ்தான் ஆண்டுக்கு பத்திற்கு மேல் ஆடி இருப்பார்கள்.காரணம் கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் நாட்டிற்கு எந்த அணியும் சுற்று பயணம் செய்வதில்லை.அதனால் அவர்கள் தங்கள் சார்பு போட்டிகளை துபையில் நடத்தி வருகிறார்கள்.எந்த அணி சுற்று பயணம் என்றாலும் டெஸ்ட் போட்டிகள் நடத்தாமல் வெறும் ஒரு நாள் ,T20 போட்டிகள் மட்டுமே நடத்த பட்டு அவர்கள் பெரும் அனுபவம் பெற்று விட்டார்கள்.அணியின் பலம் பேட்டிங் -30% பவுலிங் -70% என்று உள்ளது.சயித் அஜ்மல் எப்படியும் மூன்று நான்கு விக்கெட் எடுத்து விடுகிறார்.ரன்னும் அதிகம் கொடுபதில்லை.பேட்டிங் யாரவது ஓரளவு கை கொடுத்து விடுகிறார்கள்.

இந்தியா: வாய்ப்பு இல்லை என்று நினைகிறேன்.சூப்பர் எட்டில் தென் ஆப்ரிக்கா,ஆஸ்திரேலியா ,பாகிஸ்தான் அணிகளை சந்திக்க வேண்டியுள்ளது .பந்து வீச்சு நம்ப முடியவில்லை.ஒரு போட்டியில் நன்றாக வீசுபவரை நம்பினால் அவர் அடுத்த போட்டியில் சொதப்பி விடுகிறார்.ஒரே பலம் பாட்டிங்.அப்படியே பாகிஸ்தான் அணிக்கு தலை கீழாக பாட்டிங் -70% பவுலிங் -30% பலம் உள்ளது.நாம் எவ்வளவு ரன் அடித்தாலும் அடுத்து ஆடும் அணி எளிதில் துரத்தி விடும் நிலைதான் உள்ளது.இதை எல்லாம் மீறி என்  கணிப்பு பொய்த்து இந்தியா வென்றால் மகிழ்ச்சி தான்.

ஆஸ்திரேலியா ; வாட்சன் எனும் ஒருவரை  பெரிதும் சார்ந்துள்ளது ஆஸ்திரேலியா.ஹஸ்ஸி ,வார்னர் போன்றோரை கொஞ்சம் நம்பலாம்.பந்து வீச்சுதான் சுத்தமாக எடுபடவில்லை.அங்கும் கை கொடுப்பது வாட்சன் தான்.பெரிய ஸ்பின்னர் இல்லாதது இழப்பு.

தென் ஆப்ரிக்கா : இனி தான் அவர்களுக்கு கண்டம் .எப்போதும் அவர்கள் கோட்டை விடுவது இங்கே தான்.ஜிம்பாப்வே அணியை பந்தாடிய இவர்கள் அடுத்த போட்டியில் இலங்கையுடன் மழையினால் குறைக்கபட்ட ஏழு ஓவர் ஆட்டத்தில் முதலில் ஆடி 78 ரன்கள் அடித்தனர்.சரி இலங்கை எளிதில் இதை அடித்து விடுவார்கள் என்று நினைத்தால் மிகவும் அற்புதமாக பந்து வீசி வெறும் 46 ரன்கள் மட்டுமே அடிக்க விட்டனர்.அவர்கள் பலம் சரியாக 50-50%  உள்ளதாக நினைகிறேன்.

இங்கிலாந்த் : இவர்களும் சூப்பர் எட்டோடு கிளம்ப வேண்டி இருக்கும் என்று எதிர் பார்க்கிறேன்.ஏமாந்த ஆப்கானிஸ்தான் அணியிடம் செம அடி அடித்த இவர்கள் இந்தியா அணியோடு மிக குறைந்த ரன்னில் சுருட்ட பட்டார்கள்.அவர்கள் பலம் வேக பந்து வீச்சு இலங்கையில் கை கொடுக்காது.இவர்கள் செய்த மெகா தவறு பீட்டர்சன் நீக்கம்.அவரை கமெண்ட்ரி சொல்ல டி.வியில் பார்க்கும் போது கோபம் வருகிறது.அற்புதமாக பேட் செய்ய கூடிய அதுவும் இந்தியா ,இலங்கை போன்ற களங்களில் ஆடி அனுபவம் பெற்ற அவரது நீக்கம் நிச்சயம் யோசிக்க வைக்கும்.சரி இங்கே நன்றாக ஆடும் இயன் பெல்லும் நீக்கம்.என்ன சொல்வது ? 

இலங்கை : இனி அவர்கள் தங்களை வெளி காட்டுவார்கள் என்று எதிர் பார்க்கலாம்.தில்ஷன் சரியாக ஆடாதது குறை.அடுத்துவரும் போட்டிகளில் மலிங்கா எடுபடலாம்.மென்டிஸ் என்ற மர்மம் வேறு உள்ளது .எப்போதும் ஆஸ்திரேலியா ,தென் ஆப்ரிக்க போன்ற அணிகளோடு தடுமாறுவார்கள்.பாட்டிங் எடுபட்டால் முன்னேறலாம்.

நியூசிலாந்து : இவர்களும் கிளம்ப வேண்டி இருக்கலாம்.மெக்கலம் அவுட் ஆகி விட்டால் அடிக்க ஆள் இல்லை.பந்து வீச்சும் சொல்லும் படி இல்லை.ஏதாவது அதிசியம் நடந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.

மேற்கு இந்தியதீவு: ஒரே பாயிண்ட் கெயில் அடித்தால் வெற்றி.இல்லாவிட்டால் கிளம்பலாம்.அது தான் நிலை.

மற்றபடி சிறிய அணிகள் அடுத்த சுற்றுக்கு வந்து சுவாரஸ்யத்தை கெடுக்காமல் இருந்தது ஒரு விஷயம்.பெரிய கேள்வி இந்த செப்டம்பர் ,அக்டோபர்  மாதங்களில் இந்தியா ,இலங்கை போன்ற இடங்களில் மழை வரும் என்பது தெரிந்தே ஏன் அங்கே போட்டிகளை நடத்த ஒப்பு கொண்டார்கள்? சென்ற இரண்டு T20 உலக கோப்பைகள் முறையே 2009 இல் இங்கிலாந்தில் ,2010 இல் மேற்கு இந்தியா தீவுகளில் நடந்தது.அதுவும் ஐ.பி.எல் முடிந்ததும் ஜூன் ,ஜூலை மாதங்களில் .அதே போல் இந்த முறையும் அட்டவணை தயாரிக்காமல் விட்டு விட்டு இப்போது மழை வந்து கெடுத்து விடுகிறது.இனி எத்தனை போட்டிகளில் மழையால் பாதிக்க போகிறதோ தெரியவில்லை.

Monday 17 September 2012

சுந்தர பாண்டியன் - இளைய டி.ஆர் .சசிகுமார் பட விமர்சனம்


சுந்தர பாண்டியன் - இளைய டி.ஆர் .சசிகுமார் பட விமர்சனம் 


அது என்ன ராசியோ தெரியவில்லை இதுவரை வந்த சசிகுமார் படங்களை திரை அரங்குக்கு மட்டுமே சென்று பார்த்துள்ளேன்.அதுவும் எப்படியோ பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்து விடுகிறது.சில படங்களை நிச்சயம் தியட்டருக்கு போகலாம் என்று நினைத்தாலும் சந்தர்ப்பம்  அமையாது ((உதா: நான் படம்).இந்த படம் பார்க்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லாமல் இருந்தது.காரணம் டி.வியில் போட்ட ட்ரைலர்கள் சசிகுமார் முந்தய படங்களை ஞாபக படுத்தியதால் கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தேன்.இந்த படம் பார்க்கும் சந்தர்ப்பம் நேற்று கிடைத்தது.நீண்ட நாட்களுக்கு பின் கமலா தியேட்டர்.(முன்பு வேட்டை சின்ன ஸ்க்ரீனில் பார்த்தேன்.)அரங்கம் நிறைந்து இருந்தது.குறிப்பாக அதிகம் பெண்கள் .

நிச்சயம் சசிகுமார் தமிழ் சினிமாவில் ஒரு இடம் பிடித்து  விட்டார் என்று சொல்லலாம்.இத்தனைக்கும் இந்த படம் அவர் நடிக்கும் நான்காவது படம்.போன படம் போராளியே நன்றாக தான் இருந்தது.ஆனால் எதோ ஒன்று குறைந்ததால் சரியாக ஓடவில்லை.அந்த குறையை ஓரளவு நிவர்த்தி செய்துள்ளது என்று சொல்லலாம்.ஆனால் சிலர் எழுதியது போல் நாடோடிகளை இந்த படம் தூக்கி  சாப்பிட்டுவிடும் என்று சொல்ல முடியாது.

கதை என்றால் அதே சசிகுமார் பிராண்ட் காதல் ,நட்பு ,துரோகம் தான்.நம்ம டி.ஆர் எண்பதுகளில் தங்கை செண்டிமெண்டை கட்டிக்கொண்டு அழுதது போல் சசிகுமார் நட்பு செண்டிமெண்டை கட்டிக்கொண்டு அழுகிறார்.டி.ஆர் காலத்தில் சினிமாவை வாழவைத்தது பெண்கள் கூட்டம் அதனால் தங்கை  செண்டிமெண்ட்.இப்போது சினிமாவை வாழவைத்து வருவது இளைஞர்கள் ,அதனால் நட்பு செண்டிமெண்ட்.கூடவே "நட்புன்ன என்று ஆரம்பித்து சில பன்ச் டயலாக்.இறுதியில் ஒரு சின்ன திருப்பம்.அவ்வளவுதான் படம்.

சசிகுமார் நடிப்பை குறை சொல்ல முடியாது.ஹீரோயிசம் என்று சேர்த்து உள்ளதை தான் கொஞ்சம் ஜீரணிக்க முடியவில்லை.நாயகி சிரித்தால் அழகாக இருக்கிறார்.படத்தை கொண்டு செல்வது பரோட்டா சூரி தான்.மனுஷனுக்கு இந்த படம் நிச்சயம் திருப்புமுனை.செம டைமிங் .இனி முன்னணி நகைச்சுவை நடிகராக வந்து விடுவார்.அந்த அளவு அசத்தியுள்ளார்.அரங்கில் கைதட்டல் அதிகம் இவருக்குதான்.சசியும் பல காட்சிகள் இவர் பேசட்டும் என்று அடக்கி வாசித்துள்ளார்.என்ன சூரி  பேசி கொண்டே இருக்கிறார்.அடுத்து சில சின்ன படகதாநாயகர்கள் (அப்புக்குட்டி ,விஜய சேதுபதி ,இனிகோ ) முக்கிய வேடம் ஏற்றுள்ளனர்.ஓடாத படங்களில் நாயகனாக நடிப்பதை விட ஓடும் இந்த படத்தில் நடிக்க இவர்கள் எடுத்த முடிவு பாராட்ட வேண்டியது.

படத்தின் பெரிய மைனஸ் இசை.சசி படங்களில் ஒரு பாடலாவது ஹிட் ஆகும் ,இதில் ஏமாற்றி விட்டாகள்.ஏன்  கவனிக்காமல் விட்டார்கள்.இனி டி.வியில் போட்டு பாடலை ஹிட் ஆக்கினால்தான் உண்டு.இயக்கியவர் சசிகுமாரின் உதவியாளர் பிரபாகரன்.சசி என்ன கதை சொன்னால் ஓகே சொல்வார் என்று அறிந்து அதை எப்படி கொடுத்தால் ரசிக்க வைக்கலாம் என்று அறிந்து படம் எடுத்துள்ளார்.சில படங்கள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.இருந்தாலும் படம் ஹிட் ஆகிவிடும்.