Pages

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, 3 February 2013

கடலில் கரைந்த பெருங்காயம் மணிரத்னம்


கடலில் கரைந்த பெருங்காயம் மணிரத்னம் 


வெள்ளிகிழமை இரவு முதல் கடல் படத்தின் விமர்சனங்கள் வர தொடங்கி விட்டன .

பலர் பல்வேறு கோணங்களில் படத்தை கிழித்து தொங்க விட்டாலும்,அவர் ரசிகர்கள் (பதிவுலகில்)படம் சரியில்லை என்று ஒரே பேச்சில் முடித்துவிட்டு அடுத்த வேலையை பார்த்துகொண்டு கடல் விமர்சனங்களில் மணி எடுத்த பழைய படங்களை காட்டி பின்னோட்டம் போட்டுகொண்டிருக்கிறார்கள்.என் கேள்வி எல்லாம் இதே வேறு ஒருவர் எடுத்திருந்தால் என்ன கிழி கிழித்திருப்பார்கள்.

 பல கடல் விமர்சன  பதிவுகளில் இறுதியாக சொல்லபடும்  ரசனையான ONE LINER அசத்தியது .அவை 

“மணி சார்... நீங்க டொக்கு ஆயிட்டீங்க...!”--- பிரபாகரனின் தத்துபித்துவங்கள்  
http://www.philosophyprabhakaran.com/2013/02/blog-post.html

தயவு செய்து வாலண்டிரி ரிடயர்மென்ட் வாங்கிடுங்க மணி ---என் எண்ணங்களில் அலைவரிசை 
http://alaivarisai-mss.blogspot.in/2013/02/blog-post.html

மு...டி...ய...லே...! ---CHILLEDBEERS
http://chilledbeers.blogspot.in/2013/02/blog-post_1.html

கடல் ஆர்ப்பரிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு "கடல்" எரியாகி இருக்கிறது.---கும்மாச்சி 
http://www.kummacchionline.com/2013/02/kadalmovie.html

திரையரங்கை விட்டு வரும்பொழுது மிச்சம் இருப்பது பார்க்கிங் டோக்கனும் ஏமாற்ற உணர்வும்தான்.----வலைமனை 

http://www.valaimanai.in/2013/02/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FjFoJL+%28Valai+Manai%29

மணிரத்னத்தின் சாதனை அவரின் அட்டர் ப்ளாப்பான ராவணனை கடல் தாண்டிடுச்சு ---அட்ராசக்க 
http://www.adrasaka.com/2013/02/blog-post.html

கடல் - ரோஜா, பம்பாய் ரகமல்ல . . ராவணன் ரகம் .. ----வீடு திரும்பல் 
http://veeduthirumbal.blogspot.com/2013/02/first-on-net.html

இந்த படம் தொடர்பான என் பதிவு -
கடல் -- பதுங்கும் மணிரத்னம் பழி சுமக்கும் ஜெயமோகன்

Sunday, 16 December 2012

1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு


1981 இல்  ரஜினி -கமல் இடையே நடந்த  கை கலப்பு :


தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் நட்பு என்பது ரொம்பவும் அரிதான விஷயம் . பார்த்தால் கட்டி அனைத்து கொள்வதும் பின் அவருக்கே குழி பறிக்கும் வேலைகளும் கருப்பு வெள்ளை காலங்கள் முதலே தெரிந்தது தான்.எம்.ஜி.ஆர் -சிவாஜி இருவரும் நேரில் தம்பி-அண்ணே என்று பாசத்தால் கட்டி அனைத்தாலும் சிவாஜிக்கு முன்பிருந்தே சிறு சிறு வேடங்களில் நடித்து வந்து அப்போதுதான் எம்.ஜி ஆரின் வளர்பிறை நேரம் .ஆனாலும் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் நிலை.ஒரு படம் ஓடினால் பின் சில சரிவுகள்.அதன் பின் வந்த சிவாஜி பராசக்தி மூலம் மின்னல் போல நுழைந்து தடதடவென மேலே வந்து விட்டார்.ஆமாம் எம்.ஜி ஆரை முந்தி முதல் இடத்தில இருந்தது அவர் நிலை. தொடர்ச்சியாக சிவாஜியை வைத்து மட்டுமே படம் எடுத்து கொண்டிருந்தனர் பி.ஆர்.பந்துலு போன்ற சில தயாரிப்பாளர்கள்.எம்.ஜி ஆர் தனது முறை வந்ததும் சிவாஜியை வைத்து படம் எடுத்த அனைவரையும் தன்னை நோக்கி வரவைத்தார்.மேலும் தேவர் போன்ற தயாரிப்பாளர்கள் சிவாஜியை நாடாமல் பார்த்துகொண்டார்.ஒரு நேரம் எம்.ஜி ஆர் குரூப் நடிகர்கள் ,சிவாஜி குரூப் நடிகர்கள் என்று இரு பிரிவாக நடிகர்கள் இருந்தார்கள்.எம்.ஜி ஆர் க்ரூபில் அசோகன் ,வி.எஸ்.ராகவன்,தேங்காய் ஸ்ரீனிவாசன்  இன்னும் சிலர் .சிவாஜியிடம் மேஜர் சுந்தர்ராஜன்,பாலாஜி போன்றோர் .இவர்களை ஒரு க்ரூப் நடிகர் பெரும்பாலும் இன்னொரு நடிகர் படத்தில் நடிக்க மாட்டார்.இருந்தாலும் நேரடியாக எம்.ஜி.ஆர் -சிவாஜி நட்பு பாராட்டி கொள்வார்கள் ..


காலம் கடந்து அடுத்த செட் நடிகர்கள் முன்னணிக்கு வருகிறார்கள்.கமல்-ரஜினி  என்று தொடங்கியது.இருவரும் சேர்ந்து பல படங்களில் நடிக்கிறார்கள்.நட்பு பலப்படுகிறது .பின் இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து பிரிகிறார்கள்.இருவருமே அடுத்தடுத்து ஹிட்கள் கொடுத்து முன்னணிக்கு வருகிறார்கள்.இருந்தாலும் பழைய பழக்கத்தில் நட்புடனே இருக்கிறார்கள்.இனி விஷயத்திற்கு வருவோம்.இது என் கற்பனையோ அல்லது வேறு எதுவோ இல்லை.நான் ஒரு புத்தகத்தில் படித்ததை இங்கே விவரிக்க்றேன்.அப்போது குமுதம் வார புத்தகம் இருவரையும் நேரடியாக பேர் சொல்லாமல் இந்த விஷயத்தை குறிப்பிட்டு இருந்தது.பின் கமல் ஒரு பேட்டியில் நேரடியாகவே அதை ஒப்புக்கொண்டு அதன் பின் நடந்தவற்றை விவரித்துள்ளார்.அந்த சம்பவங்களை அப்படியே 

தயாரிப்பாளர் கே.பாலாஜி .பில்லா,தீ ,விடுதலை போன்ற ரஜினி படங்களும் சவால்,சட்டம்,வாழ்வே மாயம் போன்ற கமல் படங்களும் தயாரித்தவர்.

வருஷம் ---1981. மே மாதம். பாலாஜி ரஜினின் திருமணத்தையொட்டி ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார்.ரஜினி ,கமல்,பாலாஜி,ஜெய்சங்கர் ,விஜயகுமார் ,ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .நட்சத்திரங்களின் சங்கமத்தில் மது கரை புரண்டு ஓடியது .கமல் ஏக துஜே கேலியே மூலம் உச்சத்தில் இருந்தார்.ரஜின்க்கும் நல்ல  மார்க்கெட். புகழ் மயக்கம் எல்லோருக்கும் இயல்பே.மகிழ்ச்சி உற்சாகத்தில்  தனி நபர் தாக்குதல் விமர்சனங்கள் தலை தூக்கின .

ஏழுமலையான் பெயர் கொண்ட தயாரிப்பாளர் பார்டியில் இரண்டு பெரிய நடிகர்கள் மோதிக்கொண்டதை  பற்றி எல்லா பத்திரிக்கைகளும் செய்தி வந்தது.

"ஸ்டைல் நடிகர் கமலாரின் சட்டை காலரை பிடித்தாராம்.அதுவரை பொறுமையாய் இருந்த அவர் இதற்குமேல் இடம் கொடுக்க கூடாது என்று விட்டாராம் ஒரு குத்து .தடால் என்று விழுந்து விட்டாராம் முரட்டு காளை " (குமுதம் லைட்ஸ் ஆன் ,28.05.1981)

பிறகு நடந்தவை கமல் வார்த்தைகளில் :

ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலகி இருவரையும் சமாதனம் செய்தார் .அதற்காகவே ஜெய் சாரை எங்கள் இருவருக்குமே பிடிக்கும்.இந்த சம்பவம் நடந்த மறு நாள் நான் வாகினி ஸ்டுடியோவில் இருந்தேன்.என்னை பார்க்க ரஜினி வேகமாக வந்துகொண்டிருந்தார் .வந்த வேகத்தை பார்த்தல் தகராறு செய்யத்தான் வருகிறார் போலிருக்கு ,சரி வரட்டும் வந்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று யோசித்து கொண்டிரும்போதே அருகில் வந்து ரஜினி என் கையை அழுத்தமாக பிடித்தார்."சாரி ..நேத்து நடந்தை மறந்திடுங்க என்றார்.எனக்கு வெட்கமாகி விட்டது.அவரது பெருந்தன்மை என்னை சுட்டது.

மறுநாள் ரஜினி தன்னோடு பேசிக்கொண்டிருந்தவர்களிடம் "கமலிடம் மன்னிப்பு கேட்க்க போனபோது பகை உணர்ச்சியை மாற்ற மாட்டாரோ என்று நினைத்தேன்.பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் என்று கூறி இருக்கிறார்.அதை கேள்வி பட்டதும் நாம் முந்தி கொள்ளாமல் போனோமே என்று என்னையே நொந்து கொண்டேன் ..



Thursday, 9 August 2012

எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய தமிழ் படங்கள்


எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய தமிழ் படங்கள் :

சில படங்கள் ஷூட்டிங் துவங்கும் முன்பே ஒரு ஆர்வத்தை நமக்கு ஏற்படுத்திவிடும்.அதற்க்கு காரணம் அந்த படத்தின் கூட்டணி.நமக்கு பிடித்த ஹீரோ நடிக்கும் படம் என்றால் இருக்கும் எதிர்பார்ப்பை விட அதே ஹீரோ ஒரு எதிர்பாராத டைரக்டர் உடன் கூட்டணி அமைத்தால் இருக்கும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம்.மேலும் சில ஹீரோக்கள் இந்த படத்தில் இப்படி ஒரு வேடத்தில்,இத்தனை வேடத்தில் ,இத்தனை கெட்அப் களில் நடிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு இன்னும் எகிறும்.ரஜினி படங்களுக்கு எப்போதுமே அதீத எதிர்பார்ப்பு இருக்கும்.மணிரத்னம் ,ஷங்கர் போன்றவர்களின் படங்களுக்கு யார் ஹீரோவாக இருந்தாலும் எதிர்பார்ப்பு இருக்கும்.அப்படி நாம் மிகவும் எதிர்பார்த்த  ஒரு படம் நம்மை முழுமையாய் திருப்தி செய்துள்ளதா என்பதே கேள்வி? அப்படி நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய படங்களை பற்றி பார்ப்போம்.இந்த படங்கள் நடிகர்களின் ரசிகர்களையும் தாண்டி சராசரி மக்களையும் எதிர்பார்க்க வைத்தவை.நாம் விழுந்து  அடித்து கொண்டு பார்த்தவை.

நவரத்தினம் : எம்.ஜி.ஆர். நடித்த படம் இது. சிவாஜி நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்ததற்கு போட்டியாக இன்னும் சொல்ல போனால் உல்டாவாக ஒரே எம்.ஜி.ஆர் ஒன்பது கதாநாயகிகளோடு பல சந்தர்பங்களில் வருவார்.அதில் நிறைய பேர் அவரை விரும்புவார்கள்.அவர் ஒருவரை மட்டுமே விரும்புவார்.இதில் இன்னும் சிறப்பென்றால் நவராத்திரி படத்தை இயக்கிய எ.பி.நாகராஜன் தான் இந்த படத்தையும் இயக்கினார்.மிகுந்த எதிர்பார்ப்பில் வந்த இந்த படம் ஓடவில்லை.

கர்ணன்: இந்த படம் அப்போது பிளாப் என்று சொன்னால் இன்று பலர் நம்ப மறுக்கின்றனர்.மிகுந்த பொருட்செலவில் கலரில் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்டதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது.இப்போது பார்க்க நன்றாக உள்ள இந்த படம் வெளி வந்த பொது ரசிக்க படவில்லை.அதற்க்கு காரணமாய் அப்போது சொல்லப்பட்டது கதை சிறப்பாக சொல்லபடாமல் பிரம்மாண்டம் மட்டுமே தெரிந்ததால்.

பாபா : யாருமே இந்த படத்தின் தோல்வியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.காரணம் படையப்பா என்ற சூப்பர் ஹிட்டுக்கு பின் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின் வரும் ரஜினி படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை.ரஜினி அறிமுகமாகும்போது விசிலடித்த ரசிகன் பின் என்ன நடக்கிறது ,ஓடுவது தலைவர் படம் தானா என்று சந்தேகம் வந்து விட்டது.ராம நாராயணன் படம் போல ஆகிவிட்டதே என்று என்னும்படி ஏழு மந்திரம் ,இமயமலை ,பாபாஜி என்று கொட்டாவி வரவைத்து விட்டது.

ஆளவந்தான்: எதிரபார்க்க வைத்து ரசிகனை ஒரு வித முழுமையில்லாமல் அனுப்புவது ராஜபார்வை காலம்தொட்டே கமலுக்கு பழக்கம் தான்.ஆனாலும் ஆளவந்தான் படத்தின் பிரம்மாண்டம்,கமல் மொட்டை தலையோடு ,உடம்பை ஏற்றி ஆங்கில படங்களுக்கு இணையான ஒப்பனையோடு  வெளிவந்த ஸ்டில்களும்,செய்திகளும் எங்கு பார்த்தாலும் ஆளவந்தான் பேச்சுதான்.அதுவும் பட ரிலீஸ் தள்ளி கொண்டே போனதில் இன்னும் ஆர்வம் கூடியது.ஏற்கனவே படம் அதிக செலவு இதில் கமல் டூப் போட்டு எடுத்த காட்சியை மீண்டும் எடுக்க சொல்லி செலவு என்று தாணு " ஆளவந்தான் அழிக்கவந்தான் " என்று குமுதத்தில் பேட்டி கொடுக்கும் அளவுக்கு ஊற்றி கொண்டது.இந்த படத்தோடு வந்த படங்கள் ஷாஜகான்,நந்தா,தவசி,மனதை திருடி விட்டாய் போன்ற படங்கள்.எதுவுமே பெரிதாக ஓடாதது ஒரு விஷயம்.(நந்தா சுமார்.)

தமிழன் :
விஜய் படங்களில் அப்போது பெரிய பட்ஜெட்டில் தயாரான படம்,உலக அழகி பிரியங்கா சோப்ரா நடிக்கும் முதல் படம் என்று செய்தி எதிர்பார்ப்பை ஏற்றியது.ஆனால் படம் சட்டம் ,நாயகன் முக ஸ்டாம்ப் என்று ஓவராக இருந்தது.பொதுவாக விஜய் படங்கள் அவரது ரசிகர்களை மட்டுமே எதிர்பார்க்க வைக்கும்.பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இருக்காது.காரணம் விஜய் எந்த பெரிய இயக்குனரோடும் அப்போதெல்லாம்  சேர மாட்டார்.

சிட்டிசன் : அஜித்துக்கு ஒரு மார்க்கெட் வந்த பின், வித்தியாசமான படங்களில் கெட்அப் மாற்றி நடிக்க தொடங்கினார். தினம் ஒரு செய்தி ,இது அஜித்தா என்று சந்தேகிக்கும் புகைப்படங்கள் என்று இந்த  படம் வெளிவரும் வரை எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் படம் எதிர்பார்த்தபடி இல்லை.நிக் ஆர்ட்ஸ் என்பது கிட்டத்தட்ட அஜித்தின் சொந்த நிறுவனம் போன்றது.அஜித்துக்கு மார்க்கெட் இல்லாத போது ராசி என்ற படத்தை இந்த நிறுவனம் தயாரித்தது .அஜீத் ஒரு நல்ல விஷயமாக தனக்கு மார்க்கெட் இல்லாத போது தன்னை வைத்து படம் எடுத்த நிறுவனங்களுக்கு மார்க்கெட் வந்தவுடன் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்தார்.அப்படி நெருக்கமான நிக் ஆர்ட்ஸ் இந்த சிடிசன் படத்தை எடுத்தபோது அஜீத் தன் சொந்த பணத்தை அதிகம் முதலீடு செய்தார்.ஆனால் படம் தோல்வி.கிட்டத்தட்ட இதேபோல் வந்த சாமுராய் படமும் தோல்விதான்.இந்த லிஸ்டில் அசல்,ஏகன்,பில்லா 2 அடக்கம்.காரணம் அந்த படங்களின் அதீத எதிர்பார்ப்பு.

கந்தசாமி : படத்தொடக்க அழைப்பித்தழுக்கே ஒரு அழைப்பித்தழுக்கு 15 ஆயிரம் செலவு(லேப்டாப் தான் அழைபிதழ்).விக்ரம் பெண்ணாக,90 வயது முதியவாராக என்று செய்திகள்.ஸ்பெயின் , பெரு என்று ஷூட்டிங் போன நாடுகளின் பட்டியல் .சேவல் கெட்டப் .எல்லாமே விழலுக்கு இரைத்த நீரானது.ராவணன் ,ராஜபாட்டை வரை இப்படி கிளப்பிவிடப்பட்டு தோல்வி அடைவது விக்ரம் படங்களின் வாடிக்கை ஆகிவிட்டது.அந்த அளவு எதிர்பார்ப்பில்லாமல் வந்த தெய்வதிருமகள் ஓரளவு ஓடியது.

பாய்ஸ்: ஷங்கர் படங்களில் மக்களுக்கு பிடிக்காத படம் என்றால் பாய்ஸ் தான் முதல் இடம். அதிக முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் ,இரட்டை அர்த்த வசனங்கள் ,எப்படி எப்படியோ செல்லும் திரைகதை என்று படத்தின் குறைகள் நிறைய.போதா குறைக்கு தினமலர் வேறு கற்பனையான செய்திகளை தினமும்( ரஜினி தன் மகள்களோடு இந்த படம் பார்க்க வந்ததாகவும் ,படம் மோசமாக இருந்ததால் அவர்களை பாதியிலேயே அவர் அனுப்பிவிட்டதாகவும் செய்தி) வெளியிட்டு முடிந்தவரை எதிர்தது.மகளிர் அமைப்புகளும் ,ஹிந்து அமைப்புகளும் வேறு சேர்ந்து கொண்டு எதிர்த்தன.இங்கே இத்தனை களோபரங்கள் நடந்தாலும் தெலுங்கில் படம் ஹிட்.

அவன் இவன் :  இப்படி பட்ட மோசமான ,ஒன்றுமே இல்லாத பாலா படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.விஷாலின் நடிப்பு வீண் ஆனது.ஒரே விஷயங்கள் திரும்ப திரும்ப அவர் படங்களில் வந்து சலிப்படைய வைத்து விட்டது.

சர்வம் : அறிந்தும் அறியாமலும் , பட்டியல்,பில்லா மூன்று  ஹிட் படங்களுக்கு பின் விஷ்ணுவரதன் இயக்கம்,ஆர்யா,த்ரிஷா  ,யுவனின் ஹிட் அடித்த இசை என்று படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.அதை சுத்தமாக பொய்யாகும் வகையில் இருந்தது படம்.

கன்னத்தில் முத்தமிட்டால்: அலைபாயுதே ஹிட்.அடுத்த படம் அப்போதைய ஹிட் ஹீரோ மாதவன்,சிம்ரன் ,எ.ஆர்.ரகுமான் என்று ஒரு செமையான அலைபாயுதே போல் ரொமாண்டிக் படம் எதிர்பார்த்து வந்த ரசிகனுக்கு முற்றிலும் மாறுபட்ட அவர்கள் கொஞ்சமும் யோசிக்காத தளம்.அதை தொடர்ந்து ஆயுத எழுத்து ,ராவணன் என்று தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.என்னதான் அவர் படத்தை பற்றிய விஷயங்களை ரகசியமாய் வைத்து இருந்தாலும் எதிர்பார்ப்பு கிளம்பி விடுகிறது.

இந்திரலோகத்தில் ந.அழகப்பன்: 23 ம் புலிகேசியின் வெற்றி இந்த படத்தை எதிர்பாக்க வைத்தது.எமலோகம் கதை விட்டதால் படம் பப்படம் ஆனது.

சக்கரகட்டி : எ.ஆர்.ரகுமான் என்பதுதான் இந்த படத்தின் முதல் விசிடிங் கார்டு.படமே 1.50 நிமிடம் தான் ,அதில் ஆறு பாடல்கள் அறை மணி நேரமென்றாலும் மிச்சம் இருக்கும் ஒரு மணி சொச்ச நேரத்தை உட்கார விடாமல் செய்த படம்.

3: இப்படி ஒரு எதிர்பார்ப்பு கிளம்பும் என்று படம் எடுக்க தொடங்கும் போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.காரணம் "கொல வெறி " .அதுவே படத்திற்கு மைனஸ் ஆகி ஓவர் எதிர்பார்ப்பு படத்தை காலி செய்துவிட்டது.

இது போல் வருடத்திற்கு ஒரு படமாவது நம்மை ஏமாற வைக்கும்.பொதுவாக  எமலோகம்,சினிமாவில் சினிமா ( வெள்ளித்திரை ,கோடம்பாக்கம் போன்ற படங்கள்) போன்ற கதைகள் தமிழில் எடுபடுவதில்லை.அது பற்றி வேறு ஒரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Monday, 30 July 2012

தமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம்

தமிழ் படங்கள் எவ்வளவு நேரம் ஓடலாம் 




திரைப்படங்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று எந்த வரை முறையும் கிடையாது.ஆனால் இந்திய படங்கள் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இந்திய படங்கள் என்றால் இதெல்லாம் இருக்க வேண்டும் என்று அவர்களாகவே சில வரை முறைகள் வைத்து  பாடல்கள் ,சண்டை ,காமெடி இவை நிச்சயம் இருந்தாக வேண்டும் என்று நினைத்து அவை தேவை இல்லாத நேரத்திலும் அவற்றை நிரப்பி விடுகிறார்கள்.அதற்க்கு காரணமும் சொல்கிறார்கள்.அதாவது பாடல்கள் ஆடியோ மார்கெட்டுக்கு தேவை .மேலும் பாடல்கள் இல்லாவிட்டால் படம் இரண்டரை மணிநேரம் தேராது.

இந்திய படங்கள் மூன்றரை மணி நேரம் ஓடிய காலம் எல்லாம் உண்டு.ஆனால் இப்போது இரண்டு மணி நேரத்திற்குள் முடியும் படங்கள் வர தொடங்கி விட்டன.அதிலேயும் ஐந்து பாடல்கள் என்று ஒரு இருபது நிமிடம் போகிறது.சமீப காலங்களில்தமிழ்  படங்களின் கால அளவை எடுத்து கொண்டால் 120 சொச்ச நேரமாக குறைந்து விட்டது.சமீப காலங்களில் நேர அளவில் பெரிய படங்கள் என்றால் அஞ்சாதே ,நண்பன் போன்ற படங்களை சொல்லலாம்.மூன்று மணி நேரத்திற்கு மேல் போன இந்த படங்கள் ஓடிய அரங்கங்களில் காட்சி நேரங்கள் மாற்றப்பட்டது.

கருப்பு வெள்ளை காலங்களில் மூன்று நிமிடமாக இருந்த பாடல்கள் இளையராஜா காலத்தில் நான்கு-ஐந்து நிமிடமாக ஆனது.ரகுமான் வந்த பின் அது சராசரியாக ஆறு -ஏழு நிமிடமாக மாறியது.எட்டு ஒன்பது நிமிட ரகுமான் பாடல்களும் உண்டு.இன்று சராசரியாக ஐந்து நிமிடம் என்று எடுத்து கொள்ளலாம்.பாடல்கள் இல்லாத படமாக உங்களுக்கு சட்டென வரும் படங்கள் என்ன.? அந்த நாள்,குருதி புனல் .இப்படி விரல் விட்டு என்னும் படங்களே.

இப்போதாவது பரவில்லை .தொன்னூறுகளில் வந்த சில படங்களில் ஒரு பாடல் வந்தால் தொடர்ந்து ஒரு சண்டையும் வரும்.அந்த பாடலும் சண்டையும் படத்திற்கு நேரத்தை நீட்டிததை தவிர பெரிதாக கதைக்கு உதவி இருக்காது.டி.ராஜேந்தர் பத்து பாட்டெல்லாம் வைத்து கொடுமை பண்ணுவார்.அதிலும் விக்ரமன் போன்றவர்கள் படங்களில் ஹீரோ வருத்தப்பட்டு சோகமாக  பாடும் பாடலை ஹீரோயின் வேறு ஒரு முறை பாடுவார்.கமெர்சியல் இயக்குனர்களை விட்டு விடுங்கள்.மணிரத்னம் போன்ற புதுமை விரும்பும் இயக்குனர்களும் ஐந்து ,ஆறு பாட்டு நிச்சயம் வேண்டும் என்று அடம் பிடிப்பதை என்னவென்று சொல்வது.உலக பட விழாக்களுக்கு படத்தை அனுப்பும் போது பாடல்களை வெட்டி அனுப்புவார்.சமிபத்தில் சுஹாசினி ஒரு தொலைகாட்சியில் வெளி நாட்டினர் பட விழாக்களில் பாடல்களை வெட்டாதீர்கள் என்று சொல்கிறார்கள் ,இந்திய படங்களின் சிறப்பே பாடல்கள் என்று வெளிநாட்டு ரசிகர்கள் கேட்டதாக கூறினார்.ஆறுதலாக மிஷ்கின் ,சுசிந்திரன் போன்றவர்கள் இரண்டு ,மூன்று பாடல்களோடு நிறுத்தி வருகின்றனர்.பாடல்கள் தேவை இல்லை என்று முழுதும் சொல்ல வர வில்லை.அவை திணிக்க பட்டதாக இருக்க வேண்டாம் .

அதேதான் சண்டை மற்றும் காமெடி ட்ராக் விஷயத்திலும்.பாட்ஷா போன்ற படங்களிலேயே படத்தில் கதைக்கு தேவை  தான் சண்டை உள்ளது.ரஜினி ஆட்டோகாரனாக இருந்து மீண்டும் பாட்ஷா வெளிப்படும்  போது அதுவும் மிகவும் எதிர்பார்க்க வைத்து நடக்கும் சண்டை மறக்க முடியாதது.அதனால் தான் இன்றும் அந்த படம் ரஜினி ரசிகர்களின் விருப்ப படமாக உள்ளது.அறிமுகம் ஆகும்போது ஒரு சண்டை ,கதாநாயகியை காப்பாற்ற ஒரு சண்டை ,மார்க்கெட் சண்டை ,இறுதி சண்டை சண்டை என்று அலுப்பு ஏற்படுத்தும் சண்டைகள் குறைந்து வருவது நல்லதே.

காமெடி விஷயத்திலும் நாம் மாற வேண்டும்.இன்று சந்தானத்தை போஸ்டரில் பெரிதாக போட்டு ஓடும் படங்கள் நிறைய வந்து விட்டது.கவுண்டமணி ,வடிவேலு காலத்திலிருந்தே அது இருந்தாலும் படத்திற்கு சம்மந்தமே இல்லாமல் தனி ட்ராக்  படத்தை காப்பாற்றாது.ஆனால் இது இப்போதைக்கு குறைவதாக தெரியவில்லை.

Wednesday, 25 July 2012

இன்னுமா ஓயவில்லை எம்.ஜி.ஆர் -சிவாஜி சண்டை

 இன்னுமா ஓயவில்லை எம்.ஜி.ஆர் -சிவாஜி சண்டை :




சினிமாவில் ஐம்பதுகளில் தொடங்கியது  எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள் மோதல்.எம்.ஜி.ஆர்  நல்லவர்,ஊருக்கு கொடுப்பவர் ,தாயை காப்பவர் இப்படி பட்ட பாத்திரங்களில் நடித்தார்.படங்களில் அவர் புகை பிடிப்பதோ ,மது அருந்துவதோ போன்ற காட்சிகளில் கூட நடிக்க மாட்டார்.இறுதியில் வில்லனை கூட கொள்ள மாட்டார்.அவர் படங்கள் மொத்தம் அவரது பிம்பத்தை மக்கள் மனத்தில் உயர்வாக தூக்கி நிறுத்துவதாக அமைந்தன.சிவாஜி  வித்யாசமான ,நடிக்க வாய்ப்புள்ள ,இமேஜ் பற்றி கவலை படாத பாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கினார்.அவர் படங்கள் அவரை போல் நடிக்க முடியுமா என்று மக்கள் நினைக்க வைக்கும் படங்களாகவே இருக்கும்.


இருவரது படங்கள் அந்த காலங்களில் வரும் போது ரசிகர்கள் அடித்து கொள்வதும் ,ஒருவர் மற்றவரை விமர்சனம் செய்வதும் வழக்கமாக இருந்து வந்தது.ஆனாலும் இருவரும் ஒற்றுமையாகவே இருந்தனர்.சிவாஜி எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே மரியாதையோடு அழைத்துவந்தார்.எம்.ஜி.ஆறும் தன்னால் சிவாஜி அளவுக்கு நடிக்க முடியாது என்று பல முறை ஒப்புக்கொண்டுள்ளார்.சில படங்கள் தனக்கு செட் ஆகாது போனால் சிவாஜியை கை காட்டி விட்டதும்  உண்டு.

அவர்கள் காலத்திற்கு பின் ரஜினி -கமல் ,விஜய் -அஜீத் என்று இரண்டு செட் அப்படி வந்துவிட்டது.சில மாதங்களுக்கு முன் கர்ணன் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி பெற்றது தெரிந்தது.அதற்க்கு போட்டியாக அப்போதே சில இடங்களில் எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோயில் படம் போடப்பட்டது.ஆனாலும் கர்ணன் அளவுக்கு ரீச் இல்லை.கர்ணன் நூறு நாட்களை தொட்டுவிட்டது.இன்று ஒரு வேலையாக சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள அண்ணா தியேட்டர் வளாகம் போனேன்.அங்கே எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் வெளியிட பட்டுள்ளது.அங்கே வைத்திருந்த பேனர்கள் மிரள வைத்தது.காரணம் எல்லா பேனரிலும் சிவாஜியையும் கர்ணன் படத்தையும் வசை பாடி போடப்பட்டுள்ளது.

அதில் எழுதப்பட்டு இருந்தவை :
அதாவது கர்ணன் படம் 1964 இல் ரிலீஸ் ஆகும் போதுஅதே நாளில்  எம்.ஜி.ஆரின்  வேட்டைக்காரன் படம் வந்தது.மிகுந்த பொருட்செலவில் அதிக எதிர்பார்ப்பில் வந்த கர்ணன் ஊத்திக்கொள்ள கருப்பு வெள்ளையில் வந்த வேட்டைக்காரன் ஹிட் ஆனதாம்.அதோடு எம்.ஜி.ஆர் நிஜ வாழ்கையிலேயே கர்ணனாக(வள்ளலாக ) வாழ்ந்தாராம்.நெகடிவ் கிடைக்காத கர்ணன்  படத்தை செலவு செய்து ஓட வைத்து பொய்யான ஒரு தோற்றத்தை உண்டாக்கி விட்டார்களாம்.எம்.ஜி.ஆர் நடித்தவரை அவரை நெருங்க முடியாத சிவாஜி இப்போது அவர் படங்களை முந்தி விட்டதை போல் பொய்யான செய்தி பரப்புகிறார்களாம்.எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களும் வெற்றியாம்.சிவாஜி நடித்த 250 படங்களுக்கு மேல் பெட்டியில் தூங்குகிறதாம்.இப்படி மேலும் பல அனல் கக்கும் வார்த்தைகளால் சிவாஜியை அர்ச்சனை செய்து குருவிகளுக்கு பருந்தின் பதில் என்று வேறு பஞ்ச்.

இன்று உள்ள விஜய் -அஜீத் மோதல் கூட blog,facebook,twitter இப்படி தான் உள்ளது.இப்படி பகிரங்கமாக படம் வெளியாகும் அரங்கில் போஸ்டர் அடித்து ஓட்டும் அளவிற்கெல்லாம் இல்லை.இத்தனைக்கும் எம்.ஜி.ஆர் -சிவாஜி இருவருமே இப்போது இல்லை.

Tuesday, 24 July 2012

தமிழ் படங்களின் ஒப்பனிங் - ஒரு பார்வை


தமிழ் படங்களின் ஒப்பனிங் - ஒரு பார்வை 

இன்று ஒரு படம் நன்றாக இருந்தாலும் மோசமாக இருந்தாலும் படத்தின் வெற்றியை ஒப்பனிங் தான் தீர்மானிக்கிறது.ஒரு படம் ரிலீஸ் ஆன நாளில் இருந்து அதன் பின் வரும் ஞாயிற்று கிழமை வரை வசூல் தான் ஒப்பனிங் வசூல் என்பது.பெரும்பாலும் படங்கள் வெள்ளிகிழமைகளில் தான் வெளியிடப்படும்.பண்டிகை நாட்களில் இது மாறலாம்.ஒரு படத்தின் வெற்றியை ஓபனிங் தீர்மானிக்க தொடங்கியது ரஜினி நடித்த "சிவாஜி " படத்தில் இருந்துதான்.அதற்கு முன் ஒரு படத்தின் வெற்றி அந்த படம் எத்தனை நாட்கள் ஓடியது என்பதை வைத்துதான் தீர்மானிக்கபட்டு வந்தது.ஆனால் சிவாஜி படத்தின் வெற்றியை தீர்மானிக்க நாட்கள் தேவை படவில்லை.எத்தனை காட்சிகள் ,தியேட்டர்களில் ஓடியது என்பதும் அதன் மூலம் எவ்வளவு வருமானம் வந்தது என்பதும்தான் படத்தின் வெற்றியாக உருவானது.

ஆனால் சில படங்கள் வெளிவந்த சில நாட்கள் கூட்டமில்லாமல்,பின் மெல்ல கூட்டம் வரத்தொடங்கி ஹிட் ஆன படங்களும் உண்டு.சேது,சித்திரம் பேசுதடி,உள்ளத்தை அள்ளித்தா,பூவே உனக்காக என் பட்டியல் நீளும்.மக்களுக்கு பிடித்திருந்து வாய்வழியாக சொல்லப்பட்டு சில நாட்களில் கூட்டம் வரத்தொடங்கி பின் நூறுநாள்,இருநூறு நாள் ஓடிய படங்கள் எல்லாம் உண்டு.ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட ஹீரோவின் படத்தை போட்டு ,சிறு படங்கள் நன்றாக இருந்தாலும் எடுக்கப்படும் நிலைக்கு ஆளாக்கி தங்கள் படத்தை வெளியிட்டு முழுக்க லாபம் மட்டுமே குறிக்கோள் என்ற நிலைக்கு ஓபனிங் முறை வழி வகுக்கிறது.இதற்க்கு முக்கிய காரணம் டி வி டி .படம் வந்த அடுத்த நாளே அற்புதமான பிரிண்ட் வரத்தொடங்கியதும்,ஒரு டிக்கெட் விலை நூறை தொட்டுவிட்டதாலும் ,முப்பது ரூபாயில் குடும்பமாக பார்கிறார்கள்.படித்தவர்கள் கூட இவர்களே வெளிநாட்டு படத்தை காப்பி அடித்துதான் படம் எடுக்கிறார்கள் .இவர்கள் படத்தை இப்படி பார்த்தால் என்ன என என்ன தொடங்கிவிட்டார்கள்.

2007 ஆம் ஆண்டு சிவாஜி படத்தின் சென்னை உரிமையை 6.2 கோடிக்கு அபிராமி தியேட்டர் வாங்கியது.அதற்க்கு முன் வந்த சந்திரமுகி கூட நெருங்க முடியாத தொகை அது.போட்ட காசை எடுப்பதற்கு புதிய முறை கையாளப்பட்டது.அதுதான் அதிக அரங்குகளில் வெளியிடும் திட்டம்.அதற்க்கு முன் ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் 10 அல்லது 15 அரங்குகளில் தான் வரும்.ஆனால் சிவாஜி 30 அரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.அப்படம் முதல் நான்கு நாட்களில் 1.34 கோடிகள் வசூலித்து,மூன்றாம் வாரத்திலேயே போட்ட 6.2 கோடியை வசூலித்து கிட்டத்தட்ட சென்னையில் மட்டுமே 12 கோடி கிடைத்தது.அதுபோல் வெளிநாடுகளிலும் அதிக அரங்குகளில் வெளியிட்டு நல்ல பணம் கண்டது .அதன் மூலம் தமிழ் படங்களுக்கு புதிய வெளியீட்டு முறை களமிறக்க பட்டது.சிவாஜிக்கு பின் பில்லா சென்னையில் மூன்று நாட்களில் 59 லட்சங்கள் ,மொத்தமாக சென்னையில் 4.5 கோடி வசூல் பெற்றது.அன்றைய தேதியில் அது பெரிய விஷயம் தான்.அதன் பின்
தசாவதாரம் சென்னையில் மூன்று நாட்களில் 95 லட்சம் மொத்தமாக சென்னையில் மட்டுமே 11 கோடி பெற்றது.
மங்காத்தா 5 நாட்களில் 1.8 கோடியும் மொத்தமாக சென்னையில் எட்டு கோடியும் பெற்றது.ரஜினி ,கமலுக்கு பின் சென்னையில் எட்டு கோடி தொட்ட நடிகர் என்ற பெருமையை அஜீத் பெற்றார்,
7 ஆம் அறிவு 5 நாட்களில் 2.2 கோடியும் மொத்தமாக 9 கோடியும் தொட்டது.ரஜினி கமலுக்கு பின் சென்னையில் 9 கோடி தொட்ட நடிகராக சூர்யா பெயர் பெற்றார்.
விஜய் நடித்த வேலாயுதம் 5 நாட்களில் சென்னையில்  1.95 கோடியும் மொத்தமாக சென்னையில் 8 கோடியும் கடந்த முதல் விஜய் படமாக அமைந்தது.

இப்போது படம் நன்றாக இருந்தால் மூன்று வாரத்தில் லாபம் பார்த்துவிடுகிறார்கள்.ஐந்து வாரம் ஓடினால் அப்படம் மிகபெரிய வெற்றி.ஒரு படத்தின் வெளியீடு எதிர்பார்ப்பை தவிர்த்து படம் வெளியாகும் காலம்,அரங்குகளின் எண்ணிக்கை போன்றவையும் இப்போது ரொம்ப முக்கியம்.பண்டிகை காலங்களில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட படங்கள் வருவதால் வெளியிடும் அரங்குகள் குறையும் அதனால் வசூலும் குறையும்.உதாரணமாக மங்காத்தா ,பில்லா 2 ,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள்  தனியாக வேறு படங்கள் போட்டியில்லாமல் வந்து வசூல் அடைந்தன.ஆனால் 7 ஆம் அறிவு வேலாயுதம் இரண்டும் ஒரே நாளில் வந்ததால் இரண்டு படங்களுமே பாதிக்கபட்டிருக்கும்.தனித்தனியாக வந்திருந்தால்  இரண்டுமே இன்னும் அதிகம் வசூல் அடைத்திருக்கும்.தற்போதைய நிலவரப்படி ரஜினி,கமல்,விஜய்,அஜீத்,சூர்யா போன்றவர்கள் படங்கள் நல்ல ஓபனிங் பெரும்  .சில படங்கள் நடிகர்களை தாண்டியும் ஓபனிங் பெரும்.வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் அழகப்பன் ,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்ய படவைக்கும் ஓபனிங் பெற்றது..அதற்க்கு காரணம் வடிவேலுவின் முந்தய படமான புலிகேசி மற்றும் ராஜேஷ் -சந்தானம் கூட்டணியில் வந்த முந்தய படமான பாஸ் எ பாஸ்கரன்.அது மட்டமல்ல அந்த நேரத்தில் வேறு புதிய படங்களை வர விடாமல் தடுக்கும் அந்த பட குழு.

டிஸ்கி :இந்த ஓபனிங் வரவும் அதிக விளம்பரம் தேவை.நல்ல சில படங்கள் விளம்பரம் இல்லாமல் போய் விடுவதும் உண்டு.மேலே சொன்ன வசூல் சில புத்தகங்களிலும் ,நெட்டிலும் கண்டதன் அடிப்படையில் எழுதப்பட்டது.

Sunday, 15 July 2012

ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :


ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :


ஒரு நடிகர் நடிக்க இருந்த படத்தில் திடீரென அவர் விலக ,அவருக்கு பதில் வேறு நடிகர்கள் நடித்த படங்கள் ஏராளமாய் சொல்லலாம்.சில படங்கள் வெறும் கதை மட்டும் பிடிக்காமல் மறுத்திருப்பார்கள்.இந்த பதிவு ஓரளவு அந்த படங்களை பற்றி சொல்லும் .ஒருவர் நடிக்க மறுத்து விலக பல காரணங்கள் இருக்கலாம்.இறுதியில் அந்த நடிகர் நடிக்காமல் விட்ட படம் வெற்றி அடைந்ததா என்பதே முக்கியம்.ஒரு சின்ன உதாரணம்.பாக்கியராஜ் மகன் சாந்தனு இதுவரை ஒரு ஹிட்டும் கொடுக்கவில்லை.சூப்பர் ஹிட்டான களவானி படம் அவர் நடிக்க மறுத்த படம்.கிராமத்து படம் தனக்கு ஒத்து வராது என்று ஒதுக்கிய படம்.

எம் ஜி ஆர் நடிக்க மறுத்த படங்கள்:
கர்ணன்: சிவாஜிக்கு முன் கர்ணனாக நடிக்க முதலில் அணுகப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர். ஆச்சர்யமாக உள்ளது இல்லையா? அண்ணா இதிகாச படங்களில் நடிக்க வேண்டாம் என்று எம்.ஜி,ஆரை கேட்டு கொண்டதால் அவர் விலக ,பிறகே சிவாஜி நடித்தார்.ஆனாலும் அது அந்த காலத்தில் தோல்வி அடைந்து இன்று வெற்றி பெற்றது வேறு கதை.
சிவந்த மண் : இந்த படம் வேறு பேரில் எம்.ஜி.ஆரை வைத்து துவங்கப்பட்டு பின் சிவாஜியை வைத்து சிவந்த மண் என்று பெயர் மாற்றம் கண்டது.
இது போல் சில படங்கள் எம்.ஜி.ஆர் தனக்கு இந்த பாத்திரம் ஒத்துவராது தம்பி சிவாஜி கணேசனே இதற்க்கு சரியான தேர்வு என்று கை காட்டிய படங்களும் உண்டு.

சிவாஜி நடிக்க மறுத்த பழைய படங்கள் பற்றி தெரியவில்லை. ஆனால் அவ்வை ஷண்முகி(ஜெமினி கணேசன்),நட்புக்காக (விஜயகுமார்) போன்ற படங்கள் அவர் மறுத்தவை.
ரஜினி நடிக்க மறுத்த படங்கள் :  முதல்வன்,மக்கள் ஆட்சி,ஜக்குபாய்
கமல் : ஜென்டில்மேன் ,எந்திரன்,பச்சை கிளி முத்துச்சரம்,
எந்திரன் கமல் நடிப்பில் எடுக்க பட்ட புகை படங்கள் :

விஜய்: முதல்வன், உன்னை நினைத்து ,சண்ட கோழி,தூள்,வேட்டை
அஜித்: இவர் மறுத்த படங்கள் எல்லாம் சூரியாவை வளர்த்து விட்ட படங்கள் . நேருக்கு நேர்,நந்தா,கஜினி,நான் கடவுள்,நியூ .
சூர்யா : நண்பன் விஜயிடம் இருந்து இவரிடம் வந்து மீண்டும் விஜய்க்கே சென்றது,வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் பிரியாணி சூர்யா நடிக்க இருந்து இப்போது கார்த்தி நடிக்கிறார்.முகமூடி படமும் இவர் நடிக்க வேண்டியது.அவன் இவன் படத்தை சூர்யா கார்த்தி இருவரை வைத்து எடுக்க தான் பாலா முதலில் திட்டமிட்டார்.
சிம்பு : பாய்ஸ்,கோ,நண்பன் .
விமல் நடிக்க மறுத்த வேடத்தில் தான் எங்கேயும் எப்போதும் படத்தில் சர்வானந் நடித்தார்.
சத்யராஜ் - சிவாஜி படத்தில் சுமன் வேடத்தில் நடிக்கவும்,தசாவதாரம்,விருமாண்டி போன்ற படங்களில் நெப்போலியன் ஏற்ற வேடத்தில் சத்யராஜ் மறுத்துள்ளார்.

சில படங்களில் இப்போதும் சில நடிகர்களை பார்க்கும் போது  இவரை தவிர வேறு யாரும் நடித்திருக்க முடியாது என்று நாம் நினைப்போம்.ஆனால் முதலில் அனுகப்பட்டவரே  நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பார்த்தால் விடை தெரியவில்லை.இதனால் இந்த படங்கள் வெற்றி தோல்வி மாறி இருக்குமா? 


Tuesday, 19 June 2012

புதிய இயக்குனர்களா ? ஐயோ வேண்டாம் !

புதிய இயக்குனர்களா ? ஐயோ வேண்டாம் !

ஒரு நடிகர் எந்த நிலையில் உள்ள இயக்குனர்களின் படங்களில் நடிக்க விரும்புவார்.நடிக்க வரும் புதிதில்,யார் வாய்ப்பு குடுத்தாலும் நடிப்பார்.இது ஒரு ஹிட் படம் கொடுக்கும் வரை தான்.அதற்க்கு பின் படங்களை அவரது விருப்பம்.இந்த படத்தில் நடித்தவரின் அடுத்த படம் என்று மக்கள் ஒரு படத்தை பற்றி பேசும் வரை தான் இந்த நிலைமை .புதிய இயக்குனர் படங்களில் நடிப்பவர் யார்?.ஒரு நடிகர் கொஞ்சம் வளர்ந்த பின் பிரபலமான இயக்குனர்கள் படங்களில் மட்டுமே என்று முடிவெடுப்பதும் உண்டு.ரஜினிகாந்த் எந்த புதிய இயக்குனர் படத்தில் கடைசியாக நடித்தார் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்குமா? ஒரு நிலைமை அடைந்ததும்  இனி புது இயக்குனர் படங்களில் நடிப்பதில்லை என்றும்,அந்த நேரத்து ஹிட் கூட்டணி அமைத்து படம் வெற்றி பெற்றால் போதும்.புதியவர்களுக்கு வாய்ப்பு  கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை.இதில் அவர் ரசிகர்கள் வேறு ரஜினி படம் எப்படி இருந்தாலும் பாப்போம் என்று.அப்ப ஒரு புதிவருக்கு வாய்ப்பு தரலாமே.இதை அப்படியே கொஞ்சமும் மாறாமல் இப்போது சூர்யா தொடர்ந்து வருகிறார்.வரிசையாக ஹிட் கொடுப்பது இருந்தாலும்,ஒரு புதியவரை கதை பிடித்திருந்தால் கூடவாய்ப்பு தர  தயங்குகிறார்.அவர் கடைசியாக சிலுன்னு ஒரு காதல் படத்தில் கிருஷ்ணா என்பவருக்கு வாய்ப்பு தந்தார்.அதற்க்கு பின் யாருக்கும் இல்லை.விக்ரமும் அப்படியே.


இந்த விஷயத்தில் விஜய் ,அஜித் இருவரும் பரவாயில்லை.விஜய் ஆரம்பத்திலிருந்தே புதியவர்களுக்கு வாய்ப்பு தந்து வருகிறார்.ஆரம்பத்தில் அதாவது அவரது ஹிட் படங்களான லவ் டுடே ,துள்ளாத மனமும் துள்ளும்,திருமலை ,திருப்பாச்சி போன்ற படங்கள் புதிய இயக்குனர்கள்  படங்களே.தான் சொல்வதை கேட்பார்கள் என்பதற்காக பெரும்பாலும் அவர்களுக்கு வாய்ப்பு தருவார். ஆனால் அவரது மார்கெட் சரிய காரணமும் அவர்களே .வேட்டைக்காரன்,அழகியதமிழ் மகன்,சச்சின்,கீதை,தமிழன்,ஷாஜகான்,பத்ரி,நிலாவே வா என்று இவர் வாய்ப்பு கொடுத்து ஊத்தி கொண்ட படங்களை சொல்லி கொண்டே போகலாம்.அவர் மட்டும் சூர்யா போல் பிரபல இயக்குனர்கள் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று முடிவெடுத்து இருந்தால் நிச்சயமாக அவருக்கு சரிவு இருந்திருக்காது.இப்போது அதை உணர்ந்து முருகதாஸ்,கௌதம் மேனன்,ராஜேஷ் என்று வரிசையாய் பிரபல இயக்குனர்கள் படங்களில் நடிக்க உள்ளார்.

அஜித் படங்களில் வாலி,தீனா என்று கொஞ்சமே புதிய இயக்குனர்கள் படங்களில் வெற்றியை கண்டாலும்,முகவரி,சிடிசன் போன்ற படங்கள் எதிர்பார்த்தது போல் ஓடாததால் ,அவர் புதிவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதை குறைத்து கொண்டார்.கொஞ்சம் இடைவேளைக்கு பின் கிரீடம்,ஆழ்வார் என்று முயற்சித்து பார்த்தார்.அவை கைவிட்டு விடவே ,பிரபல இயக்குனர்கள் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.குறைந்த பட்சம் ஓரிரு படங்களாவது இயக்கி இருக்கிறார்களா என்று பார்த்தே வாய்ப்பு அளிக்கிறார்.



ஒரு நடிகர் தொடர்ந்து வெற்றி பெற்று பின் கொஞ்சம் வளர்ந்த பின் புதியவர்கள் குறிப்பாக திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்பளித்து பார்த்தார்.சில படங்கள் வெற்றி அடையவே ,பின் தொடர்ச்சியாக பல வருடங்களுக்கு அவர்கள் படங்களில் மட்டுமே நடித்து பெரும்பாலும் தோல்வி கண்டு தன் மார்கெட்டை இழந்தார்.அவர் வேறு யாரும் இல்லை .நம் கேப்டன் விஜயகாந்த் தான்.கமல் வேறு பாதையில்  சென்று விட்ட பின் ரஜினிக்கு போட்டியாக அதிரடி மசாலா படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற்றுகொண்டிருந்த விஜயகாந்த்  புதிவர்களாலேயே தன் இடத்தை இழந்தார்.அவர் மட்டும் ரஜினி போல் பிரபலங்களுடன் மட்டுமே கூட்டணி என்று சென்றிருந்தால் ,ரஜினிக்கு கடும் போட்டியாக இருந்திருப்பார்.
படம் ஓட வேண்டும் என்பதை மட்டுமே எண்ணிய ரஜினி,சூர்யா படங்கள் நன்றாக ஓடியது -ஓடுகின்றது.தன் இஷ்டம் போல் படம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் விஜயகாந்த் ,விஜய் படங்கள் ஓடவில்லை.இதுதான் முரண்.

Wednesday, 16 May 2012

ரொம்ப சுமாரான 2 ஆங்கில படங்கள் :

சமீபத்தில்  நான் பார்த்த ரொம்ப சுமாரான 2 ஆங்கில படங்கள் :

ரொம்ப நாட்களாக என்னிடம் இருந்த 2 ஆங்கில படங்களை பார்க்க நேரமில்லையோ ,பார்க்க ஆர்வமில்லையோ தெரியவில்லை.இத்தனய்க்கும்  அவை நான் ரசிக்கும் thriller படங்கள் தான்.ஒரு வழியாக இரண்டையும் பார்த்தாகி விட்டது.சரி அதற்க்கு என்ன.அவை இரண்டும் மக்களாலும்,விமர்சகர்களாலும் பெரிதும் ரசிக்கபட்டவை.சிலருக்கு இந்த படங்கள் ரொம்ப பிடித்திருக்கலாம்.ஏனோ எனக்கு அந்த அளவு பிடிக்கவில்லை.

1 . THE SILENCE OF THE LAMBS (1991):




நகரில் நடக்கும் தொடர் கடத்தல்களும் ,கடத்தப்பட்ட பெண்கள் பிணங்களாக கிடைப்பதும் தொடர்ந்து,விசாரிக்கும் அதிகாரி,கேசை நாயகியிடம் கொடுக்கிறார்.ஏற்கனவே சிறையில் உள்ள HANNIBAL எனப்படும் மனித மாமிசம் சாப்பிடும் நாயகனை சந்தித்து உதவி கேட்கிறார் நாயகி.அவரும் சில குறிப்புகளை கொடுத்து உதவுகிறார்.தொடந்து நடக்கும் சம்பவங்களும் கொலைகாரன் யார்,ஏன் கொலை செய்கிறான்,அவனை பிடித்தார்களா?சிறையில் உள்ள நாயகனின் கதி என்ன ? இப்படி எல்லா கேள்விகளுக்கும் நீட்டி முழக்கி சொல்லி இருக்கிறார்கள்.இந்த படம் சிறந்த நடிகர்,நடிகை,இயக்கம் ,உட்பட ஐந்து ஆஸ்கார் விருது பெற்றதாம்.அப்படி ஒன்றும் பெரிதாக நடிக்க வில்லை. மொத்தத்தில் நான் ரொம்பவும் அதிகமாக கேள்விப்பட்டு ரொம்ப சுமார் படம்.மேலும் ஆச்சர்யம் ஊட்டும் படி imdb யில் 8.7 பெற்றுள்ளது.


2 .THE GAME (1997):




இதுவும் நான் நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டு ஏமாந்த படம். நாயகன் ஒரு வங்கி முதலீட்டாளர்,பணக்காரர். .ரொம்பவும் திமிர்,ஈகோ, கொண்டவர்.அதனால் தன் மனைவியை பிரிந்து வாழ்பவர். தன் பிறந்த நாளில் தன் தம்பி பரிசளித்த வவுச்சர் எடுத்து கொண்டு அதன் முகவரிக்கு செல்கிறார்.அதன் பின் அவர் வாழ்க்கையே மாறிவிடுகிறது.தொடர்ந்து ஓட்டம்,துறத்தல் ,கொலை முயற்சி என்று தொடர்கிறது.இறுதியில் என்ன நடக்கிறது யார் காரணம் என்று பார்த்தால்,பெரிய ஏமாற்றம்,அல்லது இன்ப அதிர்ச்சி.ஆனால் திருப்தியில்லை.ஆனால் முந்திய படத்துக்கு இது பரவாயில்லை.

தமிழ் நடிகர்களை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுதி வருகிறேன்,விரைவில் உங்கள் பார்வைக்கு.


Tuesday, 8 May 2012

பார்த்தே தீர வேண்டிய கொரியன் படங்கள் -OLD BOY

பார்த்தே தீர வேண்டிய கொரியன்  படங்கள் :





old boy (2003):  

         கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.  இளகிய மனம் கொண்டவர்கள் , இந்த படத்தை தவிர்ப்பது நலம்.இந்த படம் பார்த்து மனம் நிச்சயம் ஏன் இப்படியெல்லாம் படம் எடுக்கிறார்கள் என்று மனம் வருந்தினாலும், நீங்கள் எப்பேர்பட்ட மன திடம் உள்ளவராக இருந்தாலும் நிச்சயம் ஒரு ஐந்து நிமிடமாவது உங்களை இந்த படம் பாதிக்க செய்யும்.என்ன ரொம்ப ஓவராக சொல்றேன் என்று நினைக்க வேண்டாம்.படம் பார்த்த பின் எனக்கு சொல்லவும்.

அப்படி என்ன படத்தில்?  நம் நாயகன் ஒடேசு பட தொடக்கத்தில் குடித்துவிட்டு அலும்பல் செய்து காவல் நிலையத்தில் இருக்கிறார்.அன்று  அவரது மகள் பிறந்த தினம் அவர் சென்றே தீர வேண்டும்.ஒரு வழியாக தன் நண்பன் தனக்காக முறையிட்டதால் விடுவிக்கப்பட்டு வெளியே வந்து,நண்பருக்கு நன்றி சொல்கிறார்.நண்பர் சென்ற உடன் வீடு திரும்ப முயலும் போது போதையில் தள்ளாடி ரோட்டில் மயங்கி விழுகிறார்.



இனி போதை தெளிந்து ,பார்த்தால் ஒரு அறையில் பூட்டப்பட்டு  இருக்கிறார்.எவ்வளோ முயற்சித்தும் திறக்க முடியவில்லை.யாரும் வரவும் இல்லை.எங்கே இருக்கிறோம் என்பதும் தெரிய வில்லை. அந்த அறையில் இருப்பது ஒரு டி.வீ. மட்டுமே. அதில் செய்தியில் தன் மனைவி கொல்லப்பட்டதாகவும் ,கொலை செய்தது தான்தான் எனவும் தன்னை போலீஸ் தேடுவதாகவும் சொல்கிறார்கள்.அதிர்ச்சி அடைந்து மனம் தளர்ந்து தற்கொலைக்கு முயலும் போது எதோ ஒரு மயக்க மருந்து ரூம்  முழுவதும் செலுத்த பட்டு மயங்குகிறார்.இப்படியே தப்பிக்க முயற்சி செய்து 15 ஆண்டுகள் ஆகிவிடுகிறது .ஒரு வழியாக தப்பித்து வெளியே வந்து தன்னை யார் கடத்தினார்கள்,எதற்காக கடத்தினார்கள்,எதற்காக 15 ஆண்டுகள் எதுவுமே தெரியாமல் வைத்திருந்தார்கள் என்று விடை தேடி புறப்படுகிறான்.



இதுவரை சொன்னவை படத்தின்  தொடக்கமே. இனி தான் இருக்கிறது. ஆனால் இதற்க்கு மேல் படத்தை பற்றி சொன்னால் ஆர்வம் போய் விடும்.அடுத்தடுத்த காட்சிகள் படத்தை நகர்த்தி இறுதில் நம்மை உறைய வைக்கும் முடிவு.நிச்சயம் நம் மனதை வருந்த வைக்கும்.

இனி படத்தை பற்றி சில விஷயங்கள்:

இந்த படத்தின் இயக்குனர்   Park Chan-wook .இவர் இது போன்ற vengence (பழிவாங்குதல்) படங்கள் எடுப்பதில் தேர்ந்தவர்.இவரது பிற பிரபல படங்கள் 
 sympathy for mr.vengence, sympathy for lady vengence,joint security area  போன்றவை . இந்த படம் உங்களுக்கு பிடித்தால் sympathy for mr.vengence, sympathy for lady vengence இரண்டையும்  பாருங்கள்.

இந்த படத்தில் வரும் ஒரு பெரிய  சண்டை காட்சி  ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது.அது போல் நாயகன் ஒரு காட்சியில்  உயிருடன் உண்ணும் அக்டோபுஸ் டூப் அல்ல நிஜமே.



இந்த படம் 2004 ஆம் ஆண்டு நம்ம இயக்குனர்  Quentin Tarantino நடுவராக இருந்த cannes பட விழாவில் சிறந்த படமாக  தேர்ந்தேடுக்க பட்டது.

இந்த படம் இதுவரை IMBD யில் -8.4 rating பெற்றுள்ளது.மேலும் imdb top 250 யில் 91 இடம் பெற்றுள்ளது.

Rotten tomattoes 80% fresh என பெற்றுள்ளது.

இந்த  படம் ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய ,WILL SMITH ஆர்வமாக இருந்து STEVEN SPIELBERG இயக்க முடிவு செய்யப்பட்டு பின் பல காரணங்களால் கை விடப்பட்டது.இப்போது வேறு ஒருவர் அதை இயக்குகிறார்.

மேலும் இந்த படம் 'ZINDA' என்ற பெயரில் ஹிந்தியில் உரிமை பெறாமல் ,சஞ்சய் தத்,ஜான் அப்ரகம் நடித்து வெளிவந்தது.


டிஸ்கி:  கொரியா படம் பார்த்து பழக்கம் இல்லாதவர்கள் இந்த படத்தை நிச்சயம் பார்க்கவும்.ஏனென்றால் நானும் கொரியா படங்கள் பார்த்தது இல்லை.இதுவரை மிக சில சிறந்த படங்களே பார்த்துள்ளேன்.

             OLD BOY ----நல்ல பட ரசிகர்கள் தவற விடகூடாத  படம்.