Pages

Thursday 28 November 2013

பதிவர்களின் பொதுவான குணங்கள் என்ன?

பதிவர்களின் பொதுவான  குணங்கள் என்ன? 



தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அவனுக்கு ஓர் குணம் உண்டு என்று எப்போதோ யாரோ சொன்னதாக பாடத்தில் படித்திருக்கிறேன்.அது போல் பதிவர்கள் என்றால் பெருவாரியானவர்கள் செய்வது என்ன .அவர்கள் பகிர்வது என்ன (கவனிக்க பெருவாரியானவர்கள்).நீங்கள் நிறைய பதிவுகள் படிப்பவர் என்றால் இவற்றை  உணரலாம்.இது யாரையும் சிறுமை படுத்த அல்ல.பதிவுலக பெரிசுகள் தனிப்பட்ட முறையில் கருத வேண்டாம்.

பொதுவாக பதிவர்கள் பகிர்வது என்ன? 

யாருமே பார்க்காத படங்களுக்கு போவது (முக்கியமாய் பவர் ஸ்டார் ,ராஜகுமாரன் படங்கள் ).அங்கே நேரும் அனுபவங்களை எழுதுவது.

படம் பார்த்த அரங்கம்,டிக்கெட் விலை பாப்கார்ன் சாப்பிட்டது உட்பட கழிப்பறை சரியில்லை என்பதுவரை அனுபவங்களை பகிர்தல் .

பட விமர்சனங்களில் விகடன் ஸ்டைலில் மார்க் போடுவது அல்லது IMDB ஸ்டைலில் ரேடிங் கொடுப்பது.

புதிதாக ஏதாவது வந்தால் அதை அனுபவித்து எழுதுவது.உதாரணமாக  அம்மா உணவகம்,சின்ன பஸ்

10 நாளா பதிவு பக்கம் வரமுடியல என்று தன் பிஸி timing பற்றி அளப்பது.

வாரத்தில் ஒரு நாள் ஸ்பெஷல் பதிவு.அந்த வாரத்திலோ நடந்தது  பற்றி ஏழுதுவது ,தலைப்பில் உணவு பெயர் அல்லது கலப்படமான உணவின் பெயர்.அதில் பிடித்த பாடலின் வீடியோ பகிர்வும்  உண்டு.

விஜயை கலாய்ப்பது .ஆனால் தலைப்பில் விஜய் பெயர் போட்டு ஹிட்ஸ் பார்ப்பது.

சுஜாதவை புகழ்வது.சாருவை வாருவது

இளையாராஜா பாடல்களை ரசிப்பது.என்ன பாட்டுடா என்று சிலாகிப்பது.
 .
பயண கட்டுரை எழதுவது.பயணத்தை பிளான் பண்ணியது முதல் அங்கே சரக்கடித்து மட்டையாகியது மேற்கொண்டு வீடு வந்து சேர்ந்ததுவரை விலாவரியாக பார்ட் பார்ட்டாக எழுதுவது.நடுவில் போட்டோ பகிர்வும் உண்டு.

நேற்று டிவியில் இந்த படம்/அல்லது பாடல்  போய் கொண்டிருந்தது என்று தொடங்கி அந்த படம் தொடர்பான அல்லது அந்த படம்/பாடல் தன வாழ்வில் சம்பந்த பட்ட நிகழ்வுகளை பகிர்தல்.

டிவி நிகழ்சிகள் பற்றி முக்கியமாய் நீயா நானா பற்றி அவ்வபோது கதைப்பது.

வங்கி,திரை அரங்கம்,customer care அல்லது போலீஸ் போன்றவற்றுடன் அநியாயத்தை சந்தித்து பொங்கி எழுந்தது பற்றி பகிர்தல்.

தமிழ்மணம் சரியில்லை .அக்கிரமம் நடக்கிறது என்று புலம்புவது.

10000 ஹிட்ஸ் வழங்கியதற்கு நன்றி .100 வது பதிவு வரை நான் வந்ததற்கு நன்றி என்று நெஞ்சை நக்குவது.

வருட இறுதியில் அந்த வருடத்தில் பிடித்த/பிடிக்காத படங்களின் பட்டியல் தருவது.

இறுதியில் முக்கியமானது 

பெருவாரியானவர்கள் ரசிக்கும் படத்தை சரியில்லை என்பது அல்லது எல்லோரும் கழுவி ஊதும் படத்தை எனக்கு பிடித்திருந்தது என்பதுடன் இந்த  படத்தை நாம் கொண்டாடாவிட்டால் தமிழ் சினிமாவே கதியற்று போய் விடும் என்று வருத்தபடுவது .

உலக படங்களை பற்றி எழுதாத பதிவர்களா? 


பதிவுலகில் இருக்கும் எல்லோருமே இவற்றை கடந்து தான் வந்திருப்போம்.மேலும் ஏதாவது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் சேர்த்துவிடலாம்.

Thursday 21 November 2013

பிரியாணி --என்றென்றும் புன்னகை பாடல்கள் எப்படி?

பிரியாணி --என்றென்றும் புன்னகை பாடல்கள் எப்படி? 



ஒரு வாரத்திற்கு ஒரு புதிய படத்தின் பாடல்கள் வெளிவரும் காலம் இது.சில பாடல்கள் கேட்க்க கேட்க்க பிடிக்க தொடங்குவதற்குள் மேலும் சில படங்களின் பாடல்கள் வந்துவிடுகின்றது.இவற்றில் நான் ஓரளவு அடிக்கடி கேட்ட,கேட்டுவரும் 2 புதிய படங்களின் பாடல்களை பற்றி ஒரு அறிமுகம்.

பிரியாணி மற்றும் என்றென்றும் புன்னகை என வெளிவர காத்திருக்கும் 2 படங்கள் தான் அவை.

பிரியாணி: யுவனின் 100வது படம்.கார்த்தி நடித்துள்ள இந்த படம் அழகுராஜா படத்திற்கு முன்பே ரெடி என்ற போதிலும் அதை வெளியிடாமல் கிறிஸ்துமஸ் தினத்தில் வரும் என்று கேள்வி.8 பாடல்கள் உள்ளது  இந்த ஆல்பத்தில் .

1.பிரியாணி : புதுசாய் எதோ முயற்சித்து இருக்கிறார்கள் போல இருக்கிறது.ஆங்கில பாடல் போல தொடங்கி தமிழ் வரிகள் வழியும் பாடல்.

2.நா நானா : இந்த ஆல்பத்தின் ஹிட் நம்பர் என்றால் இந்த பாடல் தான்.மறைந்த வாலி எழுதிய இந்த பாடல் முழுதும் பே வாட்ச் பெண்கள் ,GIRLS,PATRY என்று அடிக்கிறது .இதுவரை வசனங்களில் கெட்ட  வார்த்தை வந்து பீப் சத்தம் கேட்டு இருப்போம்.இந்த படத்தில் இந்த பாடலில் எதோ ஒரு வார்த்தைக்கு இவர்களே பீப் கொடுத்திருக்கிறார்கள்.

3.போம் போம்: அமைதியான பாடல் .ஆர்பாட்டம் இல்லாத இசை.இரவில் கேட்ட்க ஏற்ற யுவன் ஸ்டைல் பாடல்.

4.மிசிஸிபி : மூட் சாங் என்று சொல்லப்படும் சல்லாப பாடல்.உதாரணமாய் அடிக்குது குளிரு (மன்னன் படத்தில்),நிலா காயுது (சகலகலா வல்லவன்) பாடல்களை போல நடுவில் பெண்ணின் சிணுங்கள் எல்லாம் உண்டு.கார்த்தியே பாடி இருப்பது சிறப்பு.நடுவில் பிரேம்ஜி வேறு எனக்கு எனக்கு என்று அலைகிறார்.

5.RUN FOR YOUR LIFE: தற்போதைய ட்ரெண்டு படி கானா பாலா பாடியுள்ள பாடல்.இறுதியில் மங்காத்தா சவுண்ட் எல்லாம் வருது .

6.எதிர்த்து நில்: சரோஜா படத்தில் நிமிர்ந்து நில் பாடலை ஞாபக படுத்தும் பாடல். விஜய் ஆண்டனி ,இமான் ,ஜி.வி.பிரகாஷ் ,தமன் என்று தற்போதைய இளம் இசை அமைப்பாளர்கள் பாடியுள்ளார்கள்.மற்றபடி படத்தோடு பார்த்தால் ஒரு வேலை பிடிக்கலாம்.

மேலும் நா நானா பாடல் மேலும் இரு வகையாய் வருகிறது.யுவனின் மற்றுமொரு ஆல்பம் என்று பார்த்தால் ஓகே.ஆனால் 100வது படம் ,வெங்கட் பிரபு கூட்டணியில் என்று பார்த்தால்  பெரிதாய் இல்லை என்றே சொல்ல வேண்டும்.படம் கூட எனக்கு சந்தேகமாய் தான் உள்ளது.கோவா படம் போல மொக்கை போட போகிறார்கள் என்று சந்தேகமாய் உள்ளது.



என்றென்றும் புன்னகை: தற்போதைய இசை அமைப்பாளர்களில் நம்பர் 1 (பொறுமை -- இசை அமைத்த படங்களின் ஹிட் சதவிகிதம் ) ஹாரிஸ் ஜெயராஜ் தான் .இது பற்றிய என் விரிவான பதிவு
http://scenecreator.blogspot.in/2013/01/1.html

வாமணன் என்ற மொக்கை படத்தை தந்த அஹ்மத் இயக்கி உள்ளார்.ஜீவா,த்ரிஷா கிழவி,வினய் ,வாசம் இழந்து வரும் சந்தானம் நடித்துள்ள படம்.இளமையான படம் என்று ட்ரைலர் பார்க்கும் போது தெரிகிறது.சரி பாடல்கள் எப்படி என்று பார்க்கலாம்.

1.ஏலே ஏலே தோஸ்து :  எதோ பைக் விளம்பரத்துக்கு போட்ட பாட்டு மாதிரி இருக்கு.அவ்வளதான்.

2.என்னை சாய்தாலே : ரொம்ப நாட்களுக்கு பின் ஹரிஹரன்.கேட்கும்படி இருக்கு .

3.கடல் தான் நான் : இந்த அல்பத்தின் ஹிட் .FM ,டிவி களில் இனி தினமும் பாடப்படும் சாத்தியம் உள்ளது.

4.வான் எங்கும் மின்ன: ஹாரிஸ் ஸ்டைல் பாடல்.அதே "டுக்- டாக்- த- டுக் " இசை கோர்வை .அதே போல ஹிட்டும் ஆகிவிடும்.

5.ஒத்தையிலே உலகம்: மெதுவாய் பாடினால் சோக பாடல் என்று யாரோ ஹாரிசுக்கு தப்பாக சொல்லி இருக்காங்க போல .அவர் போடும் சோக பாடல் என்றாலே மெதுவாக இருக்கும்.

6.என்னத்தை சொல்ல - வாரணம் ஆயிரம் அஞ்சலை வகை பாடல் .சொல்ல ஒன்றும் இல்லை.

யார் என்ன சொன்னாலும் நான் இப்படி தான் இசை அமைப்பேன்.எனக்கு ஒரு 10 TUNE  தான் தெரியும் அந்த 10 அப்படி இப்படி மாற்றி போட்டு 10 வருஷம் ஓட்டிட்டேன்.வண்டி ஓடுற  வரை ஓடட்டும் என்று ஹாரிஸ் ஜெயராஜ் நினைக்கிறார் போல .

Thursday 14 November 2013

வில்லா --பிட்சா 2 விமர்சனம்

வில்லா --பிட்சா 2 விமர்சனம் 



சென்ற ஆண்டு வெளியான பிட்சா படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதுவும் அந்த திரைக்கதை செமையாக இருக்கும்.படம் வரும் முன்பே எனக்கு அந்த படம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.அதை அந்த படம் மெய்பித்தது .இந்த வில்லா -பிட்சா 2 படம் எடுக்கிறார்கள் என்றதுமே எனக்கு ஒருவித எதிர்பார்ப்பு ஏற்படுத்திவிட்டது.ட்ரைலர் பெரிய இம்பாக்ட் கொடுக்காவிட்டாலும் படம் எப்படியும் நன்றாக இருக்கும்.பிட்சா முதல் பாகத்தில் பாதி இருந்தால் கூட போதும் என்று இருந்தேன்.தீபாவளிக்கு வந்த படங்கள் எதையும் கூட நான் இன்னும் பார்க்கவில்லை.இந்த படத்தை முதல் நாளே அடித்து பிடித்து பார்த்தேன் .படம் எப்படி பாப்போம்.

முதலில் பிட்சா முதல் பாகத்திற்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை.ஒரு சில நடிகர்கள் இதிலும் இருக்கிறார்கள் அவ்வளவே.

கதை என்ன? ஒரு இளம் எழுத்தாளன் ஜெபின் .பட தொடக்கத்திலேயே தந்தையை இழக்கிறான்.தன் சொத்துகளை இழந்து தான்  எழுதிய புத்தகத்தை பதிப்பிக்க அலைந்து கொண்டிருக்கிறான்.அவனுக்கு ஒரு காதலி ஆர்த்தி.அவள் ஒரு ஓவிய மாணவி.அந்த நேரத்தில் ஜெபின் பாண்டிச்சேரியில் தனக்கு ஒரு வில்லா (மாளிகை போன்ற வீடு ) இருப்பதை தெரிந்து கொள்கிறான்.எதனாலோ அவன் தந்தை அந்த வீட்டை அவனுக்கு தெரியாமல் வைத்து இருந்திருக்கிறார்.அந்த வீட்டை விற்க அங்கே செல்லும் அவன் அங்கு சில ஓவியங்களை பார்க்கிறான்.அதிர்கிறான்.காரணம் அவன் வாழ்வில் கடந்த சம்பவங்கள் ஓவியங்களாக அங்கே இருக்கின்றது .ஆனால் அவை அந்த சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே வரையப்பட்டவை.மேலும் அடுத்து சில ஓவியங்கள் இன்னும் அவன் வாழ்வில் நடக்காதவை.அவை இனி நடக்க போகின்றதா? அந்த வீட்டின் ரகசியம் என்ன?

என்ன கதை கேட்ட்க சுவாரஸ்யமாக இருக்கா? இவை முதல் பாதி தான்.இரண்டாம் பாதி படத்தை கெடுத்து வைத்திருக்கிறார்கள்.என்னவோ பிரெஞ்சு மந்திரவாதி ,நரபலி,நெகடிவ் எனெர்ஜி,எதிர் வினை என்று போய் கொண்டே இருக்கிறது.படம் எனக்கு கொஞ்சமும் திருப்தியை தரவில்லை.இதற்க்கா  இப்படி அலைந்து  பார்த்தோம் என்றாகிவிட்டது.

முடிவு பிட்சாவை போலவே முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து முடித்திருக்கிறார்கள்.பிட்சா 1 இல் கதை பெரிதாக இல்லாவிட்டாலும் படம் நம்மை பயமுறுத்தும்.இறுதியில் ட்விஸ்ட் அடித்து முடியும்.இந்த படத்தில் கதை வலுவானது தான்.ஆனால் திரைக்கதை தான் சொதப்பலாக இருக்கிறது.தீபன் இயக்கி இருக்கிறார்.கதை மட்டும் எழுதி கார்த்திக் சுப்புராஜிடமோ,நலன் குமாரசமியிடமோ கொடுத்து இருந்தால் அட்டகாசமாய் எடுத்திருக்க வேண்டிய படம்.சொதப்பலாக போய் விட்டது.

அட்டகத்தி,பிட்சா,சூது கவ்வும் என்று எடுத்த 3 படங்களும் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் சி.வி.குமார் கொடுத்திருக்கும் முதல் தோல்வி படம்.நல்ல வேலை விஜய சேதுபதி நடிக்கவில்லை.படம் 1.45 நேரம் தான்.முதல் பாதி ஓகே.இரண்டாம் பாதி சொதப்பல்.

Monday 28 October 2013

சென்ற 2 மாதங்களில் பார்த்த உலக படங்கள்

சென்ற 2 மாதங்களில் பார்த்த உலக படங்கள்:

பதிவெழுதி 3 மாதங்கள் ஆகிவிட்டது.நேரம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது.சில பதிவுகள் எழுத ஆரம்பித்து டிராப்டில் இருக்கிறது.சென்ற இரண்டரை மாதங்களில் நான் பார்த்து முடித்த படங்களை பற்றி இந்த பதிவு .இதில் சில படங்கள் வருடக்கணக்கில் என்னிடம் பார்க்காமல் இருந்தவை .சரி விஷயத்திற்கு வருவோம்.


5150 Elm's Way:(பிரெஞ்சு ): இந்த படத்தை பற்றி ஒரு தனி பதிவே எழுதலாம்.செஸ் விளையாட்டில் சாம்பியன் ஆன ஒரு சைக்கோ அந்நியன்  படம் போல தவறு செய்பவர்களை கொன்று பிணங்களை தனி அறையில் ஒரு செஸ் போர்டு வைத்து அதில் கருப்பு செஸ் காய்களுக்கு பதில் இந்த பிணங்களை சேர்த்து வருகிறான்.அவனிடம் சிக்கி கொண்ட ஒரு இளைஞன்.தப்பு எதுவும் செய்யாதவன் அதனால் அவனை கொள்ள அந்த சைகோவிற்கு மனமில்லை.என்னோடு செஸ் விளையாடி ஜெயித்தால் விடுதலை என்று சொல்கிறான்.தினமும் விளையாடியும் பல நாட்கள் ஆகியும் அவனை ஜெயிக்க முடியவில்லை.இறுதியில் இருவரும் காய்களுக்கு பதில் பிணங்களை நகர்த்தி விளையாடி வருகிறார்கள்.முடிவு என்ன? IMDB போன்ற தளங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள படம் .எனக்கு பிடித்து இருந்தது.

MOTHER (கொரியா ) :  ஒரு வயதான பெண்.மன நலம் சரி இல்லாத ஒரே மகன்.ஒரு கொலை வழக்கில் சிக்கும் மகனை காப்பாற்ற எத்தனை தூரம் போவாள்? ஒரு வரி கதை என்றாலும் கொரியா படங்கள் அதை எடுக்கும் விதம்.அசத்தல் .கொரியா பட ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.


STOKER : OLD BOY எடுத்த இயக்குனரின் ஆங்கில படம் என்பதால் பார்த்தேன்.நல்ல விமர்சனங்கள் என்றாலும் சூப்பர் என்றெல்லாம் சொல்ல முடியாது.ஆனாலும் இயக்குனரின் ஸ்டைல் சில இடங்களில் தெரிகிறது.ஜஸ்ட் ஓகே படம்.

SHUTTER ISLAND: என்னது இப்பதான் இந்த படத்தை பாக்கறியா என்று கேட்கிறீர்களா? என்ன செய்வது படம் 2 வருடங்களுக்கு மேல் என்னிடம் உள்ளது .படம் வந்த சமயம் எவனோ புண்ணியவான் படத்தின் முடிவை முக்கய விஷயங்களை எழுதிவிட்டான்.நானும் படித்து தொலைத்துவிட்டேன்.ஒரு நாள் திடீர் என்று முடிவு தெரியும் இருந்தாலும் பார்க்கலாம் என்று பார்த்தேன்.முடிவு தெரியாமல் பார்த்திருந்தால் எனக்கு இன்னும் பிடித்திருக்கும் .இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் புரியவில்லை தான்.

ZODIAC: 1960களின் இறுதியில் ஊரில் கொலைகள் நடக்கிறது.கொலையாளி யார் என்று போலீஸ் தேட ஒரு கார்டூனிஸ்ட் தனியே அந்த கொலைகாரனை கண்டு பிடிக்க முயற்சிக்கிறான்.நல்ல படம் தான்.என்ன 1.45 மணி நேரத்தில் எடுத்திருக்க வேண்டிய படத்தை 2.20 நேரம் எடுத்து பல தடவை கொட்டாவி வர வைத்துவிட்டார்கள்.ரொம்ப ஸ்லோ.

NOW YOU SEE ME: நிறைய பேர் பார்த்துவிட்டு இருப்பீர்கள்.படம் சூப்பர் தான் என்ன கிளைமாக்ஸ் நான் முதலிலே யூகித்துவிட்டேன்.

CURSE OF CHUCKY: CHILD'S PLAY படம் பார்திருக்ரீர்களா? பார்க்கவிட்டால் முதல் பாகத்தை பாருங்கள்.செம படம் .இந்த படம் அதன் 6ஆம் பாகமோ என்னவோ.15 வருடம் கழித்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.மொக்கை படம்.

THE GIRL NEXT DOOR:  ஒரு மாணவன் தன்  பக்கத்துக்கு வீட்டிற்க்கு புதிதாய் வந்துள்ள பெண்ணை விரும்புகிறான்.அவளும் விரும்ப அவள் ஒரு முன்னாள் நீல பட நடிகை  என்று தெரித்தால்? ஹீரோயின் அழகா இருந்தது.மற்றபடி அடல்ட் காமெடி என்று சொன்னார்கள் .ஒரு சிரிப்பும் இல்லை.

THE MAN FROM NOWHERE:  மீண்டும் ஒரு செம கொரியா படம்.நிறைய பேர் பார்த்திருப்பீர்கள்..இந்த படமும் என்னிடம் ரொம்ப நாளாய் இருந்தது.

அதோடு I SPIT ON YOUR GRAVE,IN THEIR SKIN,SATURDAY MORNING MYSTERY,TOOLBOX MUDERS போன்ற படங்களும் பார்த்தேன்.சொல்லும் அளவிற்கு அந்த படங்கள் இல்லை. அதனால் இதோடு முடித்து கொள்வோம்.

Tuesday 20 August 2013

தமிழ் இயக்குனர்களிடம் இன்னமும் எதிர்பார்க்கலாமா ?

டாப் தமிழ் இயக்குனர்களிடம் இன்னமும் எதிர்பார்க்கலாமா ?

ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு இயக்குனரின் பங்கு முதன்மையானது.அப்படி பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் பலர் தற்போது சறுக்கி வருகிறார்கள்.சரி இந்த இயக்குனர் படமா என்று எதிர்பார்த்து படம் வந்த பின் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.இந்த விஷயம் நடிகர்களின் படங்களுக்கும் சேர்த்துதான்.இப்போது இயக்குனர்களின் மீது மட்டும் அலசி சமீப ,தற்போதைய படங்களின் வெற்றி தோல்வி போன்றவற்றை பார்க்கலாம்.

இந்த பதிவை  ஒரு சராசரி ரசிகனாய் எனது பார்வையில் எழுதியுள்ளேன்.

மணிரத்னம்,ஷங்கர்,பாலா ,கவுதம் மேனன்,மிஷ்கின்,செல்வராகவன்,பாலாஜி சக்திவேல்,பிரபு சாலமன்,அமீர்,வசந்தபாலன்,வெற்றி மாறன்,விஜய்  போன்ற கிளாஸ் பட இயக்குனர்களையும் லிங்குசாமி,ஹரி,முருகதாஸ்,வெங்கட் பிரபு,எம்.ராஜேஷ்,கே.எஸ்.ரவிக்குமார்,சமுத்ரகனி,போன்ற வர்த்தக பட இயக்குனர்களையும் எடுத்து கொள்வோம் .

கிளாஸ் இயக்குனர்கள்:



மணிரத்னம்: கடைசியாய் எப்ப ஹிட் கொடுத்தார் என்று யாருக்காவது ஞாபகம் இருக்கா? இருக்காதே.அதான் அவர் பலம்.என்ன எடுத்தாளும் பார்க்க ஒரு கூட்டம் இருக்கு எனக்கு அது போதாதா என்று நினைக்கிறார் போலும் .அலைபாயுதே கடைசி ஹிட்,கன்னத்தில் முத்தமிட்டால்,ஆயுத எழுத்து,குரு,ராவணன் ,கடல் என்று அவர் பாட்டுக்கு மொக்கையாய் எடுத்து தள்ளி கொண்டிருக்கிறார்.இனியும் மக்கள் ரசிக்கும் படி ஒரு ஹிட் படம் கொடுப்பார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.உங்களுக்கு ?

ஷங்கர் : இப்போது எடுத்து கொண்டிருக்கும் ஐ படம் அவருக்கு ஒரு பரீட்சை.பல புதிய சின்ன பட இயக்குனர்கள் கவன பெற்றுள்ள நிலையில் இன்னமும் அவர் முன்னிறுத்தும் பிரம்மாண்டம் மக்களை கவருமா ? பாப்போம்.

பாலா: என்ன சொல்வது என்று தெரியவில்லை.ஆனால் நம்பிக்கை உள்ளது பாலா மேல்.

கவுதம் மேனன் : OVER RATED இயக்குனர் என்றால் இவர்தான்.மணிரத்னம் கதை தான் இவருக்கும்.நீதானே என் பொன்வசந்தம்,நடு நிசி நாய் ,என்று 2 படு தோல்விகள்.காக்க காக்க,வேட்டையாடு,பச்சைக்கிளி 3 படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதன் பின் எடுத்த வாரணம் 1000,விண்ணைத்தாண்டி வருவாயா எனக்கு பிடிக்கவில்லை.மீண்டும் ஆக்க்ஷன் படம் எடுத்தால் ஒரு வேலை ஜெயிக்கலாம்.ஆமை வேகத்தில்  நகரும் காதல் படங்களா?ஆளை விடுடா சாமீ 

மிஷ்கின்: கிராப் இறங்கிக்கொண்டே வந்துள்ளது இவருக்கு. அஞ்சாதே,யுத்தம் செய்,முகமூடி ஒவ்வொரு படத்தைவிட முந்தய படம் நன்றாக இருந்திருக்கும் .நந்தலாலா பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.சரியான நேரத்தில் வந்திருந்தால்  ஒருவேளை ஓடி இருக்கலாம்.சொந்தமாக ஓநாயும்  ஆட்டு குட்டியும் எடுத்து வருகிறார்.நான் இன்னமும் நம்பிக்கை இழக்க வில்லை மிஷ்கின் மேல்.

செல்வராகவன் :அவர் மனபோக்கை பார்த்தால் இன்னும் 2 அல்லது 3 படம் எடுத்து அதோடு சினிமாவுக்கே குட்பை சொல்லிவிடுவார் போல.அந்த அளவிற்கு மனம் நொந்து உள்ளார்.பெரிய அளவில் யோசிக்கிறார்.அதற்க்கு பெரிய நடிகர்கள் வேணும் அப்போதான் வியாபாரம் ஆகும்.ஆனால் பெரிய நடிகர்களோடு போக இவருக்கு மனமில்லை.ஆர்யா ,கார்த்தி போன்றவர்களை வைத்துகொண்டு 60,70 கோடி பட்ஜெட் படம் எடுத்தால் எப்படி?அவர் யோசிக்கவேண்டும்.

பாலாஜி சக்திவேல்: இவருக்கும் கிராப் இறங்குமுகம்.காதலுக்கு பிறகு எடுத்த கல்லூரி ,வழக்கு எண் போன்ற படங்கள் எல்லோரையும் கவரவில்லை.ஆனாலும் காத்திருக்கலாம் இவர் படங்களுக்காக.

பிரபு சாலமன் : எனக்கு என்னமோ அவர் மீது வெளிச்சம் வரும் முன் அவர் எடுத்த கொக்கி,லாடம் போன்ற (டார்க் வகை படங்கள் )படங்களே நன்றாக இருந்தது  போல் உள்ளது.காதல் படங்களில்(மைனா,கும்கி) இவரும்  இறங்கி விட்டார்.பார்க்கலாம்.

அமீர்: ONE FILM WONDER போல என்று யோசிக்க வைத்து வருகிறார்.ஒரு வேலை இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் பெப்சி ,இயக்குனர்கள் சங்கம் என்று போய் விட்டதால்  இருக்குமோ.எனக்கு இவர் மீது நம்பிக்கை இல்லை.

வசந்த பாலன்: கண்டிப்பாக இவருக்கு தவிர்க்க முடியாத இடம் உண்டு.ஒரு அடையாளம் உண்டு.வெயில்,அங்காடி தெரு என்று அசத்தி  இருந்தார்.அரவான் சறுக்கினாலும் இப்போது எடுத்துவரும் காவிய தலைவனுக்காக காத்திருக்கிறேன்.

வெற்றி மாறன்: எனக்கு ஆடுகளத்தை விட பொல்லாதவன் தான் பிடிக்கும்.அருமையாய் கதை சொல்ல தெரிந்த இயக்குனர்.என்ன 3 வருஷம் ஆகியும் இன்னும் அடுத்த படம் ஆரம்பிக்காமல் இருக்கிறார்.நம்பிக்கைக்குரிய இயக்குனர்.

விஜய்: ஆமை வேக திரைக்கதை என்றால் இவர் படங்கள் தான்.மதராசபட்டினம் ,தாண்டவம் இரண்டும் என் பொறுமையை சோதித்த படங்கள்.விஜய் எப்படி இவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று தெரியவில்லை.

COMMERICAL பட இயக்குனர்கள் பற்றி அடுத்த பதிவில் 

இது என் ரசனை அளவில் .

Tuesday 6 August 2013

THE CONJURING --- டெம்ப்ளட் பேய் படம்

THE CONJURING --- டெம்ப்ளட் பேய் படம் 




எனது 100 வது பதிவு. இது.பதிவு எழுத தொடங்கும்போது 100 பதிவு போடுவேன் என்று நினைத்ததில்லை.ஒரு ஆசையில் ரொம்ப நாளாய் படித்து கொண்டே இருக்கிறோமே நாமே எழுதுவோம் என்று தொடங்கியது.என் பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கும் ,அவ்வபோது படிப்பவர்களுக்கும் நன்றி.


சமீப காலங்களில்  இப்படி ஒரு பேய் படம் பார்த்ததில்லை .
ஆஹா ,மிரட்டி இருக்கிறார்கள்.
இந்த படம் பார்த்துவிட்டு வந்தால் பகலிலேயே பயமாக இருக்கிறது.
THE EXORCIST, THE AMITYVILLE HORROR போன்ற படங்களை பார்த்தது போல் இருந்தது.
IMDB RATING -8.0
ROTTEN TOMATOES- 97% FRESH
படம் வந்த 2 வாரங்களிலேயே $ 136,000,000 வசூல்.
மேலும் 
நம்ம ஊரில் 

TIMES OF INDIA-- 3.5/5
THE HINDU-- VERY GOOD SCARY FILM 
CNN IBN -3.5 

இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் ,ஆஹா அற்புதம் என்று பேச்சு.HORROR பட ரசிகனாய் இருந்துவிட்டு இந்த படத்தை ;பற்றி இப்படி கேள்விப்பட்டு அஹா செம வேட்டை நமக்கு என்று நினைத்தேன் ,இதுவரை ஆங்கில HORROR படத்தை திரை அரங்கில் போய்  பார்த்தது கிடையாது.பெரும்பாலும் இந்தியாவில் ரிலீஸ் இருக்காது.இந்த படம் இப்போது இங்கே வந்துள்ளது.போகலாமா என்று எண்ணம் தோன்றியது.

டவுன்லோட் செய்ய நல்ல பிரிண்ட் சப் டைட்டில் எல்லாம் வர சில வாரங்களாவது பிடிக்கும்.அதற்குள் பார்த்தாக வேண்டுமே.சரி என்று என் நண்பன் செல்வாவிற்கு போன் செய்து இந்த படத்தை பற்றி சொன்னேன்.அவனும்  ட்ரைலர் பார்த்து ஆர்வமாகி இன்று போகலாமா பார் என்றான்.சரி என்று நெட்டில் எந்த தியேட்டர் என்று தேடினேன்.கீழ்பாக்கம் சங்கம் அரங்கம் என்று முடிவு செய்து நேற்று 5-AUG  இரவு 7 மணி காட்சி  போனோம்.அரங்கம் முக்கால்வாசி நிரம்பியது.

சரி படம் எப்படி ? அதானே .அதை பற்றி எழுத ஒன்றும் இல்லாததால் தானே இவ்வளோ போன கதை எல்லாம் எழுதி கொண்டிருக்கிறேன்.அட என்ன சொல்றே என்று கேட்கிறீர்களா ?  நீங்கள் இது வரை ஒரு பேய் படத்தில் ஒரு தனி வீடு,அங்கே வரும் ஒரு குடும்பம் ,அந்த வீட்டில் ஏற்கனவே உள்ள பேய் .அங்கே நடக்கும் சம்பவங்கள் என்று ஏதாவது படம் பார்திருகிறீர்களா ? அட அதான் எல்லா பேய் படத்திலும் இருக்கிறதே என்று கேட்கிறீர்களா ? இந்த படமும் அதே கதை தான்.


கமல் நடித்த தசாவதாரம் படத்தில் தொடக்கத்தில் வந்த நம்பி கதை அருமையாய் இருக்கும் .அதை தனி படமாகவே எடுத்திருக்கலாம் என்று சில .விமர்சனத்தில் படித்தேன்.இந்த படத்தின் ஆரம்பத்தில் ஒரு கதை வருகிறது .ஒரு பொம்மை அதில் பேய் .அந்த பொம்மை தூக்கி போட்டாலும் திரும்ப வருவது என்று கொஞ்சம் அதுவே நன்றாக இருந்தது.அதையே முழு படமாகே எடுத்து இருக்கலாம் போல.அதன் பிறகு வேறு ஒரு குடும்பம் என்று போர் அடிக்க தொடங்குகிறது.இறுதி 15 நிமிடங்கள் கொஞ்சமா ஓகே.என்ன கதை 1971 இல் நடப்பது போல் இருப்பதால் கொஞ்சம் ரசனையாக படம் இருக்கு.திரை அரங்கில் என்னவோ மக்கள் கை தட்டி ஆரவாரத்தோடு தான் பார்கிறார்கள்.எங்களுக்கு தான் அவ்வளாக ஒன்று தெரியவில்லை.

மொத்தத்தில் நீங்கள் தீவிர பேய் பட ரசிகர்,பேய் படங்கள் நிறைய பார்த்திருக்கேன் என்றால் இந்த படம் உங்களுக்கு சப்பையாய் போய் விடும்.இது வரை ஒரு சில பேய் படங்களே பார்த்திருப்பேன் என்பவர்கள் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்( எந்த பேய் படத்தையும் ).உங்களுக்கு பிடிக்கலாம்.

நம்பி ஏமார்ந்தோம்.

Tuesday 30 July 2013

HORRIBLE BOSSES (2011) : இது காமெடி படமாம்

HORRIBLE BOSSES (2011) : இது காமெடி படமாம் 



நம் எல்லோருக்குமே நம்மை ஏய்த்து விரட்டுபவர்களை பிடிக்காது.அதுவே விரட்டுபவர் வேளையில் நமது பாஸாக இருந்தால்? அதுவும் ஒரு அளவிற்கு மேல் ஆகிவிட்டால்? இதற்க்கு மேல் பொறுக்க  முடியாது ,அதுக்காக வேறு வேலைக்கும் செல்ல இது தருணம் அல்ல.காரணம் எல்லா இடங்களிலுமே உள்ள பொருளாதார நெருக்கடி அதனால் வேலையின்மை .

முதலில் நிக் .பல மாதங்களாக பல மணி நேரம் கடுமையாய் உழைத்தும் சில்லி காரணங்களுக்காக  தன்  பனி உயர்வை தடுத்த தன்  பாஸ் மீது வெறி கொண்டுள்ள நிக்.

அடுத்து டே. ஒரு பெண் பல் மருத்துவரிடம் உதவியாளனாக இருப்பவன்.தன் காதலியை கரம் பிடிக்க இருப்பவன்.ஆனால் அவன் பணி புரியும் பெண் மருத்துவர் இவனிடம் காம கண்ணோடு இவனை அடைய பார்க்கிறார்.தன்  காதலியிடம் தன்னை பற்றி தப்பாக போட்டு கொடுப்பேன் என்று சொல்லி மிரட்டியதால் என்ன செய்வது என்று தெரியாமலும் ஆனாலும் அவள் ஆசைக்கு இணங்க முடியாமலும் தன் பாஸ் மீது கொலைவெறி கொண்டுள்ளான்.

அடுத்து கார்ட் .ஒரு நல்ல மனிதரிடம் வேலை செய்கிறான்.அவன் நேரம் அந்த முதலாளி இறந்து போகிறார்.அந்த இடத்திற்கு வரும் முதலாளி  மகன் ஒரு திமிர் பிடித்த,பெண் பித்தன்.அவனிடம் மாட்டி கொண்டிருக்கிறான் கார்ட் .



இந்த மூவரும் ஒரு குடி சந்திப்பில் தத்தமது மனக்குறையை பேசி வேலை மாறலாம் என்று முடிவெடுக்கும்போது அங்கே தங்கள் பழைய நண்பன் உயர்ந்த வேளையில் இருந்து தற்போது கஷ்டப்பட்டு வருவதை அறிந்து வேலையை விடுவதை கை விடுகிறார்கள்.அதன் பின் நல்ல ஒரு ரவுடியை தேடி அலைந்து அவனிடம் ஏமார்ந்து பின் ஒவ்வொருவரும் இன்னொருவரின் பாஸை காலி செய்ய முடிவெடுக்கிறார்கள்.

அதன் பின் நடக்கும் சாகசங்களை கொஞ்சமே  புன்னைகைக்கும் வகையில் சொல்லி இருக்கிறார்கள்.பெரிய அளவு வெடித்து சிரிக்கும் அளவிற்கு எல்லாம் படம் இல்லை.ஆனால் இந்த படம் 6.9 IMDB RATING பெற்றுள்ளது.ரொம்ப ஓவர்.இந்த படம் தயாரிப்பு நிறுவனத்தால் ஓகே ஆகியும்  5 ஆண்டுகளுக்கு மேல் படபிடிப்பு தொடங்கபடாமலேயே   இருந்ததாம்.

2011 இல் வெளி வந்த இந்த படம் மிக பெரிய வெற்றியாம்.அது சரி ஓகே ஓகே,கேடி பில்லா கில்லாடி  ரங்கா வகை மொக்கை படங்கள் இங்கே ஹிட்டாக ஓடவில்லையா? இந்த படம் 2ஆம் பாகம் வர உள்ளதாம் .எஸ்கேப் .

அது சரி எனக்கு HANGOVER படமே பெரிய காமெடியாய்  தெரியவில்லை.அனாலும் இங்கே இருக்கும் நம்ம ஆட்கள்  அதையே கிளாசிக் காமெடி என்று சொல்லி பல முறை பார்த்து கொண்டாடினார்கள்.அனாலும் அவர்கள்  நம் மைக்கேல்  மதன காமராஜன் படத்தை கூட நொள்ளை சொல்வார்கள்.அது தான் பிரச்சனையே .

Saturday 27 July 2013

45 நாள்---30 ஆங்கில படங்கள் --PART- 3

45 நாள்---30 ஆங்கில படங்கள் --PART- 3

பார்த்த 30 படங்களில் சூப்பர் என்று சொல்லகூடிய லிஸ்ட் இது :

இதில் 3 படங்களுக்கு சக பதிவர்களின் லிங்க் கொடுத்து உள்ளேன்.அதை விட சிறப்பாக எழுதிவிட முடியாது என்பதால் அவர்களின் பதிவே இங்கே முறை.



The Hidden Face (2011):

உங்களுக்கு பிடித்தமானவர்கள் உதாரணமாய் உங்கள் கணவனோ ,மனைவியோ அல்லது காதலரோ காதலியோ (மணம்  ஆகாமல் ஒன்றாய் இருப்பது இந்தியாவில் சாத்தியமோ) நீங்கள் இல்லாத போது அவர் என்ன செய்வார் என்பதை பார்க்க நினைத்தால் ? அதுவும் மிக அருகில் இருந்து (கேமரா வைத்து எல்லாம் இல்லை)

தன்னை விட்டு பிரிந்து ஓடிவிட்ட காதலி அவன் பார்பதற்காக ஒரு வீடியோவில் பேசி, தான் போவதாகவும் வேறு ஒருவனை விரும்புவதாகவும் சொல்கிறாள்.அதனால் வெறுப்பு அடையும் அவன் குடிக்க போன இடத்தில வேறு ஒருவளை சந்தித்து, அவளுடன் நட்பாகி அவளை தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து அவளோடு உறவு கொள்கிறான்.

முன் கதை : இசை நடத்துனரான அந்த நாயகன் தன் குழுவில் உள்ள ஒரு பெண்ணோடு உறவு உள்ளதாக நினைக்கிறாள் காதலி.அந்த வீட்டின் உரிமையாளரான ஒரு வயதான பெண்ணிடம்(வேறு ஊரில் வசிப்பவர் ) தன் எண்ணத்தை சொல்கிறாள்.அந்த வீடு ஒரு வித்யாசமான வீடு .வீட்டிற்கு  நடுவில் ஒரு சிறு இருட்டு அறை .ஆனால் வெளியில்  இருந்து பார்த்தல்  வெறும் பீரோ,கண்ணாடி ,சுவர் என்றே தெரியும்.அதன் உள்ளே செல்லும் வழியும் தெரியும்படி இருக்காது. ஒரு பக்க முகம் பார்க்கும் கண்ணாடியும் பின் பக்கம் சாதாரண கண்ணாடியும் உள்ளதால் வீடு முழுதும் என்ன நடக்கிறது என்று அந்த அறையில் இருந்தே பார்க்கலாம். இந்த விஷயம் அந்த உரிமையாளர் பெண் சொல்லித்தான் காதலிக்கு தெரிய வருகிறது.மேலும் உண்மையை கண்டுபிடிக்க அந்த அறையில் தங்கிவிட்டால் போதும் என்கிறாள்.சரி என்று ஒரு காமெராவில் தான் அவனை விட்டு போவாத சொல்லி மறைகிறாள்.மறைந்த இடத்தில உள்ளே வந்து பூட்டிய இடத்தில சாவி தொலைகிறது.என்ன கத்தினாலும் கேட்காது.அப்படி ஒரு அறை  இருப்பதே காதலனுக்கு தெரியாது.அவள் எப்படி வெளியே வருகிறாள்? 

ஸ்பானிஷ் மொழி படம் .2011 வந்தது.ஹிந்தியில் வெளி வந்த murder 3 இந்த படத்தின் அதிகார பூர்வமான ரீமேக் .

வித்யாசமான படம் பார்க்க விரும்புகிறவர்கள் பார்க்கலாம்.

Coldfish: ஒரு மனிதனை கொன்றால் அப்படி ஒருவன் இருந்ததற்கே அடையாளம் இல்லாமல் அழிப்பது எப்படி என்பதை ஆற அமர துண்டு துண்டாக வெட்டி ரத்தம் எல்லாம் எடுத்து எலும்பை தனியாக எடுத்து எரித்து அதை நதியில் கொட்டி ,வெட்டிய அறையை சுத்தம் செய்வது வரை முழுவதும் விலாவரியாக காட்டுகிறார்கள்.கதை எல்லாம் பெரிதாக இல்லை.

ஒரு கணவன் மனைவி.சிறய மீன் கடை நடத்தி வருகிறார்கள்.அவர்களுக்கு ஒரு பெண்.அந்த பெண்ணை இன்னொரு பெரிய மீன் கடையில் வேலைக்கு சேர்க்கிறார்கள்.அந்த கடையின் உரிமையாளரும் அவன் மனைவியும் சைக்கோ கொலைகாரர்கள்.அவர்களிடம் சிக்கும் அந்த சிறைய கடையின் கணவன்.அவனை அடிமையாக்கி கொலைகளுக்கு உதவ வைக்கிறார்கள்.அவன் என்ன செய்தான் என்பதே படம். ஜப்பானிய படங்கள் பார்பவர்களுக்கு இந்த படம் ஒரு ட்ரீட் .ரசனையான படம்.

Bedevilled (2010) : வங்கி ஒன்றில் பணி புரியும் ஹெவோன் விடுமுறைக்காக தான் வளர்ந்த தீவிற்கு போகிறாள் .தற்போது அங்கு இருப்பது மொத்தமே ஒரு 10 பேர் தான்.சிறு வயதில் தன் தோழியான போக்னம் வீட்டில் தங்குகிறாள்.அவளுக்கு 10-12 வயதில் ஒரு பெண்.அவள் கணவன் முரடன்.அவன் தம்பி ஒரு பெண்பித்தன்.தன அண்ணன் மனைவியையே அவ்வபோது உறவு கொள்கிறான்.வந்திருக்கும் தோழி மீது ஒரு கண்.மற்றவர்கள் கடுமையான மக்கள் .ஈவு இரக்கம் இல்லாதவர்கள்.ஒரு நாள் ஒரு சண்டையில் அவள் சிறு பெண் இறக்கிறாள்.அதனால் வெறி வந்த போக்னம் அந்த தீவின் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கொடூரமாக கொள்கிறாள்.அவள் வீட்டிற்கு வந்திருக்கும் தோழி? இந்த ஆசிய கொரியா படங்கள் கதை என்பது பெரிதாக இல்லாவிட்டாலும் மேகிங்கில் அசத்தி விடுகிறார்கள்.


Memories of Murder (2003): நான் பார்த்த இந்த சூப்பர் லிஸ்டில் இந்த படத்திற்கு தான் நம்பர்  1 .அவ்வளோ சூப்பர் படம்.நம் யுத்தம் செய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .

ஜாக்கி சேகர் எழுதிய இந்த படத்தின் விமர்சனம் 


City Of God (2002) : இந்த படத்தை எனக்கு அறிமுகம் செய்தவர் பதிவர் ஹாலிவுட் ராஜ் .அவர் எழுதிய விமர்சனம் லிங்க் 
 

Mulholland Drive (2001): 

இந்த படத்தை பற்றி இதற்க்கு மேல் எழுத ஒன்றும் இல்லை.என்று சொல்லும் அளவிற்கு கீதபிரியன் எழுதி  இருக்கிறார்.அவ்வளோ விஷயம் இருக்கு இந்த படத்தில் .படத்தில் .

இந்த படத்தின் டிவிடியில் இயக்குனர் ஒரு பத்து கேள்வி எழுப்பி உள்ளார்.அதற்கும் கீதபிரியன் தனி பதிவில் விளக்கம் எழுதி இருக்கிறார்.படத்தை பார்த்து உள்ளவர்களுக்கு இந்த லிங்க் ஒரு ஆச்சர்யம்.அந்த லிங்க் 

அடுத்த பதிவில் 45 படங்களில் சுமார் படங்கள் 

இதன் முந்தய பகுதிகள் 

45 நாள் ---30 ஆங்கில படங்கள்:பகுதி 1   : 

45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-2

Monday 15 July 2013

45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-2

45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-2

பார்த்தது 30 படங்கள் என்றாலும் அதில் தேறியது என்னவோ 6 படங்கள் தான் சூப்பர் ரகம் .மேலும் 7 அல்லது 8 படங்கள் ஓகே ரகம்  ,மற்றவை மொக்கை தான் .


இவற்றில் 

சூப்பர் என்று சொல்ல கூடிய படங்கள் : 

1.Memories of murder (2003)
2.Cold fish (2010)
3.Mullholland drive (2001)
4.City of god (2002)
5.The hidden face (2011)
6.Bedevilled (2010)

ஜஸ்ட் ஓகே .ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்ல கூடிய படங்கள்.

1.Stir of echos (1999)
2.The vanishing (1988)
3.100 feet (2008)
4.Chained (2012)
5.Mindhunters (2004)
6.Restraint (2008)
7.Texas 3d (2013) 
8.Halloween (2007)

மொக்கையாய் நேரத்தை வீண் அடித்த படங்கள் :

1.The shrine (2010)
2.The tallman (2012)
3.The Barrens (2012)
4.Absentia (2012)
5.American Mary (2012)
6.Fragile (2005)
7.Insomnia (2002)---- CHRISTPER NOLAN படமாம்.
8.House (2008)
9.Intruders (2011)
10.Lakeview terrace (2008)
11.Mama (2013) 
12.The crazies (2010)
13.The Ferryman (2007)
14.The pact (2012)
15.The collection (2012)
16.The Echo (2008)
17.The gravedancers (2006)
18.The Killing floor (2006)
19.The Mothman propecies (2002)
20.Unknown (2011)
21.Grave Encounters (2011) 

இவை தவிர 88 Minutes, shame (2011), contagion (2011) இந்த படங்களை பார்க்க தொடங்கி பார்க்க முடியாத அளவிற்கு மொக்கையாய் இருந்ததால் நிறுத்தி விட்டேன்.

மேற் சொன்ன 3 லிஸ்ட்களில் சூப்பர் படங்களை பற்றி தனித்தனி  பதிவுகளும் ,ஜஸ்ட் ஓகே படங்களை ஒரே பதிவில் எழுத திட்டமிட்டுளேன். பார்க்கலாம். 


45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-1

இந்த பதிவின் முதல் பகுதி லிங்க் 



Saturday 29 June 2013

45 நாள் ---30 ஆங்கில படங்கள்:

45 நாள் ---30 ஆங்கில படங்கள்: 

என் பதிவுகள் படித்திருப்பவர்களுக்கு எனக்கு எப்படி பட்ட ஆங்கில படங்கள் பிடிக்கும் என்று ஓரளவு தெரிந்திருக்கலாம்.எனக்கு பரபரப்பான ,த்ரில்லான படங்கள் பிடிக்கும் .கவிதையாய் ஆமை வேகத்தில் நகரும் படங்கள் பிடிக்காது.அதே சமயம் "THE BUTTERFLY EFFECT" மற்றும்   "TRIANGLE" போன்ற குழப்பி அடிக்கும் படங்கள் பிடிக்கும் என்று சொல்வதா இல்லை பிடிக்காது என்று சொல்வதா என்று ஒரே குழப்பம்.நான் குழம்பி உங்களை குழப்புகிறேனோ ? போதும் அறிமுக பத்தி .



மே 1 முதல் ஜூன் 15 வரை 45 நாட்கள் .எனக்கு வீட்டில் நான் மட்டும்.மனைவி குழந்தை இருவரும் மனைவியின்  வீட்டிற்கு போய் இருந்தார்கள்.எனக்கு பிரச்சனை என்னவென்றால் வீட்டில் மனைவி ,பையன் இருந்தால் நிச்சயம் சேர்ந்தாற்போல் ஒரு அரை மணி நேரம் படம் பார்க்க முடியவில்லை.அதற்குள் பலமுறை அழைக்கபடுவேன்.கணினியில் பார்க்கலாம் என்றால் இந்த பிரச்சனை என்றால் சரி PEN டிரைவில் காப்பி செய்து டிவியில் போட்டு பார்க்கலாம் என்றால் அந்த படங்களில் வரும் ஆபாச வசனங்களை காது கொடுத்து கேட்க்க முடியாத  மனைவியிடம் திட்டு வாங்க முடியவில்லை.குறைந்த பட்சம்  F_CK இந்த வார்த்தை இல்லாத ஆங்கில படங்களே  வருவதில்லை என்று சொல்லும்படி உள்ளது.எவ்வளவோ எடுத்து சொல்லியும் என் மனைவி கேட்பதில்லை .நான் என் வீட்டிற்கு போய் இருக்கும் நாட்களில் இந்த படம் எல்லாம் பாருங்கள் என்று முடிவாக சொல்லி விடுவதால் நானும் அதோடு விட்டு விடுகிறேன்.வீட்டில் நான் அம்மா வீட்டிற்கு  போய் 1 மாதம் இருக்க போகிறேன் என்றதும் எனக்கு செம ஜாலி .காரணம் இதுவரை பார்க்காமல் இருக்கும் உலக ,ஆங்கில படங்கள் பார்க்கலாமே.எனக்கு செம வேட்டை.அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் போல் நண்பர்களுக்கு போன் போட்டு பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா  என்று சொல்லி கொண்டிருந்தேன்.

என் டார்கெட் 45 நாளில் 45 படம் என்பது ஆனால் பார்த்தது 30 படங்கள் மட்டுமே.காரணம் IPL.

என் அலுவலக பணி காலை 8 முதல் 2 வரை அல்லது மதியம் 2 முதல் 8 வரை.இருந்தாலும் நான் வீட்டில் இருந்தே LOG-IN செய்து வேலை செய்ய முடியும் என்பதால் பணி  நேரம் என்பது அவ்வுளவு STRICT கிடையாது.இந்த 45 நாட்களில் தினசரி இரவு 8 வரை என் அலுவலக பணிகள். 8-11.00 அல்லது 11.30 IPL. அதன் பின் 11.30 முதல் 1 மணி அல்லது படம் முடியும் வரை என தினசரி ஒரு படம் என்று ஒரு வெறியோடு படம் பார்த்தேன்.காலையில் எழ முடியாமல் கஷ்டப்பட்டு எழுந்து வேலையை பார்த்தாலும் அன்று இரவும் அதே அட்டவனைதான்.

இடையில் வார இறுதியில் நன்றாக இருப்பதாய்  கேள்விப்பட்ட சில தமிழ் படங்கள் (சூது கவ்வும் உட்பட சில படங்கள்) பார்த்தேன்.ஏப்ரலில் கடைசியாக பதிவு போட்ட நான் அதோடு ஜூன் நடுவில் தான் .அந்த அளவிக்கு பிஸி .நடுவில் சில சுப ,துக்க நிகழ்வுகள் என்று சொந்த ஊர் (பக்கத்தில் தான் காஞ்சிபுரம்) செல்லும் வேலை வேறு .

நடுவில் சில படங்களுக்கு எழுத ஆரம்பித்து டிராப்டில் உறங்குகிறது.அப்படி சேர்த்து சேர்த்து விட்டதால் அப்படியே விட்டு விட்டேன்.30 படம் பார்த்தாலும் அதில் தேறியது  என்னவோ 5 அல்லது 6 தான். மேலும் ஒரு 6 அல்லது 7 படங்கள் ஓகே ராகம் .மற்றதெல்லாம். நேரம் தான் வேஸ்ட்.இருந்தாலும் சமீப காலங்களில் இத்தனை தொடர்ச்சியாக படங்கள் பார்த்தது கிடையாது.பாருங்கள் என் வீட்டிற்கு மனைவி திரும்பி 10 நாட்களுக்கு மேல் ஆகிறது .ஒரு ஆங்கில படம் ஏன் ஒரு அரை மணி நேரம் கூட காண முடியவில்லை. 

அதனால் திருமணம் ஆகாத சக பதிவர்களே,இதை படிக்கும் உலக பட ரசிகர்களே திருமணம் ஆகும் முன்பே முடிந்தவரை படங்கள் பாருங்கள்.அதன் பின் நினைத்தாலும் நினைத்த நேரத்தில் முடியாது.



இது 30 படம் பார்த்த முன் கதை.பார்த்த 30 படங்கள் பற்றி அடுத்த பதிவில்.

Friday 21 June 2013

தில்லு முல்லு --தீயா வேலை செய்யணும் எது பெட்டர் ? ஒரு ஒப்பீடு

தில்லு முல்லு  --தீயா வேலை செய்யணும் எது பெட்டர் ? ஒரு ஒப்பீடு 


இரண்டு படங்களும் ஒரே நாளில் வந்துள்ளது  .இரண்டு படங்களின் மீதும் சிறிதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன்.என் நண்பனிடமும் இரண்டுமே தேறாது என்று தான் சொல்லி கொண்டு இருந்தேன்.இப்போதெல்லாம் காமெடி படம் என்று தெரிந்தால் நம் ஆட்கள் தியேட்டர் உள்ளே போகும்போதே சிரிக்க தயார் ஆகிவிடுகிறார்கள் போல. பணம் கொடுத்து உள்ளே வந்துள்ளோம் சிரிக்கவிடால் எப்படி என்று நினைக்கிறார்களோ என்னவோ இன்னைக்கு சனிக்கிழமை என்றாலும் சிரிக்கிறார்கள் (நன்றி- சுஜாதா) சமீபத்தில் கேடி பில்லா படத்தில் நான் எங்குமே சிரிக்க வில்லை.படத்தில் உட்காரவே முடியவில்லை.ஆனால் அரங்கம் அதிர சிரித்து கொண்டிருக்கிறது.அப்போதுதான் ஒன்று நன்றாக உரைத்தது.காமெடி கூட ரசனை மாறுபடும் என்று.நான்  23 ஆம் புலிகேசி,ஓகே ஓகே போன்ற படங்களை சிரிப்பு வராமல் பார்த்துவிட்டு வந்தேன்.கலகலப்பு பிடித்தது.சமீப கால முழுநீள காமெடி என்று அந்த படத்தை சொல்லலாம்.

சென்ற வெள்ளி கிழமை பதிவுகளில் மதியம் முதலே தில்லு முள்ளு ,தீய வேலை செய்யணும் 2 படங்களின் விமர்சனம் வர தொடங்கிவிட்டன.தில்லு முள்ளு செம காமெடி ,தீயா வேலை செய்யணும் வயிற்றை பதம் பார்த்தது என்று 2 படங்களுமே பாசிடிவ் ரிசல்ட். 2 நாள் கேப்பில் 2 படங்களையும் பார்த்தேன்.இரண்டை பற்றியும் எழுதும் எண்ணம் இல்லை.அதுவும் இல்லாமல் ஒரு வாரம் ஆகிவிட்டது இனி ஏன் என்று. திடீர் என இரண்டும் காமெடி ,இந்த வார இறுதியில் இரண்டில் ஒன்றை  பார்க்க திட்டம் போட்டிருக்கும் நண்பர்களுக்கு உதவும்படி இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்து எது பெட்டர் என்று எழுதலாம் என்றி ஐடியா.இதோ நீங்கள் படித்து கொண்டிருகிறீர்கள்.



தில்லு முல்லு 

1. ரீமேக் படம் .தெரிந்த கதை .புதிதாய் சேர்த்த விஷயங்களும் பெரிதாய் ஈர்க்கவில்லை. 
2.சிவா அடிக்கும் சில காமெடிகள் ஜஸ்ட் ஓகே.
3.ஹீரோயின்  சரியில்லை.
4. பழைய தில்லு முள்ளில் காட்சிகளில் ஒரு அழுத்தத்தோடு ஒன்றி பார்த்து சிரிக்கலாம்..இதில் காட்சிகளில் அது மிஸ்ஸிங்.வேகமாக கடந்து செல்கிறது.
5.முதல் ஒரு 20 நிமிஷம் ஓகே. நடுவில் பெரிய மொக்கை. இறுதி 15 நிமிடம் சந்தானம் வருகிறார்.ஓகே. கொஞ்சம் யோசித்திருந்தால்  சந்தானம் வரும் அந்த காட்சிகளை இன்னும் சிறப்பாக (சிரிப்பாக ) எடுத்திருக்கலாம்..
6.படத்தில் ஒரு 4, 5 இடங்களில் Instant சிரிப்பு .படம் அவ்வளவே.

தீயா வேலை செய்யணும் குமாரு :

1. ஆரம்ப அறிமுகம் RJ பாலாஜி கொடுக்கிறார்.அதுவே படத்தில் ஒன்ற வைத்துவிடுகிறது. நல்ல தேர்வு.அவர் பேசும் சில காமெடிகளும் சூப்பர்.சந்தானம் வரும் வரை அவர் தான் கலகலப்பு . ( கணேஷ் வெங்கட்ராமை செல்வராகவன் படத்து 2nd ஹீரோ என்று சொல்வது செம.
2.எனக்கு சித்தார்த் பிடிக்காது.அதனால் சொல்ல ஒன்றும் இல்லை.ரொம்பவும் இளைத்த ஹன்சிகா மற்ற படங்களை விட அழகாக காட்டி இருக்கிறார்கள்? இல்லை இளைத்ததால் அழகாகிவிட்டாரா  தெரியவில்லை.
3.சந்தானம். இவரை கொடுத்த கால் சீட்டுக்கு நன்றாக பயன் படுத்தி இருக்கிறார்கள்.(ஒரு நாள் சம்பளம்  17 லட்சமாமே?)  ஒவ்வொரு ரூபாயும் வொர்த் .
4.ஒரே சீனில் வந்தாலும் டெல்லி கணேஷ் இன்னொரு ஒரு சீனில் வரும் மனோபாலா இருவரும் கலக்கி இருக்கிறார்கள்.அதிலும் மேட்டர் புரோக்கர் ஏன் வேட்டி  கட்டுகிறார்கள் என்று மனோபாலா சந்தானத்திற்கு புரிய வைக்கும் இடம் அவர் புரிய வைக்கும் முன்பே அரங்கம் அதிர்கிறது.
5.படத்தில் ஒரு 15 இடங்களில் Instant சிரிப்பு .4, 5 இடங்களில் நினைத்து நினைத்து சிரிப்பு .
6.படம் முடிந்து வெளியே வரும் போது தில்லு முள்ளு தராத நிறைவை தீயா வேலை செய்யணும் தருகிறது .

மொத்தத்தில் 

தில்லு முள்ளு ------   BELOW JUST OK 

தீயா வேலை செய்யணும் குமாரு  ------  BETTER THAN OK 

Saturday 20 April 2013

404- ERROR NOT FOUND--உண்மையில் பேய் படம் தானா ?


404- ERROR NOT FOUND--உண்மையில் பேய் படம் தானா ?


பேய் படத்தில் இவ்வளவு விஞ்ஞான மருத்துவ விஷயங்களா? இது உண்மையில் பேய் படம் தானா ? அப்படி நினைத்து தான் பார்க்க தொடங்கினேன்.ஆனால் அதிகம் பயமுறுத்தாமல் பல ட்விஸ்ட் மூலம் நம்மை ஆச்சர்யபடுத்திவிடுகிரார்கள்.ஆனால் HORROR படம் இல்லை. PSYCHOLOGICAL THRILLER வகை படம். 
2011 இல் வந்த இந்த படத்தில் தெரிந்த முகங்கள்  யாரும் இல்லை. 

ஒரு மருத்துவ கல்லூரி .அங்கே முதலாம் ஆண்டு படிக்க வருகிறான் நாயகன் அபிமன்யு சுருக்கமாய் அபி.அங்கே சீனியர் மாணவர்கள் பலமாக ராக்கிங் நடக்கிறது.இவனும் சிக்குகிறான்.அந்த கல்லூரியின் விடுதியில் தங்கி இருக்கிறான்.அங்கே விடுதியின் 404 ஆம் எண் அறை யாருக்கும் தராமல் பூட்டபட்டு இருப்பதை பார்கிறான்.அந்த அறையில் 3 வருடங்களுக்கு முன் படித்த ஒருவன் தற்கொலை செய்து கொண்டதால் அவன் ஆவி அந்த அறையில் இருப்பதாய்  சொல்ல படுகிறது.அதை மறுத்து அந்த அறையை தனக்கு தருமாறு கேட்கிறான்.

ஆனால் தர மறுக்க படுகிறது.கல்லூரியில் ஆசிரியிராகவும் பெரிய எழுத்தாளராகவும்,பெரிய மேதையாக இருப்பவர் அனிருத் .அவரும் அந்த கல்லூரியில் பணிபுரிகிறார்.அந்த 404 அறையை அபி கேட்பதை தெரிந்து அதை அவனுக்கு தருமாறு பரிந்துரைக்கிறார்.அவனுக்கு அந்த அறை  கிடைக்கிறது.அடுத்த சில நாட்களில் மீண்டும் ராகிங் .அவன் அந்த அறையில் இருப்பதாய் தெரிந்த சீனியர் ஒருவன் அபியிடம் அவன் அறையில் இறந்தவனை பற்றி முழு விபரமும் அபி தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் அடுத்த முறை பார்க்கும்போது கேட்பேன் என்றும் சொல்கிறான்.


அபி சீரியசாக இறந்தவனை பற்றி தெரிந்து கொள்கிறான்.அப்போது தொடங்குகிறது பிரச்சனை .அந்த அறையில் இவன் கண்களுக்கு இறந்தவன் தெரிய தொடங்குகிறான்.இவனிடம் அவ்வபோது பேசுகிறான்.இவனுக்கு உதவ வருகிறார் அந்த ஆசிரியர் அனிருத் .உண்மையில் அவன் பார்ப்பது இறந்தவன் தானா? என்று பல பல அதிர்சிகளை நமக்கு தருகிறார்கள்.மனித மனம் பற்றி டாக்டர் அனிருத் சொல்லும் விஷயங்கள் அருமை.நம் மாதவன் நடித்த எவனோ ஒருவன் படத்தை இயக்கிய நிஷிகாந்த் காமத் DR.அணிருதாக நடித்துள்ளார்.அதிலும் கடைசி 5 நிமிடம் .CLASS

எனக்கு தெரிந்து இந்த படம் எந்த ஆங்கில உலக படத்தின் காப்பியும் இல்லை. ஒரு துணிச்சாலான ,புத்திசாலிதனமான படம்.கொஞ்சம் வித்யாசமான சில திடுக்கிடும் ட்விஸ்ட்கள் கொண்ட படம் பார்க்க விருப்பம் என்றால் நிச்சயம் பார்க்கலாம். இந்திய அளவில் ஒரு சிறந்த ,ORIGINAL ஆன கதையோடு கொண்ட ஒரு முயற்சி என்ற முறையில் இந்த படத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

Monday 15 April 2013

ஜுகல்பந்தி : கதை, IPL COMEDY, SPECIAL 26, குமுதம் இளையராஜா

ஜுகல்பந்தி : கதை, IPL COMEDY, SPECIAL 26, குமுதம் இளையராஜா 

திரை படங்களில் கதை :
ஓர் திரை படத்திற்கு கதை எவ்வளவு முக்கியம்? அதானே உயிர்.ஒரு படம் உயிர் பெறுவது எப்படி.முதலில் கதையை எழுதி அதற்க்கு ஏற்றாற்போல் திரைக்கதை வடிவம் தந்து அதை முழுவடிவம் செய்து முடிப்பதே முதல் படியாக இருந்து வந்தது.இன்று வரும் படங்களில் கதை இருக்கிறதா?  கதை சரி இல்லை என்று தூக்கி எறியப்பட்ட படங்களை விடுவோம் .இன்று வெற்றி பெரும்  படங்களிலாவது கதை இருக்கிறதா?உதாரணதிற்கு 2012 மற்றும் 2013இல் இன்றுவரை வெற்றி பெற்ற படங்களை பட்டியலிட்டால்.2012 இல் ஹிட் துப்பாக்கி .சரி அதிலாவது ஆங்காங்கே குண்டு வைத்து நாட்டையே அதிர்சிக்குள்ளகும் தீவிரவாத குழுவுக்கு ஒரு ராணுவ வீரன் அந்த தீவிரவாதிகளுக்கே அதிர்ச்சி கொடுத்தால் ? என்ற ஒரு கரு இருந்தது.மற்ற படங்களான ஒரு கல் ஒரு கண்ணாடி ,கலகலப்பு போன்ற படங்களில் எதோ ஒரு வரி கதை அதை சுற்றி சில நகைச்சுவை காட்சிகள் அவ்வளவே படம்.அதில் சமீப வரவான கேடி பில்லா கில்லாடி ரங்கா படமும் சேர்ந்துள்ளது.படமும் ஓரளவு வெற்றி பெற்றுள்ள நிலையில் இது மேலும் இதுபோல் கதை இல்லாத படங்கள் அதிகம் வருவதற்கான அபாய நிலையை அதிகம் ஆக்குமோ?

SPECIAL 26: 
HEIST வகை படங்கள் அதாவது கொள்ளையை மையமாக கொண்டு வரும் படங்கள் எனக்கு பிடிக்கும்.ஆங்கிலத்தில் நிறைய வருவதுண்டு.தமிழில் கலவையான "நாணயம் ",மங்காத்தா போல வெகு சில இருந்தாலும் இந்த SPECIAL 26 இந்திய அளவில் சமீப காலங்களில் வந்த சிறப்பான படம்.ரொம்ப நேர்த்தியாக இருந்தது.பிடித்த விஷயம் 1987இல் நடக்கும் கதை அதில் இந்த கால வேகமான எடிட்டிங் முறை இல்லாமல் இயல்பான எடிட்டிங் முறையில் படம் சீரான வேகத்தில் இருந்தது.போன வருடமே படம் வந்தாலும் இப்போது தான் பார்த்தேன்.காரணம் சப் டைட்டில் உடன் நல்ல பிரிண்ட் .

IPL COMEDY:
எந்த வித அதிர்சிகளும் இல்லாமல் ஏறகுறைய அதே 5அணிகள் தான் நன்றாக விளையாடி வருகிறார்கள் .சென்னை,மும்பை,பெங்களூர்,டெல்லி,கொல்கத்தா போன்றவற்றில் 4 அணி தான்  அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் இருக்ககூடும்.மற்ற ராஜஸ்தான்,பஞ்சாப்,பூனே,ஹைதராபாத் போன்றவை கடைசி இடங்களுக்கு வராமல் இருக்கத்தான் போட்டி .சன் நியூசில் தினமும் மாலை  6.30 பாஸ்கி ,நாணி போன்றவர்கள் IPL ஆட்டங்கள் பற்றி விவாதிக்கிறார்கள்.சிலர் பார்த்திருக்கலாம். சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் சன் டிவியின் புத்தி காட்டி விடுகிறார்கள் .கோப்பையை வெல்ல கூடிய அணி அவர்களது சன் ஹைதராபாத் அணியாம் .இதை அவர்களை அவ்வபோது சொல்ல வைத்துவிடுகிறார்கள்.வெள்ளி கிழமை என்று நினைக்கிறன் யாரோ ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் வந்திருந்தார் அவரிடம் ஹைதராபாத் பற்றி கேட்க்க அவர் அது தேறாத அணி என்றதும் பாஸ்கி அவசரமாக பேச்சை மாற்றி தாவி விட்டார்.பார்க்க காமெடியாக இருந்தது.

வெறுப்பு ராஜா :
குமுதத்தில் இளையராஜா கேள்வி-பதில் சில மாதங்களாக வருகிறது..இதுவரை இளையராஜா பற்றி இருந்த எண்ணங்களை மாறிவிடுமோ என்று தோன்றுகிறது.ரஜினி,கமல்,பாரதிராஜா,எஸ்.பி.பி .ஜானகி ,பாலச்சந்தர் என யாரையும் விட்டுவைக்காமல் சகட்டு மேனிக்கு பதில்களில் விளாசுகிறார்.எப்போது அந்த பகுதி நிறுத்துவார்களோ என்று காத்திருக்கிறேன்.

அஞ்சலியும் பதிவர்களும்:
நடிகை அஞ்சலி போனவாரம் முழுதும் பத்திரிக்கை ,செய்தி சேனல்களுக்கு ஒரு விஷயாமாக சிக்கினார்.பதிவர்களும் தங்கள் பங்கிற்கு அவ்வபோது செய்திகள் போட்டுக்கொண்டே இருந்தனர் சிலர் புலனாய்வு இதழ்கள் போல தலைப்பிட்டு பதிவுகள் தந்தனர். நேற்று பதிவர் இன்றைய வானம் எழுதிய பதிவு யோசிக்க வைத்தது.அது இங்கே 
-- http://indrayavanam.blogspot.in/2013/04/blog-post_8182.html

Tuesday 2 April 2013

ஜகல்பந்தி ----விகடன் ஏப்ரல் பூல்,KD பில்லா எப்படி ,IPL 6


ஜகல்பந்தி ----விகடன் ஏப்ரல் பூல்,KD பில்லா எப்படி ,IPL 6

முன்பே அதாவது பதிவு எழுத தொடங்கிய போதே கேபிள்இன் கொத்து பரோட்டா ,வீடு திரும்பலின் வானவில் போல் பல விஷயங்களை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து அதே போல் ஜகல்பந்தி என்று பேர் எல்லாம் வைத்து ஜரூராக 2 வாரம் எழுதி இருப்பேன் என்று நினைக்கிறன்.அதோடு தொடர்ச்சியாக எழுத முடியவில்லை.இப்போது ஆசை .எத்தனை நாளோ தெரியவில்லை.


ஊடகங்களின் அலும்பு : சென்ற வார விகடனில் எப்போதும் வரும் இன்பாக்ஸ் பகுதியில் பல விஷயங்களை பற்றி சொல்லி இருந்தார்கள்.ஓவொன்றும் கொஞ்சம்   ஆச்சர்யம் தரும் விஷயங்கள் தான் .1.டிர்டி பிக்சர் தமிழ் ரீமேக் படத்தில் நடிக்க மறுத்து வந்த நயன்தாராவை அஜித் அறிவுரை சொல்லி அந்த படத்தில் நடித்தால் நல்ல பேர் பெறுவாய் என்று சொல்லி அவரை நடிக சம்மதிக்க வைத்தாராம்.2.விஜயகாந்த் மகன் அறிமுகம் ஆகும் படத்தை சிங்கம் இயக்குனர் ஹரி இயக்குகிறார் .இப்படி சில செய்திகள்.இப்படி போட்டு பின் சிறிய எழுத்துகளில் 83ம்  பக்கம் பார்க்க என்று சொல்லி அந்த செய்திகள் எல்லாம் ஏப்ரல் பூல் ஆக்க போடப்பட்ட என்று இருந்தது.இது இப்படி இருக்க மறுநாள் முதலே பல சினிமா இணைய தளங்களிலும் ஏன் இப்போது டி.விக்களில் வழக்கமாகிவிட்ட சினிமா செய்திகளில் எல்லாம் கூட அந்த ஏப்ரல் பூல் செய்திகள் உண்மை என்று முழுதும் படிக்காமல் அப்படியே ஒப்பித்து விட்டார்கள்.உங்களில் பலரும் அந்த செய்திகள் பற்றி கேள்விபட்டிருக்கலாம். 

கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் பற்றி எனக்கு எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் இருந்தது.காரணம் அந்த இயக்குனர் பாண்டிராஜின் பசங்க எனக்கு ஓகே என்ற அளவில் தான் பிடிக்கும் .வம்சம் பார்க்கவில்லை.மெரினா பற்றி சொல்ல வேண்டியதில்லை. இந்நிலையில் கேடி பில்லா படம் வெளிவந்தது.கேபிள் ,சி.பி செந்தில் ,இன்ன பிற பதிவர்கள் படம் மொக்கை என்று சொல்லி விட்டனர்.ஆனாலும் வீடு திரும்பல் மோகன் சார் ,இன்னும் சிலர் சூப்பர் காமெடி என்று சொல்லிவிட்டதால் ஒரே குழப்பம் .எனக்கு ஓகே ஓகே பிடிக்கவில்லை .கலகலப்பு பிடித்தது.லட்டு பிடித்தது.ஒருவேளை நல்ல காமெடி படமோ ,நாம் பார்க்காமல் இருக்கிறோமோ என்று குழப்பம்.

என்ன எதற்கென்று தெரியவில்லை சிலரை பார்த்தாலே பிடிக்காது.எனக்கு அப்படி பாய்ஸ் சித்தார்த்(நிச்சயம் சமந்தா விஷயம் இல்லை) .காரணமும் தெரியவில்லை .என் நண்பன் ஒருவனுக்கு மோகன்லால் என்றாலே பிடிக்காது.சிலரை ஏன் எதற்கு என்று தெரியாமலே பிடிக்கும்.

போகிற போக்கை பார்த்தல் இருக்கும் ஒன்றிரண்டு ஓட்டையும் இல்லாமல் செய்துவிடுவார்கள் தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள் போல.மாணவர்களை அடிப்பதும் ,ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புதிய தலைமுறை டி.வியில் லைவில் மைக்கை பிடுங்கி எரிந்து சிபிஐ வரும் என்று எச்சரித்து சென்றதெல்லாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள்.

ஐ.பி.எல் 6 தொடங்கிவிட்டது. 1 1/2 மாதத்திற்கு ஒரே ரகளை தான்.சன் டிவி ஒரு டீமை வாங்கிவிட்டார்கள்.பார்த்து கொண்டே இருங்கள் சன் டிவிக்காக தமிழ் நாட்டு ரசிகர்கள் ஹைதராபாத் அணிக்கு ஆதரவாக மாறி விட்டார்கள் என்று சன் செய்திகளில் வந்தாலும் வரும்.

Sunday 24 March 2013

ENTER NOWHERE--யாராலும் யூகிக்க முடியாத கதை .இது சவால்


ENTER NOWHERE--யாராலும் யூகிக்க முடியாத கதை .இது சவால் 


கொஞ்சம் வித்தியாசமான கதை .MYSTERY-THRILLER படம் .

வழக்கமான ஆங்கில திகில் படம் போலவே தொடங்கும் படம். காட்டிற்கு நடுவில் தனியான ஒரு சிறிய வீடு.அங்கே வரும் ஒரு பெண்.இப்படி தொடங்கியவுடன் சரி வழக்கமான இந்த கதையில் ஒரு 1000 படம் வந்திருக்குமே என்று யோசிக்க தோன்றும் .ஆனால் படம் தொடங்கி ஒரு 25-30 நிமிடம் கழித்து நாம் சந்திக்கும் ஆச்சர்யங்கள்.படத்திற்கு ஒரு சபாஷ் சொல்ல வைக்கின்றது.

ஏதோ ஒரு காட்டிற்கு நடுவில் ஒரு பெண் தனியாக நடக்க முடியாமல் நடந்து வருகிறாள்.அங்கே தனியாக ஒரு சிறிய வீடு.உள்ளே போகிறாள்.அந்த நேரத்தில் அங்கே ஒருவன் வருகிறான்.முதலில் அவனை கண்டு அஞ்சும் அவள் பின் தான் அங்கே வந்த காரணத்தை சொல்கிறாள்.தன் கணவனோடு காரில் போகும்போது கார் ரிப்பேர் ஆனதால் உதவி தேடி சென்ற கணவன் நீட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவனை தேடி வந்ததாக சொல்கிறாள்.அவனும் அதுபோலவே தனது காரும் ரிப்பேர் ஆனதால் அங்கே வந்து 3 நாட்கள் ஆனதாகவும் சொல்கிறான்.அடுத்த நாள் இன்னொரு பெண் அதேபோல் அங்கே வருகிறாள் .

இதன் பின் படம் முழுதும் ஆச்சர்யங்கள்.

3 பேரும் அங்கிருத்து வெளியே சென்று காட்டு வழியே உதவி தேடி செல்கிறார்கள் .பல மணி நேரத்திற்கு பின் அவர்கள் வந்து சேரும் இடம் ...........அவர்கள் சந்தித்துக்கொண்ட அதே வீடு.

தாங்கள் அந்த வழி வந்த காரணத்தை பேசி கொள்ளும் போது அவர்கள் இப்போது இருக்கும்  ஊரை பற்றி பேச்சு வர. 3 பேருமே அந்த இடத்தை வேறு ஒரு ஊராக  நினைத்துகொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணிடம் ஒரு கட்டு பணம் .அந்த பணம் அச்சிட்ட வருடம் 1984. ஆனால் மற்றொரு பெண் எந்த நாட்டில் எதிர்கால வருடத்தை போட்டு பணம் அச்சடிக்கிறார்கள் என்று கேட்டு அசரடிக்கிறாள்.காரணம் அவளை பொறுத்தவரை அது 1962. அவன் அங்கே வர அவனை விசாரித்தால் அவன் இருப்பதாய் நினைப்பது வருடம் 2011.

அவர்கள் எதோ நட்டு  கழண்ட கேஸ் என்று நினைத்தால் நம் நினைப்புக்கு ஒரு அடி.பின் என்னதான் அங்கே ? நான்கவதாய் வருபவன் யார் ? இதற்க்கு மேல் கதை பற்றி சொல்ல போவதில்லை .


அவர்களுக்குள் என்ன சம்பந்தம்? கொஞ்சம் கூட யோசித்தே பார்க்க முடியாத கதை .யூகிக்க முடிந்தவர்கள் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்கள்.ஆனால் படம் பார்த்த பின் ரொம்பவும் கவனித்து பார்த்தால் வசனங்களை  உற்று கவனித்து வந்தால் ஒரு வேலை 1%  யூகிக்கலாம்  .உஹூம் நிச்சயாமாக 99 %சொல்ல முடியாது.இதுவாக இருக்குமோ ,அல்லது அப்படி இருக்குமோ என்று எப்படி யோசித்தாலும் உங்களால் காரணத்தை கண்டுபிடிக்க முடியாது.

என்னதாண்டா நடக்குது என்று ஆவல் தாங்க முடியவில்லை சில இடங்களில்.எல்லோருக்கும் தெரிந்த Clint Eastwood மகன் SCOTT EASTWOOD தான் ஹீரோ.அலட்டல் இல்லாமல் நடித்துள்ளார்.

வழக்கமான படங்கள் பார்த்து சலித்த ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய படம்.படம் 1.30 மணி நேரம் தான் .முதல் 30 நிமிடம் கொஞ்சம் பொறுமையாய் போகும்.அதற்க்கு மேல் கதைக்குள் வந்துவிடுவோம்.2011 வெளிவந்த படம்.

இதுவரை நான் எந்த படத்தின் டவுன்லோட் லிங்கும் கொடுத்தது கிடையாது.இது கொஞ்சம் கிடைக்க அரிதான படம்.அதாவது SUBTITLE உடன். இந்த படத்தின் லிங்க் தருகிறேன்.


IMDB RATING -6.3

Friday 15 March 2013

கிராமங்கள் அடங்கிய சென்னை


கிராமங்கள் அடங்கிய சென்னை 



சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் 

இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் 

இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது. 

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது 

சுவாரஸ்யமான ஒன்றே.

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று 

அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)

- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி 

குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது 

இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக 

இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் 

பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக 

மாறியது.

- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் 

வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது 

தான் சேப்பாக்கம்.

- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

- கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் 

என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ 

மாம்பலமாகி விட்டது.

- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் 

பல்லாவரம்.

- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக 

இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே 

இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கபடுகிறது(தி.நகர்)

- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி 

புரசைவாக்கம் ஆனது.

- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி

நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று

காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம்

சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்

அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி 

என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி 'குணங்குடி 

மஸ்தான் சாகிப்'. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 

தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என 

அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. 

அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே 

பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் 

இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று

அழைக்கப்படுகிறது.

- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள்

பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் 

உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என

மாற்றம் கண்டுள்ளது.

- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் 

மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை 





நன்றி : முகநூலில் எனக்கு அளித்த நண்பன் மனோஜ்