Pages

Showing posts with label சினிமா தொடர். Show all posts
Showing posts with label சினிமா தொடர். Show all posts

Saturday, 27 July 2013

45 நாள்---30 ஆங்கில படங்கள் --PART- 3

45 நாள்---30 ஆங்கில படங்கள் --PART- 3

பார்த்த 30 படங்களில் சூப்பர் என்று சொல்லகூடிய லிஸ்ட் இது :

இதில் 3 படங்களுக்கு சக பதிவர்களின் லிங்க் கொடுத்து உள்ளேன்.அதை விட சிறப்பாக எழுதிவிட முடியாது என்பதால் அவர்களின் பதிவே இங்கே முறை.



The Hidden Face (2011):

உங்களுக்கு பிடித்தமானவர்கள் உதாரணமாய் உங்கள் கணவனோ ,மனைவியோ அல்லது காதலரோ காதலியோ (மணம்  ஆகாமல் ஒன்றாய் இருப்பது இந்தியாவில் சாத்தியமோ) நீங்கள் இல்லாத போது அவர் என்ன செய்வார் என்பதை பார்க்க நினைத்தால் ? அதுவும் மிக அருகில் இருந்து (கேமரா வைத்து எல்லாம் இல்லை)

தன்னை விட்டு பிரிந்து ஓடிவிட்ட காதலி அவன் பார்பதற்காக ஒரு வீடியோவில் பேசி, தான் போவதாகவும் வேறு ஒருவனை விரும்புவதாகவும் சொல்கிறாள்.அதனால் வெறுப்பு அடையும் அவன் குடிக்க போன இடத்தில வேறு ஒருவளை சந்தித்து, அவளுடன் நட்பாகி அவளை தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து அவளோடு உறவு கொள்கிறான்.

முன் கதை : இசை நடத்துனரான அந்த நாயகன் தன் குழுவில் உள்ள ஒரு பெண்ணோடு உறவு உள்ளதாக நினைக்கிறாள் காதலி.அந்த வீட்டின் உரிமையாளரான ஒரு வயதான பெண்ணிடம்(வேறு ஊரில் வசிப்பவர் ) தன் எண்ணத்தை சொல்கிறாள்.அந்த வீடு ஒரு வித்யாசமான வீடு .வீட்டிற்கு  நடுவில் ஒரு சிறு இருட்டு அறை .ஆனால் வெளியில்  இருந்து பார்த்தல்  வெறும் பீரோ,கண்ணாடி ,சுவர் என்றே தெரியும்.அதன் உள்ளே செல்லும் வழியும் தெரியும்படி இருக்காது. ஒரு பக்க முகம் பார்க்கும் கண்ணாடியும் பின் பக்கம் சாதாரண கண்ணாடியும் உள்ளதால் வீடு முழுதும் என்ன நடக்கிறது என்று அந்த அறையில் இருந்தே பார்க்கலாம். இந்த விஷயம் அந்த உரிமையாளர் பெண் சொல்லித்தான் காதலிக்கு தெரிய வருகிறது.மேலும் உண்மையை கண்டுபிடிக்க அந்த அறையில் தங்கிவிட்டால் போதும் என்கிறாள்.சரி என்று ஒரு காமெராவில் தான் அவனை விட்டு போவாத சொல்லி மறைகிறாள்.மறைந்த இடத்தில உள்ளே வந்து பூட்டிய இடத்தில சாவி தொலைகிறது.என்ன கத்தினாலும் கேட்காது.அப்படி ஒரு அறை  இருப்பதே காதலனுக்கு தெரியாது.அவள் எப்படி வெளியே வருகிறாள்? 

ஸ்பானிஷ் மொழி படம் .2011 வந்தது.ஹிந்தியில் வெளி வந்த murder 3 இந்த படத்தின் அதிகார பூர்வமான ரீமேக் .

வித்யாசமான படம் பார்க்க விரும்புகிறவர்கள் பார்க்கலாம்.

Coldfish: ஒரு மனிதனை கொன்றால் அப்படி ஒருவன் இருந்ததற்கே அடையாளம் இல்லாமல் அழிப்பது எப்படி என்பதை ஆற அமர துண்டு துண்டாக வெட்டி ரத்தம் எல்லாம் எடுத்து எலும்பை தனியாக எடுத்து எரித்து அதை நதியில் கொட்டி ,வெட்டிய அறையை சுத்தம் செய்வது வரை முழுவதும் விலாவரியாக காட்டுகிறார்கள்.கதை எல்லாம் பெரிதாக இல்லை.

ஒரு கணவன் மனைவி.சிறய மீன் கடை நடத்தி வருகிறார்கள்.அவர்களுக்கு ஒரு பெண்.அந்த பெண்ணை இன்னொரு பெரிய மீன் கடையில் வேலைக்கு சேர்க்கிறார்கள்.அந்த கடையின் உரிமையாளரும் அவன் மனைவியும் சைக்கோ கொலைகாரர்கள்.அவர்களிடம் சிக்கும் அந்த சிறைய கடையின் கணவன்.அவனை அடிமையாக்கி கொலைகளுக்கு உதவ வைக்கிறார்கள்.அவன் என்ன செய்தான் என்பதே படம். ஜப்பானிய படங்கள் பார்பவர்களுக்கு இந்த படம் ஒரு ட்ரீட் .ரசனையான படம்.

Bedevilled (2010) : வங்கி ஒன்றில் பணி புரியும் ஹெவோன் விடுமுறைக்காக தான் வளர்ந்த தீவிற்கு போகிறாள் .தற்போது அங்கு இருப்பது மொத்தமே ஒரு 10 பேர் தான்.சிறு வயதில் தன் தோழியான போக்னம் வீட்டில் தங்குகிறாள்.அவளுக்கு 10-12 வயதில் ஒரு பெண்.அவள் கணவன் முரடன்.அவன் தம்பி ஒரு பெண்பித்தன்.தன அண்ணன் மனைவியையே அவ்வபோது உறவு கொள்கிறான்.வந்திருக்கும் தோழி மீது ஒரு கண்.மற்றவர்கள் கடுமையான மக்கள் .ஈவு இரக்கம் இல்லாதவர்கள்.ஒரு நாள் ஒரு சண்டையில் அவள் சிறு பெண் இறக்கிறாள்.அதனால் வெறி வந்த போக்னம் அந்த தீவின் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கொடூரமாக கொள்கிறாள்.அவள் வீட்டிற்கு வந்திருக்கும் தோழி? இந்த ஆசிய கொரியா படங்கள் கதை என்பது பெரிதாக இல்லாவிட்டாலும் மேகிங்கில் அசத்தி விடுகிறார்கள்.


Memories of Murder (2003): நான் பார்த்த இந்த சூப்பர் லிஸ்டில் இந்த படத்திற்கு தான் நம்பர்  1 .அவ்வளோ சூப்பர் படம்.நம் யுத்தம் செய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .

ஜாக்கி சேகர் எழுதிய இந்த படத்தின் விமர்சனம் 


City Of God (2002) : இந்த படத்தை எனக்கு அறிமுகம் செய்தவர் பதிவர் ஹாலிவுட் ராஜ் .அவர் எழுதிய விமர்சனம் லிங்க் 
 

Mulholland Drive (2001): 

இந்த படத்தை பற்றி இதற்க்கு மேல் எழுத ஒன்றும் இல்லை.என்று சொல்லும் அளவிற்கு கீதபிரியன் எழுதி  இருக்கிறார்.அவ்வளோ விஷயம் இருக்கு இந்த படத்தில் .படத்தில் .

இந்த படத்தின் டிவிடியில் இயக்குனர் ஒரு பத்து கேள்வி எழுப்பி உள்ளார்.அதற்கும் கீதபிரியன் தனி பதிவில் விளக்கம் எழுதி இருக்கிறார்.படத்தை பார்த்து உள்ளவர்களுக்கு இந்த லிங்க் ஒரு ஆச்சர்யம்.அந்த லிங்க் 

அடுத்த பதிவில் 45 படங்களில் சுமார் படங்கள் 

இதன் முந்தய பகுதிகள் 

45 நாள் ---30 ஆங்கில படங்கள்:பகுதி 1   : 

45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-2

Thursday, 10 January 2013

தமிழ் இசை அமைப்பாளர்களில் நம்பர் 1 யார் ? :


தமிழ் இசை அமைப்பாளர்களில்  நம்பர் 1 யார் ? :



தமிழ் திரை படங்களில் ஏன் இந்திய திரை படங்களில் பாடல்கள் தவிர்க்க முடியாதவை.என்ன தான் பாடல்கள் இல்லாமல் அவ்வபோது படங்கள் வந்தாலும் அவை வருடத்திற்கு மிக சொற்ப படங்களே.இதுவரை தமிழ் சினிமா பல இசை அமைப்பாளர்களை அடையாளம் காட்டி உள்ளது.

இதில் நான் கேட்டவரை (கேட்க்க தொடங்கியது முதல்) கே.வி.மகாதேவன்,எம்.எஸ்.விஸ்வநாதன் ,இளையராஜா ,ரஹ்மான் என குறிப்பிடத்தகுந்த,அதாவது அவர்களுக்கென ஒரு ஸ்டைல்,அதுவரை இருந்ததை புரட்டி போட்ட எனும் சொல்லும்படி இருந்தவர்கள்.இவர்களை பற்றி நான் அறிந்தவற்றை அவர்களின் இசை பற்றி ஒரு பதிவு எழுத ரொம்ப நாளாக எண்ணம்.ஒரு இசைஅமைப்பாளர் வெற்றிகரமான இசைஅமைப்பாளர் என்று எப்படி சொல்வது.அருமையாய் இசைஅமைத்த பலர் அடுத்த படம் இல்லாமல் போன வரலாறுகள் இங்கு உண்டு.

கே.வி.மகாதேவன் : திரை உலகினரால் மாமா என்று அன்போடு அழைக்க பட்டவர்.ஒரு பாடல் இன்ன ராகத்தில் என்றால் அட்சரம் பிழறாமல் இவர் இசையில் இருக்கும்.நமது சாஸ்திர சங்கீதம் இவர் இசையில் அதிகம் வெளிப்படும்.தில்லான மோகனாம்பாள்,திருவிளையாடல் என்று இவர் பேர் சொல்லும்படங்கள் உண்டு. குறிப்பாக சங்கராபரணம் ஒரு மைல்கல் .தெலுங்கிலும் இவர் முன்னினி இசை அமைப்பாளராக இருந்தார் .தேவர் பிலிம்ஸ் படங்களுக்கு பெரும்பாலும் இவர் இசைதான்.ஜெயலலிதாவையே பாட வைத்துள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் : ரொம்பவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர், இரட்டையர்களாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்று இருந்து ஆயிரத்தில் ஒருவனோடு பிரிந்தார்கள் .தனி தனியாக இசை அமைத்தார்கள் .அதில் இவர் இசை மட்டுமே எடுபட்டது .இசை தவிர வேறு எதை பற்றியும் அதிகம் தெரிந்து இராதவர் .ஜனரஞ்சகமான இசை அமைக்க தெரிந்தவர் .இசை கருவிகள் அதிகம் இல்லாமல் வரிகளுக்கு முக்கியத்துவம் தந்து இசை அமைத்தார் .பின்னாளில் பரத்வாஜ் இவர் பாணியையே கடைபிடித்தார்.எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இசை அமைப்பாளர் விஸ்வநாதன் தான் .அவரின் அதிக படங்களுக்கு இசை அமைத்தவர்.இவர் திறமை அதிகம் வெளிப்பட்டது ஸ்ரீதர் ,பாலச்சந்தர்  போன்றவர் படங்களில் தான்.இவர் படம் முழு ஆல்பமாக நான் அதிகம் முறை கேட்டது உலகம் சுற்றும் வாலிபன் .பின் 70 களில் இளையராஜா வருகைக்கு பின் ராஜாவை  போட்டியாக நினைத்து கடைசியாக முழுதும் அசாத்திய படம் என்றால் நினைத்தாலே இனிக்கும் தான்.அதன் பின் ராஜாவோடு சேர்ந்து சில படங்களில் இசை அமைத்தார்.நடிக்கவும் செய்தார் .கண்ணதாசனின் நெருங்கிய நண்பர்.60கல் மற்றும் 70 முதல் பாதி வரை தமிழ் திரை இசை என்றால் இவர்தான்.

இளையராஜா : MY RAJA. YES.இப்படி  ஒருவர் வந்திருக்காவிட்டால் ? 70களில் ஒரு மோகம் தமிழ்நாட்டில் இருந்தது .அது ஹிந்தி பாடல்கள் .மொழி புரியாவிட்டாலும் தம் மேரா தம்,ரூப்பு தேற மஸ்தான  என்று ஹிந்தி பாடல்கள் கிராமங்கள் வரை சென்று இருந்தது.அதை திருப்பி தமிழ் பாடல்களை மீண்டும் கேட்க்க செய்தவர் ராஜா .பின்னணி இசை என்பது காட்சிகளை நிரப்பும் இசை என்று அதுவரை இந்திய திரை உலகமே நினைத்திருந்த நேரத்தில் அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து பின்னிணி இசை பற்றியும் மக்களை பேசவைத்தவர்.ஒரு இசை அமைப்பளரால் படம் விற்பனை ஆகுமா ? இவரால் ஆனது.இவர் முகத்தை போஸ்டரில் பெரிதாக போட்டு மக்களை இழுத்த படங்கள் ஏராளம் .மோகன்,ராமராஜன் ,முரளி  என்று இவரால் சினிமா வாழ்வு பெற்றவர்கள் .இன்று அதுபோல் எதாவது நடிகருக்கு வாழ்வு அளித்த இசை அமைப்பாளரை கை காட்ட முடியுமா? கிராமத்து படமோ,நகரத்து படமோ ,சிந்து பைரவி ,சலங்கை ஒலி போல் கர்நாடக சங்கீத அடிப்படையாக கொண்ட படமோ ,அல்லது நவீன டிஸ்கோ ,வெஸ்டேர்ன் பாடலோ இவரால் முடியாதது எதுவுமே இல்லை.ஒரு இசை அமைப்பாளர் ஒரு ஆண்டுக்கு எத்தனை படங்களுக்கு இசை அமைக்க முடியும் ? 10 அதிகபட்சம் 20 .

ராஜா 
1978- 24 படங்கள் 
1979-30, படங்கள் 
1980-34  படங்கள் 
1981-33
1982-33
1983-46
1984-54
1985-51
1986-50
1987-32
1988-44
1989-43
1990-46
1991-41
1992-55
1993-43

அந்த 80-90 காலங்களில் வருடத்திற்கு 70 படம் வந்தால் 50-60 படம் இளையராஜா தான்.போட்டிக்கு யாரும் இல்லை .சக இசை அமைப்பளர்கள் இவர் கிட்டே கூட நெருங்க முடியாத தரம்.அதுவும் இசை அமைக்கும் வேகம் மலைக்க வைக்கும் இந்தியாவில் வேறந்த இசை அமைப்பாளரிடமும் காண முடியாத வேகம்+தரம்.இன்றுள்ள இசை அமைப்பளர்கள் என்ன பின்னிணி இசை அமைக்கிறார்கள்? ராஜாவின் பல படங்களில் பின்னணி இசை  படத்தை தூக்கி நிறுத்தும்.சேது படம் எல்லாம் வேறு ஒரு இசை அமைப்பாளரை நினைக்க முடியுமா? காதலுக்கு மரியாதை பின்னணி இசை இன்னும் கூட காதிலேயே இருக்கிறது.இன்றும் கூட இவர் இசை பிடிக்காத தமிழர்கள் குறைவு.டாஸ்மாக் தமிழர்கள் இவர் இசைக்கு அடிமைகள் .குறை என்றால் யாருடனும் விட்டு கொடுத்து போகாததால்,நிறைய திரை உலக நண்பர்களை இழந்து இருக்கிறார்.முக்கியமாக பல இயக்குனர்களின் நட்பை.ஆனாலும் இசை உலகில் எல்லோரும் விரும்பும் ஒருவர் என்றால் கோரஸாக  ராஜா என்றே பதில் வரும்.சமீபத்தில் நீதானே என் பொன்வசந்தம் .எனக்கு மீண்டும் 80-90களின் இசை போய் வந்த நிறைவு.இன்றைய அதிரும் இசை ,டெக்னோ கேட்டு பழகியவர்கள் இளையராஜா படத்தை கெடுத்து விட்டதாக குறை பட்டுகொள்கிறார்கள் .பின் 70களில் தொடங்கி 80களின் தொடக்கத்தில் உச்சம் போய் நடு 90கல் வரை தமிழ் திரை இசை என்றால் இளையராஜா தான் .இதுவரை 892 படங்களுக்கு இசை அமைத்துள்ளார் .

ஏ.ஆர் ரகுமான் : இளையராஜா ஹிந்தி பாடல்கள் கேட்டுகொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திரும்ப வைத்தார் என்றால்,ஹிந்தி பாடல் கேட்டுகொண்டிருந்த வட இந்தியர்களையும் தமிழ் பாடல் கேட்க்க வைத்தவர் ரகுமான்.முதலில் ரோஜா கேட்டுவிட்டு  "ONE FILM WONDER" என்று இவரை நினைத்தேன்.அதுவரை இருந்த ஆடியோ மார்க்கெட்டை விரிவு படுத்தியவர்.புதிய இசையை ,சப்தங்களை ,கருவிகளை அறிமுக படுத்தியவர்.ஒரு பேட்டியில் அவரிடம் பணிபுரிந்தவர் சொன்னது.ஒரு படத்தில் ஒரு ரிதம் ஒலிக்காக மின்போர்டில் வரும் ஐ.சி க்களை வெடிக்க செய்து அந்த ஒலியை மிக்ஸ் செய்தோம் என்று கூறினார்.இவர் அளவிற்கு புதிய பாடகர்களை அறிமுகம் செய்து வைத்தவர்கள் இருக்க முடியாது.ஆனாலும் அதுவே ஒரு குறையும் .யாரும் ரொம்ப பெரிய அளவில் பிரகாசிக்க வில்லை (ஓரிருவர் தவிர ).இவர் பாடல்களை கேட்பது ஒரு கலை.முதல் முறை கேக்கும்போது ஒன்றும் பிடிபடாது.ஒரு பாடல் மனதில் நிற்க குறைந்த பட்சம் 5 முறையாவது கேட்டால்தான் பிடிக்க ஆரம்பிக்கும்.இவர் இசை அமைக்கும் முறை அருமையானது.பாடகரை வைத்து பல முறைகளில் பாடவைத்து பதிவு செய்து,அதில் சிறந்தவற்றை எடுத்து சேர்த்து அதற்க்கு ஓவ்வொரு இசைகோர்வையாக சேர்த்து ,பிரித்து அதை கடைசிவரை பலகட்ட அலசல்கள் செய்து இறுதியில் ஒரு முழுமையான பாடலாக வந்திருக்கும்.பாடலை பாடிய பாடகர்களுக்கே அது இப்படிதான் வந்திருக்கும் என்று ஆடியோ வெளியாகி கேட்ட்கும்வரை தெரியாது.குறை என்றால் படதேர்வு.ரொம்பவும் மோசமான படங்களுக்கு அதிகம் இசை அமைத்து உள்ளார்.HIT FILMS RATIO ரொம்பவும் குறைவு .இதுவரை 59 நேரடி தமிழ் படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.அதில் வெறும் 19 படங்களே ஹிட்.பாதிக்கும் குறைவு.


இன்று யுவன் சங்கர் ராஜா,ஹாரிஸ் ஜெயராஜ்,ஜி.வி.பிரகாஷ்,தமன் ,விஜய் ஆண்டனி என்று பல புதியவர்கள் கலக்க தொடங்கிவிட்டனர்.மீண்டும் இப்போது இவர்களில் தற்சமயம் ஹிட் இசை அமைப்பாளர் யார் என்பதே கேள்வி.பாஸ்ட் புட் போல் இன்றைய இசை மாறிவிட்டாலும் அதில் பல பாடல்கள் இன்று உயிரற்றவை ஆக இருக்கின்றது.காரணம் காலத்தை தாண்டிய பாடல்கள் என்று இன்று வரும் பாடல்கள் இல்லை.படம் வெளிவரும் முன் 1 மாதம் ,வந்த பின் 1 மாதம் .அவ்வளவுதான் இன்றைய பாடல்களின் காலம்.மேலும் யுவன் வெகு சில படங்கள் தவிர மற்ற இசை அமைப்பளர்கள் பின்னணி இசை என்றால் என்ன கேட்பார்கள் போல் உள்ளது .பாடலில் போட்ட டயுனையே கொஞ்சம் அங்கே இங்கே சில சேர்த்து படத்தில் நிரப்பி விடுகிறார்கள்.இதுவா பின்னணி இசை என்பது?இந்த குறை ஏ .ஆர் ரகுமான் படங்களில் கூட உண்டு.பெரும்பாலும் பாட்டு டயுனையே பின்னணி இசைக்கும் பயன் படுத்துவார்.

சரி இசை அமைத்த படங்களின் ஹிட்,இன்றைய மார்க்கெட்,கையில் உள்ள படங்கள் போன்ற விஷயங்களை கணக்கிட்டால் இன்றைய ஹிட் இசை அமைப்பாளர் யார் என்று பார்த்தல் கொஞ்சம் ஆச்சர்யமாக உள்ளது.காரணம் அது ஹாரிஸ் ஜெயராஜ்.ஆமாம்.அந்த இடத்திற்கு அவர் தகுதி ஆனவரா என்றால் ஒரு இசை ரசிகனாக நிச்சயம் என் தேர்வு அவர் இல்லை.இருந்தாலும் இதுவரை 31 தமிழ் படங்களில் இசை அமைத்து உள்ளார்.அதில் 18 படங்கள் சூப்பர் ஹிட்.அவரது பட தேர்வு எப்படி என்றால் பெரிய இயக்குனர் ,பெரிய பேனர் ,ஹிட் ஹீரோ,பெரிய சம்பளம்  என்று சகல விஷயங்களும் ஓரளவு ஓகே என்றால் மட்டுமே படங்களை ஓகே செய்கிறார்.எனக்கு தெரிந்து ஒரு 10 TUNE வைத்திருக்கிறார்.அதையே இப்படி கொஞ்சம் மாற்றி அப்படி கொஞ்சம் மாற்றி என வண்டி ஓடிகொண்டிருக்கிறது .பின்னணி இசை பற்றி சொல்லவே வேண்டாம்.ஆனாலும் இன்று இவர்தான் நம்பர் 1 .இது தான் நிதர்சனம்.

Monday, 17 December 2012

கௌதம் மேனன் இதுவரை என்ன கிழித்துவிட்டார்?

கௌதம் மேனன்  இதுவரை என்ன கிழித்துவிட்டார்? 





கடந்த மூன்று நாட்களாக பதிவுகளில் ஒரே குரலில் அழுகை  சத்தம் .கௌதம் ஏமாற்றிவிட்டார்.படத்தில் ஒன்றுமே இல்லை ஏற்கனவே பார்த்த அவரது படங்கள் போலவே இருக்கு .படம் ஒரே இழுவை.ரொம்ப ஸ்லோ .கதை நகரவே மாட்டேன் என்கிறது என்று பல்வேறு விமர்சனங்கள்.இதில் கௌதம் மேனன் பட ரசிகர்கள் வேறு தனி ட்ராக்கில் விமர்சனம் போடுகிறார்கள் .நான் கேட்கிறேன் அப்படி இதுவரை அசத்தும் படங்கள் எத்தனை கொடுத்துவிட்டார்.அவர் படங்களுக்கு ஏன் இவ்வளோ எதிர்பார்ப்பு.என் எதிர்பார்ப்பு இந்த படத்தை பொறுத்தவரை அவர் படம் தொடங்கும் போதே முடிவு செய்துவிட்டேன்.இது லவ் படம்.ரொம்ப மெதுவாக போகும்.பாட்டு அருமையாய் இருக்கும்.ஆனால் படம் மொக்கையாய் இருக்கும்.என்று.

கௌதம் மேனன் இதுவரை இரண்டு வகையான படங்களே அதிகம் எடுத்து உள்ளார்.
1.slow moving love stories
2.partly fast paced police stories.

இதுவரை 13 படங்கள் எடுத்துள்ளார்.

1.மின்னலே , 2.மின்னேலே (ஹிந்தி).3.காக்க காக்க 4.காக்க காக்க (தெலுகு) 5.வேட்டையாடு விளையாடு  6.பச்சைக்கிளி முத்துச்சரம் 7.வாரணம் ஆயிரம் 
8.விண்ணை தாண்டி வருவாயா 9.தெலுகு 10.ஹிந்தி 11. நடு  நிசி நாய்கள் 12.நீதானே என் பொன்வசந்தம் 13.தெலுகு 

ரீமேக் கழித்தால் 8 படம் .

1.மின்னலே :  முதல் படம் ஓரளவு பார்க்கும்படி இருந்தது.கதையோ,திரைக்கதையோ எதுவும் புதிதில்லை.இருந்தாலும் அலைபாயுதே மாதவன் ,ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என்று கரை ஏறிய படம்.இன்று அவர் எடுக்கும் படங்களுக்கு மின்னலே பரவாயில்லை 

2.காக்க காக்க : அவரது முழு ஸ்டைல் வெளியே வந்த படம்.இன்றும் போலீஸ் படங்களில் இடம் உண்டு.எனக்கு முழு திருப்தி தந்த படம்.சூர்யாவை வெளி காட்டிய படம்.

3.வேட்டையாடு விளையாடு: கமலுக்கு  அப்படியொரு அறிமுக காட்சி ரொம்ப நாட்களுக்கு பின்.அடக்கி வாசித்த கமல்,ஆர்பாட்டம் செய்யும் வில்லன்கள் ,கௌதமின் அமெரிக்கா என்று படம் விளையாடியது.சரி கௌதம் என்று ஒரு ஆள் வந்துவிட்டார் என்று நினைத்தேன்.

4.பச்சைக்கிளி முத்துச்சரம்: எனக்கு பிடித்த படம்.சரத் படத்திற்கு பொருந்தவில்லை.இந்த கதையை முதலில் கமலிடம் வேட்டையாடு விளயாடுவிர்க்கு முன் சொன்னாராம்.கமலுக்கு பிடிக்கவில்லை .நிறைய பேருக்கு படம் பிடிக்க வில்லை.

இதற்க்கு பின் வந்த படங்கள் எல்லாமே எனக்கு பிடிக்கவில்லை 

5.வாரணம் ஆயிரம்: ரொம்ப போர்,படம் ரொம்ப நீளம்.கடத்தல் காட்சிகள் என்று தேவை இல்லாத நிறைய காட்சிகள் படத்தில் உண்டு.படம் முடிவதற்குள் ஒரு வித அயர்ச்சி வந்து விட்டது.வழக்கம் போல ஹாரிஸ் காப்பாற்றினார்.

6.விண்ணை தாண்டி வருவாயா :  இந்த படம் சிலருக்கு பிடித்திருக்கிறது என்று கேள்வி பட்டு ஆச்சர்யம் அடைந்தேன்.எப்பா செம போர்.ரகுமான் இல்லாவிட்டால் என்ன ஆகி இருக்கும். ரெட் ஜியான்ட் -உதயநிதி இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்காவிட்டால் படம் ஊத்தி கொண்டிருக்கும்.நான் இந்த படத்தை டி.வி.டியில் பார்க்க தொடங்கி போர் அடித்தால் பொறுமை இழந்து நிறுத்தி நிறுத்தி அடுத்த நாள் அடுத்த நாள் என்று 5 நாள் பார்த்தேன்.இன்றும் கிளைமாக்ஸ் என்ன என்று நினைவில்லை .

7.நடுநிசி  நாய்கள் :  எப்பா படமா அது .உவ்வே .

எனக்கு தெரிந்து கௌதமிடம் எதிர்பார்க்க ஒன்றும் இல்லை.அவர் படம் இப்படிதான் இருக்கும் என்று தெரியும் .பல உலக சினிமா கரைத்து குடித்த பல பதிவர்கள் நீதானே என் பொன்வசந்தம் பார்த்து ஏன் புலம்புகிறீர்கள் ? கௌதம் படத்தை ஏன் எதிர்பார்க்க வேண்டும்.?கிட்டத்தட்ட அதே மன நிலையோடு
மணிரத்னத்தின் கடல் படத்தையும் எதிர்பார்த்து ஏமாற போகிறீர்கள்.வாழ்த்துக்கள்.கௌதமின் அடுத்த படம் சூர்யா உடன் .செம ஜாலி .

Monday, 1 October 2012

விக்ரம் -சூர்யா ---குறிக்கோள் கமல் நாற்காலி

விக்ரம் -சூர்யா ---குறி  கமல் நாற்காலி 



விக்ரம் -வயது 46 
சூர்யா- வயது 37 
விக்ரம் ,சூர்யா இருவரும் இன்றைய தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்திருப்பவர்கள்.எடுத்துக்கொண்ட கதையின் கதாபாத்திரங்களுக்காக உடலை எப்படியும் மாற்ற முயற்சித்து வருபவர்கள்.ரஜினின் இடத்திற்கு ஆசைப்படாமல் கமலின் நாற்காலி மேல் ஆசை கொண்டு உழைத்து வருபவர்கள்.இருவருமே ஒரே இடத்திற்கு முயல்பவர்கள்.இருவரின் முயற்சிகள் ,வெற்றிகள் ,எதிர்காலம் பற்றி பார்க்கலாம்.

விக்ரம் .முதல் படம் வெளிவந்தது 1990.முதல் வெற்றியை பார்த்தது 1999.ஸ்ரீதர்,பி.சி.ஸ்ரீராம்,விக்ரமன் போன்றவர்களின் படங்களில் நடித்தபோதும் தோல்வியே கண்டார்.பட வாய்ப்பு இல்லாமல் மலையாளம்,தெலுங்கு படங்களில் துணை நடிகர் லெவலுக்கு போனவர்.தமிழில் ,பிரபுதேவா, அப்பாஸ் ,அஜீத் (அமராவதி ) போன்றவர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தார்.பம்பாய் படத்தில் நடிக்க தேர்வு செய்யபட்டு பின் வாய்ப்பை இழந்தார்.ஒரே எதிர்பார்பான உல்லாசம் தோல்வி அடைந்தது.விக்ரமின்  தந்தை நடிகர் என்றாலும் பெரிய பின்புலம் எல்லாம் இல்லை.விக்ரமின் அம்மாவின் அண்ணன் நடிகர் தியாகராஜன் (நடிகர் பிரசாந்தின் அப்பா) என்ற போதும் பெரிதாக இவருக்கு உதவவில்லை.

ராதிகாவுடன் லண்டனில் எடுக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சி படத்தில் நடிக்கும் நேரம் .சேது படம் பாதி முடித்த நிலையில் உள்ளது.ராதிகா அடுத்த தொடரில் முக்கிய வேடம் தருவதாக அழைக்கிறார்.விக்ரம்"ஒரு நல்ல படம் (சேது) நடித்துகொண்டிருக்கிறேன்.அது கை கொடுக்கும் என்று நினைக்கிறன்".ஒரு வழியா சேது ஹிட்.அதன் பின் கவனமாக படம் தேர்வு.தில்,ஜெமினி,தூள்,சாமி,பிதாமகன்,அந்நியன் இவை அதன் பின் இவர் கொடுத்த ஹிட் படங்கள்.ஆனாலும் போலீஸ் வேடமா முடியை ஓட்ட வெட்டி ,உடம்பை முறுக்கேற்றி காட்டுதல்.காசியில் பார்வையற்ற பாடகன்.அதிலும் இவரது அற்பணிப்பை பார்க்கலாம்.சமுராய்,கிங்,அருள்,மஜா,பீமா,கந்தசாமி,ராவணன்,ராஜபாட்டை இவை (இன்னும் சில)சறுக்கிய படங்கள்.

சூர்யா -தந்தை 70-80 களின் நாயகன்.முக்கியமாக நல்லபேர் பெற்றவர்.சூர்யாவின் அறிமுகம் எளிதாகவே இருந்தது.அஜீத் வெளியேறிய நேருக்கு நேர் படத்தில் நடிக்க தொடங்கினார்.அந்த படத்தில் ஒழுங்காக நடிப்பு  வராமல் கஷ்டப்பட்டவர்.பாடல் எடுக்க கல்கத்தா போனபோது இங்கே பிரியாணி நல்லயிருன்னு கேள்விபட்டேனே என்று சொல்லி டைரக்டர் வசந்திடம் வாங்கி கட்டிகொண்டார்.அத பட விமர்சனத்தில் (குமுதமோ ,விகடனோ ) சூர்யா நடனம் ஆடுவது அவருக்கும் கஷ்டம் ,அதை பார்க்கும் நமக்கு கஷ்டம் என்று எழுதினார்கள்.எதோ ஒரு விழாவுக்கு எல்லா நடிகர்களோடும் ரயிலில் சென்றபோது தூங்கிகொண்டிருந்த இவரையும் அப்பாஸையும் அதட்டி எழுப்பிய நடிகர்  ரகுவரன் "எப்படிடா உங்களுக்கு தூக்கம் வருது ? சினிமாவில் என்ன சாதிச்சுட்டு தூங்கறீங்க ? என்று திட்டி இவரை உசுப்பி விட்டார்.போய் சேரும்வரை கடும் வார்த்தைகளால் திட்டி அறிவுறுத்தி இருக்கிறார்.அதன் பின் மனதில் உறுதி எடுத்த சூர்யா தன் தனி வெற்றிக்காக(விஜய் இல்லாமல் ) ஆறு ஆண்டுகள் நந்தா வரும்வரை காத்திருந்தார்.அதன்பின் அஜீத் விலகியதால் ஜோதிகா சிபாரிசில் காக்க காக்க நடிக்கிறார்.தொடர்ந்து பிதாமகன்,கஜினி,வாரணம் ஆயிரம்,அயன்,சிங்கம் போன்ற வெற்றி படங்களை தந்துள்ளார்.நந்தாவுக்கு பின் என்றால் உன்னை நினைத்து,ஸ்ரீ,பேரழகன்,ஆயுத எழுத்து,மாயாவி,போன்ற படங்கள் சரிக்கி விட்டது.சில சுமாரான படங்களும் ( ஆறு,வேல்,ஆதவன் )உள்ளன.

இருவருமே படத்திற்கு படம் கடும் உழைப்புடன் செயல்படுகிறார்கள். இருவருமே நடுநடுவே கமல் எண்பதுகளில் முயற்சித்து போல் வணிக மசாலா படங்களிலும் அவ்வபோது நடிக்கிறார்கள்.இருந்தாலும் இருவரின் குறியும் ஒன்றுதான்.அது கமல் நாற்காலி.இதில் வயது சூர்யாவிற்கு கை கொடுக்கிறது.அவர் இன்னும் நாற்பதை தொடவில்லை.அதனால் உடல்,மனம் இரண்டும் பல பரீட்சைகளுக்கு ரெடி.ஐம்பது வயதை நெருங்கும் விக்ரம் உடல் அளவில் தயார் என்றாலும் இயற்க்கை வயதை முகத்தில் காட்டிவிடுகிறது.இன்றைய தமிழ் சினிமாவில் படங்களை தேர்வு செய்வதில் சூர்யாவை மிஞ்ச ஆளில்லை.அவசரப்படாமல் நாள் எடுத்துக்கொண்டு யோசித்து படங்களை தேர்வு செய்கிறார்.அந்த விஷயத்தில் விக்ரம் இன்னும் பொறுமையுடன் செயல் பட வேண்டும்.ராஜபாட்டை எல்லாம் தேவையே இல்லை.ஆனாலும் சூர்யா ஒப்பனையில் ,உடல் தோற்றத்தில் காட்டும் அக்கறை நடிப்பில் விக்ரமை ஒப்பிட்டால் குறைவு என்றே சொல்ல வேண்டும்.உடல் மொழி ,குரல், நடிக்கும் போது  சில PAUSE என்று சொல்லப்படும் அமைதி போன்றவற்றை விக்ரம் சூர்யாவை விட நன்றாக வெளிபடுத்துகிறார்.

என்ன இருந்தாலும் இருவருமே தன் நேரத்திற்காக காத்திருந்து ,கிடைத்ததும் அதில் முழுமையாக வெளிப்படுத்தி,அதில் வெற்றி கண்டதும் அதன் பின்னும் பொறுமையாக படங்களை தேர்வு செய்து வெற்றி பெறுவது என்று ஒரு "வெற்றி கதையை " நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.எந்த துறைக்கும் அந்த வெற்றி கதைகள் ஒரு பாடம் தான்.

Monday, 10 September 2012

HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 4


HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 4 


சென்ற ஹாரர் பதிவுக்கும்(பாகம் 3) இதுக்கும் ஒரு மாதத்திற்கு மேல் இடைவெளி.இன்று எழுதிவிடலாம் என்று தொடங்கினால் ,வேறு ஒரு விஷயம் பற்றி அப்போதே எழுதி ஆக வேண்டி இருக்கும்.அதனால் இந்த இடைவெளி. 2000 ஆண்டுக்கு பின் வந்த ஹாரர் படங்கள் பற்றி பார்க்கலாம்.ஒரு பெரிய மாறுதல் கண்டது இந்த காலங்களில்.பல யோசிக்க முடியாத கோணங்களில் ,தளங்களில் படங்கள் வர தொடங்கின .சாதரணமாக ஒரு பேய் வீடு ,அங்கே செல்லும் ஒரு குழு என்ற கதை எல்லாம் மலை ஏறி இருந்தது.

முதலில் சொல்ல வேண்டியது " FINAL DESTINATION " படம்.2000 மாவது ஆண்டு முதல் பாகம் வந்தது.நான் தொடர்ந்து ஆங்கில படங்கள் பார்க்க தொடங்கியது இந்த படம் பார்த்த பின் தான்.விமானத்தில் பறக்க இருக்கும் ஒருவன் அந்த விமானம் விபத்துக்குள்ளாவது போல் உணர்கிறான்.அதை அப்போது சொல்லும் போது நடந்த கை கலப்பில் இவனும் இன்னும் சிலரும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்படுகிறார்கள்.சில நிமிடங்களில் பறக்க தொடங்கும் அந்த விமானம் வெடித்து சிதறுகிறது.மரணத்தை வென்ற அந்த சிலரை மரணம் மீண்டும் எப்படி துரத்தி கொள்கிறது என்பதே படம்."YOU CAN'TCHEAT THE DEATH " என்பதே படம்.இந்த கதை விமானத்தில் ,இதே போல் ஹைவே விபத்து,தீம் பார்க் விபத்து ,ரேஸ் களம் ,பிரிட்ஜ் என்று கலங்களை மாற்றி பல ஐந்து பாகங்களாக படம் வந்துள்ளது.எனக்கு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ரொம்ப பிடிக்கும்.படத்தின் தொடக்கத்தில் வரும் சாலை விபத்து உடலை வேர்க்க செய்யும்.
அந்த விபத்தின் வீடியோ காட்சி 


WRONG TURN படமும் குறிப்பிடும்  வெற்றியை பெற்றது.நர உணவு உண்ணும் சிலரிடம் மாட்டிகொள்ளும் ஐந்து பேர்.படம் முழுதும் இப்படி அப்படி நகர விடாத படம்.இதுவும் நான்கு பாகங்கள் வந்துள்ளது.THE OTHERS படமும் சொல்லவேண்டிய படம்.1940 களில் நடக்கும் கதை.ஒரு பெரிய தனியான மாளிகை.அங்கே கணவன் இல்லாமல் தன் குழந்தைகளோடு வசிக்கும் பெண்.குழந்தைகள் அடிக்கடி சில குழந்தைகளின் குரல்களை கேட்பதாக சொல்கிறார்கள்.ஆனால் இவளுக்கு கேட்கவில்லை.இப்படி செல்லும் படம் பெரும் அதிர்ச்சியை நமக்கு தந்து முடிகிறது.பல விருதுகளை வென்ற இந்த படம் 2001 இல் வெளி வந்தது.நம் SLUMDOG MILLIONAIRE இயக்குனர் டேனி பாயல் இயக்கி 2002 இல் வந்த 28 DAYS LATER படமும் வெற்றிபடமே. இங்கிலாந்து முழுதும் ஒரு வைரஸ் பரவி நகரே நாடே அழிகிறது.காரணம் ஒருவருக்கு தொற்றினால் அவர் வெறி ஏறி மற்றவர்களை கடிக்க துரத்துவார்கள்.உயிர் பிழைத்த சிலரின் போராட்டமே படம்.அதே கருவை கொண்டு அதன் தொடர்ச்சியாக 28 WEEKS LATER படமும் வந்தது.

ZOMBIE தளத்தை கொண்டு வெளி வந்த "SHAUN OF THE DEAD (2004) மாபெரும் வெற்றியும் விமர்சகர்களால் பாராட்டும் பெற்றது.அதே போல் ZOMBIE படங்களாக கொண்டு LIVING DEAD என்ற தொடர் படங்களாக வந்தன.அதே நேரம் ஒரு பெரிய தொடர் படத்துக்கான விதை விழுந்தது.அது தான் "SAW".கிட்டத்தட்ட நம் அந்நியன் போல் ஆனால் வேறு மாதிரி.உயிரின் அருமை தெரியாதவர்களை அவர்களுக்கு மரணத்தை நெருக்கமாக காட்டி கொள்வது அல்லது அதில் பிழைத்தவர்களை தன்னோடு வைத்துகொள்வது என்று இருப்பவன் ஜான்.இந்த படம் ஏழு பகுதிகளாக வந்து கலக்கியது.அதிலும் இன்னும் சிறப்பான விஷயமாக ஒவ்வொரு ஆண்டும் அதே அக்டோபர் கடைசி வெள்ளி அடுத்த பாகம் வெளிவரும் என்பது.அப்படி தொடர்ந்து ஏழு ஆண்டுகள் ஏழு பாகங்கள் வந்தது.இன்றளவும் ஹரரர் franchaise படங்களில் அதிக வசூல் செய்துள்ள சாதனை படம் இது.

HOSTEL (2005) படமும் கவனிக்க தக்க வெற்றியை பெற்றது.நம்மில் பலருக்கு சிலர் மேல் தீராத  கோபம் இருக்கும்.அந்த ஆள் கையில் கிடைத்தால் என்னென்ன கொடுமைகள் செய்வீர்கள் ?ஆனால் எதுவும் செய்ய முடியாது.அதே கோபத்தை தீர்த்துக்கொள்ள வேறு ஒருவர் யார் என்றே தெரியாத ஒரு மனிதன் உங்களிடம் மாட்டினால் ? அவனை என்ன பண்ணினாலும் நீங்கள் பயப்பட தேவை இல்லை.அப்படி மாட்டிகொண்ட மூன்று நண்பர்களை பற்றி கதை.முதல் அரை மணி நேரம் என்ன படம் இது ஒருவேளை எதாவது X RATED படமா என்று சந்தேகம் வந்துவிடும்.அந்த அளவிற்கு காட்சிகள்.அதன் பின் கிட்டத்தட்ட படம் தொடங்கி முக்கால்  மணிநேரம் கழித்தே படத்தில் பரபரப்பு வரும்.படம் மூன்று பாகங்கள் .ஆனால் முதல் பாகம் போல் மற்றவை ஈர்க்கவில்லை.PARANORMAL ACTIVITY படம் பற்றி சொல்லவேண்டும்.உங்கள் வீட்டில் தனிமையில் தூங்கு கொண்டிருகிறீர்கள்.உங்களை சுற்றி ,அந்த அறையில் என்ன நடக்கும் ? நீங்கள் அதை பற்றி எப்போதாவது நினைத்ததுண்டா? அப்போது இந்த படம் பாருங்கள்.முடிந்தால் இரவில்.படம் எனக்கு எந்த பயத்தையும் எனக்கு ஏற்படுத்தவில்லை.சிலர் பயந்ததாக கேள்விபட்டேன்.

GRUDGE ,RING போன்ற சீன ஹர்ரர் படங்கள் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட்டன.மேலும் எழுபதுகளில் வந்த THE HILLS HAVE THE EYES,TEXAS CHAINSAW MASSACRE ,THE LAST HOUSE ON THE LEFT போன்ற படங்கள் மீண்டும் எடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றன.EVIL DEAD பட இயக்குனர் எடுத்த DRAG ME TO HELL, STEPHEN KING எழுதிய 1408 ,VACANCY போன்ற படங்கள் இந்த வருடங்களில் குறிப்பிட தக்கவை.மூன்று ஆண்கள் ,இரு பெண்கள் வாரா இறுதியை இன்பமாக கழிக்க ஆள் அரவமற்ற பகுதியில் யாரிடமோ அல்லது எதனிடமோ மாட்டிகொள்கிறார்கள்.இதே மைய கருத்தை கொண்டு குறைவான செலவில் குப்பையாக நிறைய படங்கள் வந்தன.வித்தியாசமான களத்தில் எடுக்க பட்டவை கவனிக்க வைத்தன.
ஹர்ரர் பட  முந்திய பகுதிகள் லிங்க்
பகுதி 1 -http://scenecreator.blogspot.in/2012/07/horror-1.html
பகுதி 2-http://scenecreator.blogspot.in/2012/07/horror-2.html
பகுதி 3-http://scenecreator.blogspot.in/2012/07/horror-3.html

Friday, 31 August 2012

TWIST ENDING ஆங்கில படங்கள் :

TWIST ENDING ஆங்கில படங்கள் :

ஆங்கில படங்களில் இறுதி காட்சியில் ஒரு பெரும் திருப்பம்(TWISTED ENDING) வந்து நம்மை அசர அடித்துவிடும்.அப்படி பட்ட படங்கள் பல மறக்க முடியாதவை.சில படங்கள் படம் தொடங்கி கதை ஏதோ ஒன்றை நோக்கி சென்று கொண்டிருக்கும்.அப்படியே போய் கொண்டிருக்கும்போது கிளைமாக்ஸ் ஒரு பெரிய அதிர்ச்சியை நமக்கு தரும்.பலருக்கு தெரிந்த உதாரணமாக saw படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சியை சொல்லலாம்.ஒரு எங்கோ ஒரு கழிப்பறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருவர் கண் விழிக்கிறார்கள்.அருகே இறந்த நிலையில் ஒரு பிணம்.அங்கே தொடங்கி பல திருப்பங்களை சந்திக்கும் படம் ,இறுதில் பிணமாக படுத்திருந்தவன் எழுந்து நடந்து செல்வது தான் திருப்பம் .இது உதாரணம் தான்.இது த்ரில்லர் படங்களில் மட்டுமல்ல சாதாரண டிராமா வகை சார்ந்த படங்களிலும் உண்டு.அப்படி அசரடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.

THE OTHERS(2001): படம் மெதுவாகத்தான் போகும்.ஆனால் முடிவை கொஞ்சமும் யாரும் யூகிக்க முடியாது.படம் தந்த அதிர்ச்சி போக கொஞ்ச  நேரம் ஆனது .
ORPHAN(2009):  இதுவும் ஒரு அதிர்ச்சியான முடிவை ( உண்மையை ) சொல்லும் படம். ஒரு குடும்பத்தில் அனாதையாய் வாழ வரும் சிறுமி கொஞ்ச கொஞ்சமாக  மற்ற குழந்தைகளிடம் தன் முகத்தை காட்டுகிறாள்.அவள் யார் ? 

THE MACHINIST(2004) : ஒரு ஆண்டாக தூங்காமல் இருக்கும் ஒருவன் சந்திக்கும் சம்பவங்கள்.முடிவு ?
THE USUAL SUSPECTS(1995) : ஒரு திருட்டு கும்பலை போலீஸ் வளைக்கிறது.அதில் சிக்கிய ஒருவன் தரும் வாக்கு மூலம். இறுதி புத்திசாலி தனமானது -குழந்தை தனமானது எப்படி வேண்டும் ஆனாலும் சொல்லலாம்.இந்த கிளைமாக்ஸ் போல் தமிழில் சமீபத்தில் வந்த ஜீவா நடித்த வந்தான் வென்றான் இருக்கும்.

FIGHT CLUB(1999): படத்தின் இறுதியில் இரண்டு பேர் இல்லை.ஒருவனின் கற்பனைதான் மற்றவன் என்பது ஷாக்.
THE UNINVITED(2009): தந்தை மறுமணம் செய்து கொள்கிறான்.தன் தாய் இறந்த பின் மன நல காப்பகத்தில்  இருந்து வரும் பெண் தன் ஒரே ஆறுதாலாக நினைப்பது அவள் சகோதரியை .கடைசியில் அவள் எப்போதோ இறந்து போனவள் என்பது தான் ட்விஸ்ட்.இது ஒரு ரீமேக் படம்.TALE OF 2 SISTERS என்ற படமே மூலம்.
THE GAME(1997): படத்தின் மொத்த பரபரப்பும் ஒரு விளையாட்டான செட் அப் என்று கடைசியில் தெரியும் போது கொஞ்சம் திருப்தி இல்லை.
HIDE AND SEEK(2005): ROBERT DE NIRO நடித்த படம். படத்தின் முடிவை யூகித்து விடலாம்.அதனால் படம் மொக்கைதான்.
OLD BOY(2003): கொஞ்சமும் ஜீரணிக்க முடியாத முடிவு.ரொம்ப அப் செட் ஆக்கிய படம். எனக்கு பிடித்த படங்களில் முக்கியமான இடம் உண்டு.இந்த படம் பற்றி ஏற்கனவே முழு விமர்சனம் எழுதி உள்ளேன்.லிங்க் : http://scenecreator.blogspot.in/2012/05/old-boy.html
IDENTITY(2003) : ஒரு மழை நாள்.இரவு .ஒரு தனிமையான  ஹைவே ஹோட்டல்.அங்கே மாட்டிக்கொண்டவர்கள் பத்து  பேர்.அடுத்தடுத்து மரணம்.முடிவு ட்விஸ்ட்.

THE PRESTIGE(2006): இரு மாஜிக் நிபுணர்கள் ,ஒருவரை ஒருவர் வீழ்த்த போராடும் படம். இந்த மாதிரி ட்விஸ்ட் அடிக்கும் படங்களின் ராஜா  நோலன் இயக்கிய படம் சொல்லவே வேண்டாம்.
DONNIE DARKO(2001): ஒரு வீட்டின் மீது விமானத்தின் ஒரு பகுதி விழுகிறது.அதில் தப்பிய ஒருவன் உலகம் அழியபோவதை நம்புகிறான்.முடிவில் அவனே இறந்து போய் விட்டதை சொல்கிறார்கள்.ரொம்ப மொக்கை.
DEAD SILENCE(2007): ஏற்கனவே இறந்து போனவனை வைத்து படம் முழுதும் உயிரோடு இருப்பதாய் போல் காட்டி இருப்பார்கள்.கொஞ்சம் அதிர்ச்சிதான்.
TRIANGLE(2009): படம் உங்களை உள்ளே இழுத்து விடும்.ஒரு கப்பல் பயணத்தில் அடுத்தடுத்து கொலைகள்.எப்பா என்ன த்ரில் .அருமையான படம்.
JACOBS LADDER(1990): தொன்னூறுகளில் வந்த படம்.இப்போது பார்த்தால் முடிவு  கொஞ்சம் யூகித்துவிடும்படி உள்ளது.காரணம் நிறைய அந்த வகை படங்கள்.

இந்த மாதிரி முடிக்கும் படங்கள் நிறைய உள்ளது.அதிலும் படம் முழுதும் நாம் ஒரு மன ஓட்டத்தில் பயணிக்கிறோம்.அப்படியே போய் கொண்டே இருக்கிறோம் .அதுவரை பார்த்து வந்த ஒரு விஷயம் முற்றிலும் அது அப்படி இல்லை. என்று சொல்லும் போது தான் இது போன்ற அதிர்ச்சி நமக்கு ஏற்படும்.நீங்கள் பார்த்த இந்த வகை படங்களை எனக்கு சொல்லுங்கள்.

Thursday, 9 August 2012

எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய தமிழ் படங்கள்


எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய தமிழ் படங்கள் :

சில படங்கள் ஷூட்டிங் துவங்கும் முன்பே ஒரு ஆர்வத்தை நமக்கு ஏற்படுத்திவிடும்.அதற்க்கு காரணம் அந்த படத்தின் கூட்டணி.நமக்கு பிடித்த ஹீரோ நடிக்கும் படம் என்றால் இருக்கும் எதிர்பார்ப்பை விட அதே ஹீரோ ஒரு எதிர்பாராத டைரக்டர் உடன் கூட்டணி அமைத்தால் இருக்கும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம்.மேலும் சில ஹீரோக்கள் இந்த படத்தில் இப்படி ஒரு வேடத்தில்,இத்தனை வேடத்தில் ,இத்தனை கெட்அப் களில் நடிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு இன்னும் எகிறும்.ரஜினி படங்களுக்கு எப்போதுமே அதீத எதிர்பார்ப்பு இருக்கும்.மணிரத்னம் ,ஷங்கர் போன்றவர்களின் படங்களுக்கு யார் ஹீரோவாக இருந்தாலும் எதிர்பார்ப்பு இருக்கும்.அப்படி நாம் மிகவும் எதிர்பார்த்த  ஒரு படம் நம்மை முழுமையாய் திருப்தி செய்துள்ளதா என்பதே கேள்வி? அப்படி நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய படங்களை பற்றி பார்ப்போம்.இந்த படங்கள் நடிகர்களின் ரசிகர்களையும் தாண்டி சராசரி மக்களையும் எதிர்பார்க்க வைத்தவை.நாம் விழுந்து  அடித்து கொண்டு பார்த்தவை.

நவரத்தினம் : எம்.ஜி.ஆர். நடித்த படம் இது. சிவாஜி நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்ததற்கு போட்டியாக இன்னும் சொல்ல போனால் உல்டாவாக ஒரே எம்.ஜி.ஆர் ஒன்பது கதாநாயகிகளோடு பல சந்தர்பங்களில் வருவார்.அதில் நிறைய பேர் அவரை விரும்புவார்கள்.அவர் ஒருவரை மட்டுமே விரும்புவார்.இதில் இன்னும் சிறப்பென்றால் நவராத்திரி படத்தை இயக்கிய எ.பி.நாகராஜன் தான் இந்த படத்தையும் இயக்கினார்.மிகுந்த எதிர்பார்ப்பில் வந்த இந்த படம் ஓடவில்லை.

கர்ணன்: இந்த படம் அப்போது பிளாப் என்று சொன்னால் இன்று பலர் நம்ப மறுக்கின்றனர்.மிகுந்த பொருட்செலவில் கலரில் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்டதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது.இப்போது பார்க்க நன்றாக உள்ள இந்த படம் வெளி வந்த பொது ரசிக்க படவில்லை.அதற்க்கு காரணமாய் அப்போது சொல்லப்பட்டது கதை சிறப்பாக சொல்லபடாமல் பிரம்மாண்டம் மட்டுமே தெரிந்ததால்.

பாபா : யாருமே இந்த படத்தின் தோல்வியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.காரணம் படையப்பா என்ற சூப்பர் ஹிட்டுக்கு பின் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின் வரும் ரஜினி படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை.ரஜினி அறிமுகமாகும்போது விசிலடித்த ரசிகன் பின் என்ன நடக்கிறது ,ஓடுவது தலைவர் படம் தானா என்று சந்தேகம் வந்து விட்டது.ராம நாராயணன் படம் போல ஆகிவிட்டதே என்று என்னும்படி ஏழு மந்திரம் ,இமயமலை ,பாபாஜி என்று கொட்டாவி வரவைத்து விட்டது.

ஆளவந்தான்: எதிரபார்க்க வைத்து ரசிகனை ஒரு வித முழுமையில்லாமல் அனுப்புவது ராஜபார்வை காலம்தொட்டே கமலுக்கு பழக்கம் தான்.ஆனாலும் ஆளவந்தான் படத்தின் பிரம்மாண்டம்,கமல் மொட்டை தலையோடு ,உடம்பை ஏற்றி ஆங்கில படங்களுக்கு இணையான ஒப்பனையோடு  வெளிவந்த ஸ்டில்களும்,செய்திகளும் எங்கு பார்த்தாலும் ஆளவந்தான் பேச்சுதான்.அதுவும் பட ரிலீஸ் தள்ளி கொண்டே போனதில் இன்னும் ஆர்வம் கூடியது.ஏற்கனவே படம் அதிக செலவு இதில் கமல் டூப் போட்டு எடுத்த காட்சியை மீண்டும் எடுக்க சொல்லி செலவு என்று தாணு " ஆளவந்தான் அழிக்கவந்தான் " என்று குமுதத்தில் பேட்டி கொடுக்கும் அளவுக்கு ஊற்றி கொண்டது.இந்த படத்தோடு வந்த படங்கள் ஷாஜகான்,நந்தா,தவசி,மனதை திருடி விட்டாய் போன்ற படங்கள்.எதுவுமே பெரிதாக ஓடாதது ஒரு விஷயம்.(நந்தா சுமார்.)

தமிழன் :
விஜய் படங்களில் அப்போது பெரிய பட்ஜெட்டில் தயாரான படம்,உலக அழகி பிரியங்கா சோப்ரா நடிக்கும் முதல் படம் என்று செய்தி எதிர்பார்ப்பை ஏற்றியது.ஆனால் படம் சட்டம் ,நாயகன் முக ஸ்டாம்ப் என்று ஓவராக இருந்தது.பொதுவாக விஜய் படங்கள் அவரது ரசிகர்களை மட்டுமே எதிர்பார்க்க வைக்கும்.பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இருக்காது.காரணம் விஜய் எந்த பெரிய இயக்குனரோடும் அப்போதெல்லாம்  சேர மாட்டார்.

சிட்டிசன் : அஜித்துக்கு ஒரு மார்க்கெட் வந்த பின், வித்தியாசமான படங்களில் கெட்அப் மாற்றி நடிக்க தொடங்கினார். தினம் ஒரு செய்தி ,இது அஜித்தா என்று சந்தேகிக்கும் புகைப்படங்கள் என்று இந்த  படம் வெளிவரும் வரை எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் படம் எதிர்பார்த்தபடி இல்லை.நிக் ஆர்ட்ஸ் என்பது கிட்டத்தட்ட அஜித்தின் சொந்த நிறுவனம் போன்றது.அஜித்துக்கு மார்க்கெட் இல்லாத போது ராசி என்ற படத்தை இந்த நிறுவனம் தயாரித்தது .அஜீத் ஒரு நல்ல விஷயமாக தனக்கு மார்க்கெட் இல்லாத போது தன்னை வைத்து படம் எடுத்த நிறுவனங்களுக்கு மார்க்கெட் வந்தவுடன் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்தார்.அப்படி நெருக்கமான நிக் ஆர்ட்ஸ் இந்த சிடிசன் படத்தை எடுத்தபோது அஜீத் தன் சொந்த பணத்தை அதிகம் முதலீடு செய்தார்.ஆனால் படம் தோல்வி.கிட்டத்தட்ட இதேபோல் வந்த சாமுராய் படமும் தோல்விதான்.இந்த லிஸ்டில் அசல்,ஏகன்,பில்லா 2 அடக்கம்.காரணம் அந்த படங்களின் அதீத எதிர்பார்ப்பு.

கந்தசாமி : படத்தொடக்க அழைப்பித்தழுக்கே ஒரு அழைப்பித்தழுக்கு 15 ஆயிரம் செலவு(லேப்டாப் தான் அழைபிதழ்).விக்ரம் பெண்ணாக,90 வயது முதியவாராக என்று செய்திகள்.ஸ்பெயின் , பெரு என்று ஷூட்டிங் போன நாடுகளின் பட்டியல் .சேவல் கெட்டப் .எல்லாமே விழலுக்கு இரைத்த நீரானது.ராவணன் ,ராஜபாட்டை வரை இப்படி கிளப்பிவிடப்பட்டு தோல்வி அடைவது விக்ரம் படங்களின் வாடிக்கை ஆகிவிட்டது.அந்த அளவு எதிர்பார்ப்பில்லாமல் வந்த தெய்வதிருமகள் ஓரளவு ஓடியது.

பாய்ஸ்: ஷங்கர் படங்களில் மக்களுக்கு பிடிக்காத படம் என்றால் பாய்ஸ் தான் முதல் இடம். அதிக முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் ,இரட்டை அர்த்த வசனங்கள் ,எப்படி எப்படியோ செல்லும் திரைகதை என்று படத்தின் குறைகள் நிறைய.போதா குறைக்கு தினமலர் வேறு கற்பனையான செய்திகளை தினமும்( ரஜினி தன் மகள்களோடு இந்த படம் பார்க்க வந்ததாகவும் ,படம் மோசமாக இருந்ததால் அவர்களை பாதியிலேயே அவர் அனுப்பிவிட்டதாகவும் செய்தி) வெளியிட்டு முடிந்தவரை எதிர்தது.மகளிர் அமைப்புகளும் ,ஹிந்து அமைப்புகளும் வேறு சேர்ந்து கொண்டு எதிர்த்தன.இங்கே இத்தனை களோபரங்கள் நடந்தாலும் தெலுங்கில் படம் ஹிட்.

அவன் இவன் :  இப்படி பட்ட மோசமான ,ஒன்றுமே இல்லாத பாலா படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.விஷாலின் நடிப்பு வீண் ஆனது.ஒரே விஷயங்கள் திரும்ப திரும்ப அவர் படங்களில் வந்து சலிப்படைய வைத்து விட்டது.

சர்வம் : அறிந்தும் அறியாமலும் , பட்டியல்,பில்லா மூன்று  ஹிட் படங்களுக்கு பின் விஷ்ணுவரதன் இயக்கம்,ஆர்யா,த்ரிஷா  ,யுவனின் ஹிட் அடித்த இசை என்று படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.அதை சுத்தமாக பொய்யாகும் வகையில் இருந்தது படம்.

கன்னத்தில் முத்தமிட்டால்: அலைபாயுதே ஹிட்.அடுத்த படம் அப்போதைய ஹிட் ஹீரோ மாதவன்,சிம்ரன் ,எ.ஆர்.ரகுமான் என்று ஒரு செமையான அலைபாயுதே போல் ரொமாண்டிக் படம் எதிர்பார்த்து வந்த ரசிகனுக்கு முற்றிலும் மாறுபட்ட அவர்கள் கொஞ்சமும் யோசிக்காத தளம்.அதை தொடர்ந்து ஆயுத எழுத்து ,ராவணன் என்று தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.என்னதான் அவர் படத்தை பற்றிய விஷயங்களை ரகசியமாய் வைத்து இருந்தாலும் எதிர்பார்ப்பு கிளம்பி விடுகிறது.

இந்திரலோகத்தில் ந.அழகப்பன்: 23 ம் புலிகேசியின் வெற்றி இந்த படத்தை எதிர்பாக்க வைத்தது.எமலோகம் கதை விட்டதால் படம் பப்படம் ஆனது.

சக்கரகட்டி : எ.ஆர்.ரகுமான் என்பதுதான் இந்த படத்தின் முதல் விசிடிங் கார்டு.படமே 1.50 நிமிடம் தான் ,அதில் ஆறு பாடல்கள் அறை மணி நேரமென்றாலும் மிச்சம் இருக்கும் ஒரு மணி சொச்ச நேரத்தை உட்கார விடாமல் செய்த படம்.

3: இப்படி ஒரு எதிர்பார்ப்பு கிளம்பும் என்று படம் எடுக்க தொடங்கும் போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.காரணம் "கொல வெறி " .அதுவே படத்திற்கு மைனஸ் ஆகி ஓவர் எதிர்பார்ப்பு படத்தை காலி செய்துவிட்டது.

இது போல் வருடத்திற்கு ஒரு படமாவது நம்மை ஏமாற வைக்கும்.பொதுவாக  எமலோகம்,சினிமாவில் சினிமா ( வெள்ளித்திரை ,கோடம்பாக்கம் போன்ற படங்கள்) போன்ற கதைகள் தமிழில் எடுபடுவதில்லை.அது பற்றி வேறு ஒரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Tuesday, 24 July 2012

தமிழ் படங்களின் ஒப்பனிங் - ஒரு பார்வை


தமிழ் படங்களின் ஒப்பனிங் - ஒரு பார்வை 

இன்று ஒரு படம் நன்றாக இருந்தாலும் மோசமாக இருந்தாலும் படத்தின் வெற்றியை ஒப்பனிங் தான் தீர்மானிக்கிறது.ஒரு படம் ரிலீஸ் ஆன நாளில் இருந்து அதன் பின் வரும் ஞாயிற்று கிழமை வரை வசூல் தான் ஒப்பனிங் வசூல் என்பது.பெரும்பாலும் படங்கள் வெள்ளிகிழமைகளில் தான் வெளியிடப்படும்.பண்டிகை நாட்களில் இது மாறலாம்.ஒரு படத்தின் வெற்றியை ஓபனிங் தீர்மானிக்க தொடங்கியது ரஜினி நடித்த "சிவாஜி " படத்தில் இருந்துதான்.அதற்கு முன் ஒரு படத்தின் வெற்றி அந்த படம் எத்தனை நாட்கள் ஓடியது என்பதை வைத்துதான் தீர்மானிக்கபட்டு வந்தது.ஆனால் சிவாஜி படத்தின் வெற்றியை தீர்மானிக்க நாட்கள் தேவை படவில்லை.எத்தனை காட்சிகள் ,தியேட்டர்களில் ஓடியது என்பதும் அதன் மூலம் எவ்வளவு வருமானம் வந்தது என்பதும்தான் படத்தின் வெற்றியாக உருவானது.

ஆனால் சில படங்கள் வெளிவந்த சில நாட்கள் கூட்டமில்லாமல்,பின் மெல்ல கூட்டம் வரத்தொடங்கி ஹிட் ஆன படங்களும் உண்டு.சேது,சித்திரம் பேசுதடி,உள்ளத்தை அள்ளித்தா,பூவே உனக்காக என் பட்டியல் நீளும்.மக்களுக்கு பிடித்திருந்து வாய்வழியாக சொல்லப்பட்டு சில நாட்களில் கூட்டம் வரத்தொடங்கி பின் நூறுநாள்,இருநூறு நாள் ஓடிய படங்கள் எல்லாம் உண்டு.ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட ஹீரோவின் படத்தை போட்டு ,சிறு படங்கள் நன்றாக இருந்தாலும் எடுக்கப்படும் நிலைக்கு ஆளாக்கி தங்கள் படத்தை வெளியிட்டு முழுக்க லாபம் மட்டுமே குறிக்கோள் என்ற நிலைக்கு ஓபனிங் முறை வழி வகுக்கிறது.இதற்க்கு முக்கிய காரணம் டி வி டி .படம் வந்த அடுத்த நாளே அற்புதமான பிரிண்ட் வரத்தொடங்கியதும்,ஒரு டிக்கெட் விலை நூறை தொட்டுவிட்டதாலும் ,முப்பது ரூபாயில் குடும்பமாக பார்கிறார்கள்.படித்தவர்கள் கூட இவர்களே வெளிநாட்டு படத்தை காப்பி அடித்துதான் படம் எடுக்கிறார்கள் .இவர்கள் படத்தை இப்படி பார்த்தால் என்ன என என்ன தொடங்கிவிட்டார்கள்.

2007 ஆம் ஆண்டு சிவாஜி படத்தின் சென்னை உரிமையை 6.2 கோடிக்கு அபிராமி தியேட்டர் வாங்கியது.அதற்க்கு முன் வந்த சந்திரமுகி கூட நெருங்க முடியாத தொகை அது.போட்ட காசை எடுப்பதற்கு புதிய முறை கையாளப்பட்டது.அதுதான் அதிக அரங்குகளில் வெளியிடும் திட்டம்.அதற்க்கு முன் ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் 10 அல்லது 15 அரங்குகளில் தான் வரும்.ஆனால் சிவாஜி 30 அரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.அப்படம் முதல் நான்கு நாட்களில் 1.34 கோடிகள் வசூலித்து,மூன்றாம் வாரத்திலேயே போட்ட 6.2 கோடியை வசூலித்து கிட்டத்தட்ட சென்னையில் மட்டுமே 12 கோடி கிடைத்தது.அதுபோல் வெளிநாடுகளிலும் அதிக அரங்குகளில் வெளியிட்டு நல்ல பணம் கண்டது .அதன் மூலம் தமிழ் படங்களுக்கு புதிய வெளியீட்டு முறை களமிறக்க பட்டது.சிவாஜிக்கு பின் பில்லா சென்னையில் மூன்று நாட்களில் 59 லட்சங்கள் ,மொத்தமாக சென்னையில் 4.5 கோடி வசூல் பெற்றது.அன்றைய தேதியில் அது பெரிய விஷயம் தான்.அதன் பின்
தசாவதாரம் சென்னையில் மூன்று நாட்களில் 95 லட்சம் மொத்தமாக சென்னையில் மட்டுமே 11 கோடி பெற்றது.
மங்காத்தா 5 நாட்களில் 1.8 கோடியும் மொத்தமாக சென்னையில் எட்டு கோடியும் பெற்றது.ரஜினி ,கமலுக்கு பின் சென்னையில் எட்டு கோடி தொட்ட நடிகர் என்ற பெருமையை அஜீத் பெற்றார்,
7 ஆம் அறிவு 5 நாட்களில் 2.2 கோடியும் மொத்தமாக 9 கோடியும் தொட்டது.ரஜினி கமலுக்கு பின் சென்னையில் 9 கோடி தொட்ட நடிகராக சூர்யா பெயர் பெற்றார்.
விஜய் நடித்த வேலாயுதம் 5 நாட்களில் சென்னையில்  1.95 கோடியும் மொத்தமாக சென்னையில் 8 கோடியும் கடந்த முதல் விஜய் படமாக அமைந்தது.

இப்போது படம் நன்றாக இருந்தால் மூன்று வாரத்தில் லாபம் பார்த்துவிடுகிறார்கள்.ஐந்து வாரம் ஓடினால் அப்படம் மிகபெரிய வெற்றி.ஒரு படத்தின் வெளியீடு எதிர்பார்ப்பை தவிர்த்து படம் வெளியாகும் காலம்,அரங்குகளின் எண்ணிக்கை போன்றவையும் இப்போது ரொம்ப முக்கியம்.பண்டிகை காலங்களில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட படங்கள் வருவதால் வெளியிடும் அரங்குகள் குறையும் அதனால் வசூலும் குறையும்.உதாரணமாக மங்காத்தா ,பில்லா 2 ,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள்  தனியாக வேறு படங்கள் போட்டியில்லாமல் வந்து வசூல் அடைந்தன.ஆனால் 7 ஆம் அறிவு வேலாயுதம் இரண்டும் ஒரே நாளில் வந்ததால் இரண்டு படங்களுமே பாதிக்கபட்டிருக்கும்.தனித்தனியாக வந்திருந்தால்  இரண்டுமே இன்னும் அதிகம் வசூல் அடைத்திருக்கும்.தற்போதைய நிலவரப்படி ரஜினி,கமல்,விஜய்,அஜீத்,சூர்யா போன்றவர்கள் படங்கள் நல்ல ஓபனிங் பெரும்  .சில படங்கள் நடிகர்களை தாண்டியும் ஓபனிங் பெரும்.வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் அழகப்பன் ,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்ய படவைக்கும் ஓபனிங் பெற்றது..அதற்க்கு காரணம் வடிவேலுவின் முந்தய படமான புலிகேசி மற்றும் ராஜேஷ் -சந்தானம் கூட்டணியில் வந்த முந்தய படமான பாஸ் எ பாஸ்கரன்.அது மட்டமல்ல அந்த நேரத்தில் வேறு புதிய படங்களை வர விடாமல் தடுக்கும் அந்த பட குழு.

டிஸ்கி :இந்த ஓபனிங் வரவும் அதிக விளம்பரம் தேவை.நல்ல சில படங்கள் விளம்பரம் இல்லாமல் போய் விடுவதும் உண்டு.மேலே சொன்ன வசூல் சில புத்தகங்களிலும் ,நெட்டிலும் கண்டதன் அடிப்படையில் எழுதப்பட்டது.

Friday, 20 July 2012

HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 3


HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 3 

ஹரர் படங்களின் முன்னோட்டத்தோடு 70s, 80s வந்த ஹரர் படங்கள் பற்றி சென்ற இரு பகுதிகளில் பார்த்தோம்.இனி 90 களில் அந்த படங்கள் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.எண்பதுகளில்  வந்து வெற்றி பெற்ற பெரும்பாலான படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் தொன்னூறுகளில் வரிசையாக வர தொடங்கின.மேலும் பல புதிய தளங்களிலும் மக்களை பயமுறுத்த படங்கள் வந்தன.

எண்பதுகளின் வந்த படங்களின் தொடர்ச்சியாக வந்த படங்களில் A NIGHTMARE AT ELM SREET ,CHILD'S PLAY,FRIADAY THE 13TH போன்ற படங்கள் பெரும் எதிர்பார்ப்புடன்  வெளிவந்து சில பாகங்கள் வெற்றியும் பெற்றன .ஆனாலும் போக போக அந்த தொடர்ச்சியான படங்கள் மீது மக்களுக்கு ஈர்ப்பு குறைந்து வந்தது.அதற்க்கு காரணம் படத்தில் விஷயமில்லாமல் ஏனோ தானோ என்று எடுக்கப்பட்ட படங்கள். முதல் பாகங்களில் பெயர் பெற்றாகி விட்டது.இனி இந்த பெயருடன் இத்தனையாவது  பாகம் என்று போட்டுவிட்டால் அந்த பட ரசிகர்கள் வந்து படத்தை வெற்றி ஆக்கிவிடுவார்கள் என்று படத்தில் திணிக்கப்பட்ட காட்சிகளுடன் வந்து ரசிக்கபடாமல் போய் விட்டன.

இந்தநிலையில் தான் SILENCE OF THE LAMBS என்ற படம் சத்தமில்லாமல் வந்து பரப்பாக ஓடியது.91 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படம் ஒரு SERIAL KILLER ஐ பற்றியது.நகரில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு பெண் அதிகாரிக்கு சிறையில் உள்ள  நர மாமிசம் உண்ணும் ஒரு டாக்டர் உதவுகிறார்.இந்த படம் 5 ஆஸ்கார் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.அதற்க்கு பின் குறிப்பிட வேண்டிய படம் என்றால் SCREAM .இந்த படம் SLASHER என்ற வகையை சார்ந்தது(படம் முழுவதும் கொலையாளி ஏதோ ஒரு ஆயுதத்தை வைத்து கொலைகள் செய்வது).படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் படம் இளைஞர்களை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்டது.

ஏறக்குறைய அதே SLASHER வகையை கொண்டு மேலும் இரு படங்கள் குறிப்பிட தகுந்த வெற்றியை பெற்றது.அவை I KNOW WHAT YOU DID LAST SUMMER, URBAN LEGEND.இதில் I KNOW WTHAT YOU DID LAST SUMMER படம் நான்கு மாணவர்கள்.(இரு ஆண்,இரு பெண்) குடித்துவிட்டு பெரும் மகிழ்ச்சியுடன் காரில் வரும் போது மலை பாதையில் ஒருவனை இடித்து விடுகிறார்கள்.அவன் இறந்துவிட்டான் என்று நினைத்து அவன் உடலை அப்புறபடுதும்போது அவன் விழித்துக்கொள்ள அவனை ஏரியில் முழ்கவிடுகிரார்கள்.பின் நால்வரும் இதை யாருக்கும் சொல்ல கூடாது என்றோ சத்தியம் செய்து பிரிகிறார்கள்.அடுத்த ஆண்டு அதே நாள் அவர்களில் ஒருவளுக்கு "I KNOW WTHAT YOU DID LAST SUMMER "என்று ஒரு கடிதம் வருகிறது. பின் அவள் கொள்ளபடுகிறாள்.மற்றவர்கள் என்ன ஆகிறார்கள்  என்பதே படம்.விமர்சர்களால் மோசமான படம் என்று விமர்சிக்கபட்டாலும் படம் நல்ல வசூல் பெற்று மேலும் இதே தீம் கொண்டு "I STILL KNOW WHAT YOU DID LAST SUMMER " மற்றும்" I ALWAYS KNOW WHAT YOU DID LAST SUMMER" என்று இரு படங்கள் வந்தன.

URBAN LEGEND படம் நம்ம ஊரில் விசில் என்று அப்படியே எடுத்திருப்பார்கள்.இதுவும் விமர்சகர்களால் கிழிக்கப்பட்டு வசூல் பெற்ற படம்.JACOBS LADDER படம் வித்தியாசமான களத்துடன் இறங்கியது.வியட்நாம் போரில் போரிட்ட ஒரு வீரன் ஓய்வு பெற்று வாழும்போது சில பயமுறுத்தும் உருவங்கள் மற்றும் மன ரீதியான மாற்றங்களை உணர்கிறான்.போரில் வீரர்கள் மேலும் வெறி கொண்டு தாக்க மறைமுகமாக மருந்துகள் செலுத்த பட்டதை படம் சொல்கிறது.

FROM DUSK TILL DAWN,NIGHT WATCH,WISHMASTER,RING(JAPANESE),AUDITION( ரொம்பவும் கொடூரம்  நிறைந்த படம்), போன்ற படங்கள்  தொன்னூறுகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும். இரண்டாயிரம் ஆண்டுக்கு பின் வந்த ஹர்ரர் படங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

இதன் முதல் பாகம் http://scenecreator.blogspot.in/2012/07/horror-1.html

இரண்டாம் பாகம் http://scenecreator.blogspot.in/2012/07/horror-2.html

Tuesday, 10 July 2012

HORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 2

HORROR படங்கள் ஒரு பார்வை -பாகம் 2 


ஹரரர் படங்களை பற்றிய முன்னோட்டத்தோடு 1970 களில் ஹரரர் படங்களை பற்றி பார்த்தோம்.இனி எண்பதுகளில் அப்படங்களின் வளர்ச்சி பற்றி பாப்போம். STEPHEN KING பற்றி சொன்னேன் இல்லையா? அவர் யோசிக்க முடியாத பல விஷயங்களில் திகில் கதைகளை எழுதி புகழ் பெற்றார்.  MISERY,THE DARK HALF,THE SHAWSHANK REDEMPTION,THINNER,THE GREEN MILE,SECRET WINDOW,1408,THE MIST போன்ற படங்கள் அவரது கதைகள் தான்.திகில் படங்களில் அவர் பங்களிப்பை தவிர்க்க முடியாது.1980 இல் வந்த THE SHINING படம் அவரது கதை தான்.ஹர்ரர் படங்களின் மாஸ்டர் பீஸ் என்று இன்றைக்கும் சொல்ல படும் படம் அது.ஒரு எழுத்தாளர் விடுமுறை சீசன் இல்லாத ஒரு நேரத்தில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு பிரம்மாண்டமான ஹோட்டலுக்கு பாதுகப்பாளராக பொறுப்பேற்கிறார் .அங்கே தனிமையில் அவர் குடும்பம் சந்திக்கும் அனுபவங்களே படம்.இறுதி காட்சியில்  காட்டப்படும் HEDGE வடிவ தோட்டம் பிரம்மிக்க வைக்கும் (கீழே படத்தில் உள்ளது).


FRIDAY THE 13TH படம் பெரும் வரவேற்ப்பை பெற்ற படம் .ஆற்றங்கரை ஓரம் உள்ள தனிமையான வீட்டிற்க்கு விடுமுறையை கழிக்க வருகிறவர்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் ஒருவனால் கொள்ளபடுகிறார்கள்.ஒவ்வொரு படத்திலும் இறுதியில் கொள்ளப்படும் அல்லது கொன்றுவிட்டதாக கருதப்படும் ஜேசன் அடுத்த படத்தில் உயிரோடு வந்து அதே வேலையை  செய்கிறான்.முதல் பகுதி படம் விமர்சகர்களால் கிழித்து தொங்க விடப்பட்டாலும் மக்களுக்கு அந்த திக் திக் வினாடிகள் பிடித்து விட்டது ,வசூலும்  அமோகம்.தொடர்ந்து இன்றுவரை அதை திருப்பி திருப்பி எடுத்து வருகிறார்கள்.என்ன மக்களுக்கு தான் ஆர்வம் போய் விட்டது.படத்தின் வெற்றிக்கு இசை முக்கிய காரணம்.ஒரு திகில் படத்திற்கு ஏற்ற வியலின்  விளையாடி இருக்கும்.

NIGHTMARE ON ELM STREET படமும் அதே போல் அதிக பாகங்கள் வந்துள்ளது.கனவில் வந்து கொலை தொந்தரவு கொடுக்கும் ஒருவனின் கதைதான்.இதன் முதல் பாகத்தில் தான் நடிகர் ஜானி டெப் படங்களில் நடிக்க துவங்கி நடித்த முதல் முக்கிய பாத்திரம் ஆகும்.இவற்றை தவிர என்று பார்த்தால் இந்தியர்களுக்கு மிகவும் தெரிந்த EVIL DEAD.குறைந்த செலவில் எங்காவது ஒரு காட்டில் ஒரு ஐந்தாறு நடிகர்களை மட்டுமே வைத்து எடுக்கப்படும் திகில் படங்களுக்கு முன்னோடி இந்த படம்.இது இந்தியர்கள் முதலில் அதிகம் பார்த்த திகில் படமாக இருக்கலாம்.VCR வந்த புதிதில் அதை வைத்திருந்த அனைவரும் இந்த படத்தை பார்த்திருப்பார்கள்.

CHILD'S PLAY வை மறந்து விட்டேனே.மாந்திரீகம் தெரிந்த ஒரு கிரிமினல் போலீஸ் துரத்தலில் சுடப்பட்டு இறக்கும் தருவாயில் தன் உயிரை ஒரு பொம்மையில் செலுத்தி கொள்கிறான்.அந்த பொம்மை செய்யும் கொலைகளே படம்.கதை குழந்தை தனமாக இருந்தாலும் அருமையாய் எடுத்திருப்பார்கள்.இதுவும் ஐந்து பாகங்கள் வரை வந்துள்ளது.

எண்பதுகளில் வந்த மற்ற திகில் படங்களில் குறிப்பிட்டு  சொல்லலாம் என்றால் THE BOOGEYMAN,MY BLODDY VALENTINE,CREEPSHOW,POLTERGEIST,THE THING,FRIGHT NIGHT,THE HITCHER,HELL RAISER,PREDATOR போன்ற படங்களை சொல்லலாம்.

அடுத்த பகுதியில் 90 களில் வந்த ஹர்ரர் படங்களை பற்றி பாப்போம்.
இதன் முதல் பகுதி லிங்க்  http://scenecreator.blogspot.com/2012/07/horror-1.html 


Sunday, 8 July 2012

இந்த IMDB TOP படங்கள் உங்களுக்கு பிடிக்குமா ?


இந்த IMDB TOP படங்கள் உங்களுக்கு பிடிக்குமா ?

IMDB போன்ற தளங்களில் நல்ல ரேடிங் பெரும் எல்லா படங்களும் நமக்கு பிடித்து போவதில்லை.இந்த படத்திற்கு போய் எப்படி இவ்வளவு புள்ளிகள் கிடைத்தது என்று நமக்குள் சில படங்களை பார்க்கும் வேலையில் தோன்றும்.அதே போல் ரைடிங் குறைவாக இருக்கும் படங்கள் முற்றிலும் வீழ்ந்து விடுவதில்லை.நான் இங்கு IMDB யில் டாப் ரேடிங்  பெற்று எனக்கு பிடிக்காமல் போன, முழுதும் பிடித்த ,சுமாரான, பார்க்க உள்ள படங்களை சொல்கிறேன்.இவற்றில் உங்களுக்கு பிடித்து எனக்கும் பிடித்ததும் இருக்கும் ,உங்களுக்கு பிடித்து எனக்கு பிடிக்காமல் போனவையும் இருக்கும்.இறுதில் குறிப்பிட்டுள்ள பார்க்க உள்ள படங்களை பற்றி பார்த்தவர்கள் எனக்கு  சொன்னால் சில படங்களில் இருந்து தப்பிக்கலாம்.

IMDB TOP இல் எனக்கு பிடித்தவை :
KILL BILL
THE DEPARTED
MOMENTO
NO COUNTRY FOR OLD MEN
FARGO
PSYCHO
THE SHAWSHANK REDEMPTION
THE SHINING
OLD BOY

IMDB TOP இல் எனக்கு பிடிக்காமல் போனவை :
USUAL SUSPECTS
SEVEN
SILENCE OF THE LAMBS
RESEVOIR DOGS
DISTRICT 9
BOURNE SERIES
THE SECRET IN THEIR EYES

IMDB TOP இல் சுமாரான படங்கள்:
PRESTIGE
FIGHT CLUB
GREAT ESCAPE
AMORES PERROS 
DOGDAY AFTRENOON

IMDB TOP இல் பார்க்க உள்ள படங்கள்:
PULP FICTION
INCEPTION
SIN CITY
GOOD FELLAS
SHUTTER ISLAND
BLACK SWAN
SCAR FACE
MYSTIC RIVER
BUTTERFLY EFFECT
WAGES OF FEAR
HIGH AND LOW

நண்பர்களே,இந்த படத்தை இன்னும் பார்க்க வில்லையா என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது.பார்க்க உள்ள படங்களில் நீங்கள் பார்த்திருந்தால் அதை பற்றி சொல்லவும்.மொக்கை படமாக இருந்தால் தப்பிப்பேன்.இந்த லிஸ்டில் இல்லாத நல்ல படமாக இருந்தாலும் சொல்லுங்கள்.





Thursday, 5 July 2012

HORROR படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1


HORROR  படங்கள் -ஒரு பார்வை - பாகம் 1

பார்வையாளர்களின் மனதில் ஒரு வித பயத்தையும் ,அவர்களின் எண்ண ஓட்டத்தில் ஒரு பரபரப்பையும் எற்படுதுபவையே HORROR படங்களின் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.அதற்காக படத்திற்கு தேவை இல்லாத ,திணிக்கப்பட்ட கட்சிகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.இதில் பல தீம்கள் உண்டு. பேய் ,ரத்தக்காட்டேரிகள் ,தெரியாத இடத்தில மாட்டிகொள்ளுதல்,அமானுஷ்ய வீடு,அதீத வன்முறையுடன் கொடுமை படுத்துதல்,ஆளை கொள்ளும் வைரஸ்,மனநலம் பாதிக்க பட்ட கொலைகாரன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழில் இதுவரை என்ன மொத்தம் இதுவரை ஒரு முப்பது திகில் படம் வந்திருக்குமா ?அதில்  அதே கண்கள், யார் நீ (ஜெய்சங்கர் நடித்தது),உருவம் (மோகன்),யாவரும் நலம் என்று மிக சில படங்களே தேறும்.மற்றவை ஆங்கில பட தழுவல்களே.மலையாளத்தில் சில படங்கள் உண்டு.தெலுங்கில் சமீப காலங்களில்  A FILM BY ARAVIND என்ற படம் நல்ல முயற்சி.ஹிந்தியில் எனக்குதெரிந்து பெரும்பாலும் ஆங்கில ,உலக படங்களில் இருந்தே உருவபடுகின்றது.
இனி 1970 கள் முதல் இன்று வரை சில தீம்கள்  பற்றியும் அந்த வகையில் சிறந்த படங்களையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க பார்கிறேன்.1960 களில் நான் பார்த்ததில் HITCHCOCK IN PSYCHO, ROMAN POLANSKI IN REPULSION இவையே சிறந்தவை.இனி எழபதுக்கு வருவோம்.

1970 கள் :
எழுபதுகளின் தொடக்கத்தில் 1973 இல் THE EXORCIST படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பீதியை கிளப்பியதை தொடர்ந்து வரிசையாய் அதே போன்ற படங்கள் வந்தது.அதோடு 76 இல் THE OMEN படம் மட்டுமே சொல்லிகொள்ளும்படியாக இருந்தது.இதை ஜென்ம நட்சத்திரம் என்று நம்ம ஊரில் சீன் மாறாமல் எடுத்தார்கள்.அதன் பின் ஆங்கில படங்கள் ஒரு புது விதமான தீம் பிடித்தார்கள்.அதாவது கொடூரமான ரத்தத்தை உறைய வைக்கும் வன்முறைகளோடு படங்கள் எடுக்க ஆரம்பித்தார்கள்.THE HILLS HAVE THE EYES,TEXAS CHAINSAW MASSACRE போன்ற படங்கள் ஒரு குழுவாக அல்லது குடும்பமாக போய் மாட்டி கொள்வதை மையமாக கொண்டு வந்து வெற்றி பெற்றது.STEPHEN KING என்ற பிரபல எழுத்தாளர் பல வித்யாசமான திகில் கதைகள் எழுதி வந்தார்.அவரது CARRIE என்ற கதையை அதே பேரில் எடுத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் கதைகளுக்கு கிராக்கி ஏற்பட்டது.

1980, 1990 அடுத்த பகுதிகளில்