Pages

Wednesday, 26 September 2012

CANNIBAL HOLOCAUST - 18+ படம் :


CANNIBAL HOLOCAUST - 18+ படம்  : 

நீங்கள் HOSTEL ,WRONG TURN போன்ற படங்களை பார்த்ததுண்டா? அது போன்ற படங்கள் பிடிக்கும் என்றால் இந்த படம் அந்த படங்களை விட நான்கு மடங்கு கோரம் நிறைந்ததாக இருக்கும் .பார்க்கும் எண்ணம் இல்லை என்றால் விட்டுவிடலாம்.உலகின்  மிக கோரமான படத்தை நீங்கள் பார்க்க போவதில்லை அவ்வளவுதான்.என்ன ரொம்ப பில்ட் அப் தரேனா? 

உலகின் மிக மோசமான ,கொடூரமான காட்சிகள் நிறைந்த படம் என்று சொல்லலாம்.MOST CONTROVERSIAL FILM EVER MADE என்று சொல்லப்பட்டு வரும் படம்.படம் பல நாடுகளில் தடை செய்ய பட்டுள்ளது .இன்றும் தடை உள்ளது.படம் வெளியான நேரத்தில் இந்த பட இயக்குனர் RUGGERO DEODATO மீது வழக்கு போடப்பட்டு கைது செய்யபட்டார்.அவர் மீது சொல்ல பட்ட குற்றம் "SNUFF FILM" எடுத்துள்ளார் .மேலும் படத்தில் உண்மையிலேயே நான்கு நடிகர்கள் கொல்லபடுகிறார்கள் என்பதே.கோர்ட்டில் இயக்குனர் மறுத்தாலும் அந்த நால்வரையும் அவரால் கோர்ட்டில் தோன்ற வைக்க முடியவில்லை.காரணம் அவர்கள் முன்பே தயாரிப்பு மற்றும் இயக்குனரோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி படம் வெளியாகி ஒரு ஆண்டுக்கு வெளியே தலை காட்ட கூடாது ,அதாவது வேறு படங்களிலோ ,பட விளம்பர நிகழ்ச்சிகளிலோ,மீடியா முன்  தோன்ற கூடாது என்பது.காரணம் நிஜ FOUND FOOTAGE பிலிம் என்று விளம்பர படுத்த பட்டதால். இதனால் மேலும் சிக்கலாகி போனது.ஒப்பந்தத்தை ரத்து  செய்து அவர்களை தொலை காட்சியில் காட்டிய  பின் தான் அவரால் வெளியே வர முடிந்தது.இருந்தாலும் படத்தை வெளியிட தடை விதித்து விட்டார்கள்.

மேலும் படத்தில் கொள்ளப்படும் மிருகங்கள் நிஜமாக கொள்ளபடுகின்றன என்பதை இயக்குனர் ஒத்துக்கொண்டார்.ஒரு ஆமை உயிரோடு கொல்லப்பட்டு கிழிக்கப்பட்டு உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாக வெளியே எடுக்கபடுவதை சாவகாசமாக காட்டுவார்கள்.ஒரு காட்டு குரங்கை பிடித்து தலையின் மேல் பாகத்தை மட்டும் வெட்டி அதை தலை கீழாக அழுத்தி ரத்தத்தை பிடித்து குடிப்பார்கள்.ஒரு பன்றியை நிஜமாகவே சுடுவார்கள்.இப்படி பல கண்றாவிகள்.

சரி மேற்கொண்டு தொடர விரும்பவில்லை.இவ்வளவு கொடூரங்கள் இருக்கும் படத்தின் கதை தான் என்ன? நான்கு ஆண்கள் ,ஒரு பெண் கொண்ட ஒரு பட குழு டாகுமெண்டரி எடுக்க அமேசான் காடுகளில் உள்ள பழங்குடியினரில் ஒரு குழுவை பற்றி ஆராய்ச்சி செய்ய காட்டின் உள்ளே போகிறார்கள்.போனவர்கள் திரும்ப வராததால் அவர்களை தேடி ஒரு ப்ரோபெசர் புறப்படுகிறார்.அங்கே அந்த பழங்குடியினரை சந்திக்கிறார்.தான் தேடி வந்த பட குழு இந்த பழங்குடியினருக்கு பெரும் கொடுமை செய்திருப்பதை அறிந்து கொள்கிறார்.மெல்ல அவர்களோடு பழகி அந்த பட குழு கொள்ள பட்டு விட்டதை தெரிந்து கொள்கிறார்.அவர்கள் ஷூட்செய்த வீடியோவை அவர்களிடம் இருந்து பெற்று திரும்புகிறார்.தன் அதிகாரிகளுக்கு அந்த பட குழு செய்த கொடுமைகளை அந்த வீடியோ மூலம் தெரிய படுத்துகிகிறார்.

படம் பார்பவர்கள் சகிக்க முடிய வில்லை என்றால் அந்த வீடியோ கிடைக்கும் காட்சியுடன் படத்தை நிறுத்தி விடுங்கள்.மேற்கொண்டு பார்க்க வேண்டாம்.அதற்க்கு மேல் வருபவை எல்லாம் கொடுமையின் உச்சம்.படத்தின் தரம் நிஜ டாகுமெண்டரி போன்ற உணர்வை தரும்.நாகரீகம் அடைந்தாலும் நாமும் காட்டு மிரண்டிகளே என்பதே படம் சொல்வது.படத்தில் நிறைய 18+ காட்சிகள் உண்டு.அதை நாம் அப்படி நினைத்து கொண்டு பார்க்க முடியாது.படத்தை பற்றி எனக்கு சொன்ன மலர்வண்ணன் ,கிரி இருவருக்கும் நன்றிகள்.

Tuesday, 25 September 2012

T20 SUPER EIGHT -அணிகள் ஒரு அலசல் :

T20 உலக கோப்பை  SUPER EIGHT -அணிகள் ஒரு அலசல் :

T20 உலக கோப்பையில் ஒரு வழியாக லீக் போட்டிகள் முடிந்து விட்டன.எல்லா முன்னணி அணிகளும் சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறி விட்டன.எந்த ஒரு அதிர்ச்சியும் தராமல் சிறிய அணிகளான பங்களாதேஷ் ,அயர்லேன்ட் ,ஆப்கானிஸ்தான்,ஜிம்பாப்வே அணிகள் போட்டியில்  இருந்து வெளியேறி விட்டன.உலக கோப்பைகளில் சிறிய அணிகள் திடீரென பெரிய அணி ஒன்றை வென்று அதிர்ச்சி தருவது அவ்வபோது நடந்து வரும் ஒன்று.இந்த உலக கோப்பையில் அது மிஸ்ஸிங் .இனி சூப்பர் எட்டுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் லீக் போட்டியில் ஆடியது பற்றியும் அதன் வாய்ப்புகள் பற்றி பார்க்கலாம்.

பாகிஸ்தான் : இப்போதைக்கு கோப்பை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணியாக நான் நினைப்பது இந்த அணியைதான்.காரணம் எப்படியோ உலக கோப்பை போட்டிகளில் நன்றாக விளையாடி விடுகிறார்கள்.மற்ற அணிகள் ஆண்டுக்கு ஒரு மூன்று ஆல்லது நான்கு சர்வதேச T20 போட்டிகள் ஆடி உள்ளார்கள் என்றால் பாகிஸ்தான் ஆண்டுக்கு பத்திற்கு மேல் ஆடி இருப்பார்கள்.காரணம் கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் நாட்டிற்கு எந்த அணியும் சுற்று பயணம் செய்வதில்லை.அதனால் அவர்கள் தங்கள் சார்பு போட்டிகளை துபையில் நடத்தி வருகிறார்கள்.எந்த அணி சுற்று பயணம் என்றாலும் டெஸ்ட் போட்டிகள் நடத்தாமல் வெறும் ஒரு நாள் ,T20 போட்டிகள் மட்டுமே நடத்த பட்டு அவர்கள் பெரும் அனுபவம் பெற்று விட்டார்கள்.அணியின் பலம் பேட்டிங் -30% பவுலிங் -70% என்று உள்ளது.சயித் அஜ்மல் எப்படியும் மூன்று நான்கு விக்கெட் எடுத்து விடுகிறார்.ரன்னும் அதிகம் கொடுபதில்லை.பேட்டிங் யாரவது ஓரளவு கை கொடுத்து விடுகிறார்கள்.

இந்தியா: வாய்ப்பு இல்லை என்று நினைகிறேன்.சூப்பர் எட்டில் தென் ஆப்ரிக்கா,ஆஸ்திரேலியா ,பாகிஸ்தான் அணிகளை சந்திக்க வேண்டியுள்ளது .பந்து வீச்சு நம்ப முடியவில்லை.ஒரு போட்டியில் நன்றாக வீசுபவரை நம்பினால் அவர் அடுத்த போட்டியில் சொதப்பி விடுகிறார்.ஒரே பலம் பாட்டிங்.அப்படியே பாகிஸ்தான் அணிக்கு தலை கீழாக பாட்டிங் -70% பவுலிங் -30% பலம் உள்ளது.நாம் எவ்வளவு ரன் அடித்தாலும் அடுத்து ஆடும் அணி எளிதில் துரத்தி விடும் நிலைதான் உள்ளது.இதை எல்லாம் மீறி என்  கணிப்பு பொய்த்து இந்தியா வென்றால் மகிழ்ச்சி தான்.

ஆஸ்திரேலியா ; வாட்சன் எனும் ஒருவரை  பெரிதும் சார்ந்துள்ளது ஆஸ்திரேலியா.ஹஸ்ஸி ,வார்னர் போன்றோரை கொஞ்சம் நம்பலாம்.பந்து வீச்சுதான் சுத்தமாக எடுபடவில்லை.அங்கும் கை கொடுப்பது வாட்சன் தான்.பெரிய ஸ்பின்னர் இல்லாதது இழப்பு.

தென் ஆப்ரிக்கா : இனி தான் அவர்களுக்கு கண்டம் .எப்போதும் அவர்கள் கோட்டை விடுவது இங்கே தான்.ஜிம்பாப்வே அணியை பந்தாடிய இவர்கள் அடுத்த போட்டியில் இலங்கையுடன் மழையினால் குறைக்கபட்ட ஏழு ஓவர் ஆட்டத்தில் முதலில் ஆடி 78 ரன்கள் அடித்தனர்.சரி இலங்கை எளிதில் இதை அடித்து விடுவார்கள் என்று நினைத்தால் மிகவும் அற்புதமாக பந்து வீசி வெறும் 46 ரன்கள் மட்டுமே அடிக்க விட்டனர்.அவர்கள் பலம் சரியாக 50-50%  உள்ளதாக நினைகிறேன்.

இங்கிலாந்த் : இவர்களும் சூப்பர் எட்டோடு கிளம்ப வேண்டி இருக்கும் என்று எதிர் பார்க்கிறேன்.ஏமாந்த ஆப்கானிஸ்தான் அணியிடம் செம அடி அடித்த இவர்கள் இந்தியா அணியோடு மிக குறைந்த ரன்னில் சுருட்ட பட்டார்கள்.அவர்கள் பலம் வேக பந்து வீச்சு இலங்கையில் கை கொடுக்காது.இவர்கள் செய்த மெகா தவறு பீட்டர்சன் நீக்கம்.அவரை கமெண்ட்ரி சொல்ல டி.வியில் பார்க்கும் போது கோபம் வருகிறது.அற்புதமாக பேட் செய்ய கூடிய அதுவும் இந்தியா ,இலங்கை போன்ற களங்களில் ஆடி அனுபவம் பெற்ற அவரது நீக்கம் நிச்சயம் யோசிக்க வைக்கும்.சரி இங்கே நன்றாக ஆடும் இயன் பெல்லும் நீக்கம்.என்ன சொல்வது ? 

இலங்கை : இனி அவர்கள் தங்களை வெளி காட்டுவார்கள் என்று எதிர் பார்க்கலாம்.தில்ஷன் சரியாக ஆடாதது குறை.அடுத்துவரும் போட்டிகளில் மலிங்கா எடுபடலாம்.மென்டிஸ் என்ற மர்மம் வேறு உள்ளது .எப்போதும் ஆஸ்திரேலியா ,தென் ஆப்ரிக்க போன்ற அணிகளோடு தடுமாறுவார்கள்.பாட்டிங் எடுபட்டால் முன்னேறலாம்.

நியூசிலாந்து : இவர்களும் கிளம்ப வேண்டி இருக்கலாம்.மெக்கலம் அவுட் ஆகி விட்டால் அடிக்க ஆள் இல்லை.பந்து வீச்சும் சொல்லும் படி இல்லை.ஏதாவது அதிசியம் நடந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.

மேற்கு இந்தியதீவு: ஒரே பாயிண்ட் கெயில் அடித்தால் வெற்றி.இல்லாவிட்டால் கிளம்பலாம்.அது தான் நிலை.

மற்றபடி சிறிய அணிகள் அடுத்த சுற்றுக்கு வந்து சுவாரஸ்யத்தை கெடுக்காமல் இருந்தது ஒரு விஷயம்.பெரிய கேள்வி இந்த செப்டம்பர் ,அக்டோபர்  மாதங்களில் இந்தியா ,இலங்கை போன்ற இடங்களில் மழை வரும் என்பது தெரிந்தே ஏன் அங்கே போட்டிகளை நடத்த ஒப்பு கொண்டார்கள்? சென்ற இரண்டு T20 உலக கோப்பைகள் முறையே 2009 இல் இங்கிலாந்தில் ,2010 இல் மேற்கு இந்தியா தீவுகளில் நடந்தது.அதுவும் ஐ.பி.எல் முடிந்ததும் ஜூன் ,ஜூலை மாதங்களில் .அதே போல் இந்த முறையும் அட்டவணை தயாரிக்காமல் விட்டு விட்டு இப்போது மழை வந்து கெடுத்து விடுகிறது.இனி எத்தனை போட்டிகளில் மழையால் பாதிக்க போகிறதோ தெரியவில்லை.

Monday, 17 September 2012

சுந்தர பாண்டியன் - இளைய டி.ஆர் .சசிகுமார் பட விமர்சனம்


சுந்தர பாண்டியன் - இளைய டி.ஆர் .சசிகுமார் பட விமர்சனம் 


அது என்ன ராசியோ தெரியவில்லை இதுவரை வந்த சசிகுமார் படங்களை திரை அரங்குக்கு மட்டுமே சென்று பார்த்துள்ளேன்.அதுவும் எப்படியோ பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்து விடுகிறது.சில படங்களை நிச்சயம் தியட்டருக்கு போகலாம் என்று நினைத்தாலும் சந்தர்ப்பம்  அமையாது ((உதா: நான் படம்).இந்த படம் பார்க்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லாமல் இருந்தது.காரணம் டி.வியில் போட்ட ட்ரைலர்கள் சசிகுமார் முந்தய படங்களை ஞாபக படுத்தியதால் கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தேன்.இந்த படம் பார்க்கும் சந்தர்ப்பம் நேற்று கிடைத்தது.நீண்ட நாட்களுக்கு பின் கமலா தியேட்டர்.(முன்பு வேட்டை சின்ன ஸ்க்ரீனில் பார்த்தேன்.)அரங்கம் நிறைந்து இருந்தது.குறிப்பாக அதிகம் பெண்கள் .

நிச்சயம் சசிகுமார் தமிழ் சினிமாவில் ஒரு இடம் பிடித்து  விட்டார் என்று சொல்லலாம்.இத்தனைக்கும் இந்த படம் அவர் நடிக்கும் நான்காவது படம்.போன படம் போராளியே நன்றாக தான் இருந்தது.ஆனால் எதோ ஒன்று குறைந்ததால் சரியாக ஓடவில்லை.அந்த குறையை ஓரளவு நிவர்த்தி செய்துள்ளது என்று சொல்லலாம்.ஆனால் சிலர் எழுதியது போல் நாடோடிகளை இந்த படம் தூக்கி  சாப்பிட்டுவிடும் என்று சொல்ல முடியாது.

கதை என்றால் அதே சசிகுமார் பிராண்ட் காதல் ,நட்பு ,துரோகம் தான்.நம்ம டி.ஆர் எண்பதுகளில் தங்கை செண்டிமெண்டை கட்டிக்கொண்டு அழுதது போல் சசிகுமார் நட்பு செண்டிமெண்டை கட்டிக்கொண்டு அழுகிறார்.டி.ஆர் காலத்தில் சினிமாவை வாழவைத்தது பெண்கள் கூட்டம் அதனால் தங்கை  செண்டிமெண்ட்.இப்போது சினிமாவை வாழவைத்து வருவது இளைஞர்கள் ,அதனால் நட்பு செண்டிமெண்ட்.கூடவே "நட்புன்ன என்று ஆரம்பித்து சில பன்ச் டயலாக்.இறுதியில் ஒரு சின்ன திருப்பம்.அவ்வளவுதான் படம்.

சசிகுமார் நடிப்பை குறை சொல்ல முடியாது.ஹீரோயிசம் என்று சேர்த்து உள்ளதை தான் கொஞ்சம் ஜீரணிக்க முடியவில்லை.நாயகி சிரித்தால் அழகாக இருக்கிறார்.படத்தை கொண்டு செல்வது பரோட்டா சூரி தான்.மனுஷனுக்கு இந்த படம் நிச்சயம் திருப்புமுனை.செம டைமிங் .இனி முன்னணி நகைச்சுவை நடிகராக வந்து விடுவார்.அந்த அளவு அசத்தியுள்ளார்.அரங்கில் கைதட்டல் அதிகம் இவருக்குதான்.சசியும் பல காட்சிகள் இவர் பேசட்டும் என்று அடக்கி வாசித்துள்ளார்.என்ன சூரி  பேசி கொண்டே இருக்கிறார்.அடுத்து சில சின்ன படகதாநாயகர்கள் (அப்புக்குட்டி ,விஜய சேதுபதி ,இனிகோ ) முக்கிய வேடம் ஏற்றுள்ளனர்.ஓடாத படங்களில் நாயகனாக நடிப்பதை விட ஓடும் இந்த படத்தில் நடிக்க இவர்கள் எடுத்த முடிவு பாராட்ட வேண்டியது.

படத்தின் பெரிய மைனஸ் இசை.சசி படங்களில் ஒரு பாடலாவது ஹிட் ஆகும் ,இதில் ஏமாற்றி விட்டாகள்.ஏன்  கவனிக்காமல் விட்டார்கள்.இனி டி.வியில் போட்டு பாடலை ஹிட் ஆக்கினால்தான் உண்டு.இயக்கியவர் சசிகுமாரின் உதவியாளர் பிரபாகரன்.சசி என்ன கதை சொன்னால் ஓகே சொல்வார் என்று அறிந்து அதை எப்படி கொடுத்தால் ரசிக்க வைக்கலாம் என்று அறிந்து படம் எடுத்துள்ளார்.சில படங்கள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.இருந்தாலும் படம் ஹிட் ஆகிவிடும்.