Pages

Wednesday, 27 June 2012

தமிழ் ஊடகங்களின் சார்பு

தமிழ் ஊடகங்களின் சார்பு



பொதுவாக ஒவ்வொரு கட்சியும் ஒரு தொலைக்காட்சியோ ,தின பேப்பர் ,வார இதழ் போன்றவற்றை சொந்தமாக கொண்டு தங்கள் சார்ந்த கட்சியின் விஷயங்களை ,எதிர் தரப்பு மீது புகார் சொல்ல ,எதிர் கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சியின் ஊழல்களை ,அத்துமீறல்களை எடுத்து சொல்ல பயன் படுத்தும்.அந்த ஒரு சார்பு ஊடகங்களில் உதாரணமாக கலைஞர் டி.வி ,ஜெயா டி.வி போன்றவற்றில் ஞாயமான ,சார்பற்ற செய்திகளை எதிர்பார்க்க முடியாது.ஆனால் இங்கு நான் சொல்ல விரும்புவது நடுநிலையான என்று சொல்லிக்கொண்டு ஒரு தரப்புக்கு மட்டும் ஜால்ரா அடிக்கும் இதழ்களை பற்றி.அதற்க்கு முன் ஒரு விஷயம் ,இதில் சன் நெட்வொர்க் சார்ந்த தினகரன்,சன் நியூஸ் போன்றவை அடிப்படையில் தி.மு.க. சார்பு என்றாலும் அவை மற்ற செய்திகளையும் சொல்லும்.தேர்தல் நேரம் என்று வரும் போது முழுக்க தி.மு.க. பக்கம் சாய்ந்து விடும்.அதிலும் ஸ்டாலின் ,அழகிரி பற்றி செய்திகளை பாரபட்சத்துடன் சொல்லும்.மற்ற நேரங்களில் தங்கள் வியாபாரம் சிறக்க முழுக்க வணிக  நோக்கத்தோடு செயல்படும்.இனி மற்றவை பற்றி 
தினமலர்
அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க. சார்பு என்று  சொல்வது தவறு.அந்த கட்சிகளுக்கு அடிமை என்று கூட சொல்லலாம். மற்ற கட்சிகளை ஜென்ம பகை என்று நினைக்கும் பேப்பர்.அதிலும் கடவுள் மறுப்பு கட்சிகள் என்றால் அவ்வளவுதான்.மேலும் பிராமணர்கள்,ஆன்மீக தரப்பு ஆளுகைக்கு வரவேண்டும் என்று நினைக்கும் பேப்பர்.தினசரி கலைஞர் ,காங்கிரஸ் ,ராமதாஸ்,வைகோ ,இடது சாரிகள் என்று அவர்கள் கட்சிக்குள் குழப்பம் செய்வதும்,ஜெயலலிதா என்னமோ உலக புரட்சியாளர் போல் பிம்பம் ஏற்படுத்தவும் முயலும்.மேலும் நித்யானந்தாவை காய்ச்சி எடுக்கும் தினமலர் காஞ்சி சங்கரச்சர்யார் என்றால் பட்டும் படாமலும் இருக்கும்.என்னதான் ஜெயலலிதா மூக்கு உடைபட்டாலும் இது அடிக்கும் சோம்பு சத்தம் அதிகம் கேட்கும்.ஈழ தமிழர்களுக்கும் ,அவர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இவர்களுக்கு பிடிக்காது.கூடங்குளம் மக்களுக்கும் எதிரானது.சமீபத்தில் சசிகலாவை ஜெயலலிதா போயஸ் தோட்டத்தை விட்டு துரத்திய பொது ஜெயலலிதா இனி மக்களுக்காக மட்டுமே,கட்சி களை  எடுக்க பட்டது என்று கொக்கரித்தது.ஆனால் ஜெயலலிதா சசிகலாவை திரும்பவும் அழைதுகொண்டபோது அவர்களுக்கு காது செவிடாகி விட்டது.ஆட்சிக்கு வந்தது முதல் சென்ற ஆட்சியில் இப்படி என்று சொல்லி முதல்வர் இதை மாற்றுவாரா என்று தினமும் பல செய்தி வரும்.ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருஷத்திற்கு மேல் ஆகியும் அப்படி எழுதிய விஷயங்கள் சரி செய்ய பட்டதா என்று கேட்கமாட்டார்கள்.இவர்கள் சினிமா காரர்களையும் விட்டு வைக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பக்கம் முழுதும் நடிகைகளின் படங்களை போட்டு இந்த நடிகையுடன் படுக்க இவ்வளவு ரேட் என்று ஒரு அபத்தம்.திரை உலகம் முழுவதும் ரஜினி உட்பட பலர் இதை எதிர்த்தனர்.


தினத்தந்தி:
          யார் ஆளும் கட்சியோ அவர்களுக்கு சொம்பு அடிக்கும் பேப்பர்.அரசாங்கத்தின் மூலம் வரும் விளம்பர வருமானத்தை இழக்க விரும்பாத தினத்தந்தி இதே ஜெயலிலதா எதிர் கட்சியாக இருக்கும்போது அவர் கொடுக்கும் அறிக்கையை இரண்டு நாட்கள் போடாமல் வைத்திருந்த நாட்கள் எல்லாம் உண்டு.அதனால் தான் யாரையும் பகைத்து கொள்ள மனம் இல்லாமல் கள்ள காதல் ,உல்லாசம் என்று செய்தி போட பக்கம் அதிகம் ஒதிக்கி விட்டனர். 

தினமணி:
         இதன் தலைமை மாறும் போதெல்லாம் தன் சார்பை மாற்றிக்கொள்ளும் தினசரி இது.ஓரளவு கண்ணியமான விஷயங்களை படிக்க இதை நாடலாம்.ஆனால் சார்பற்றது என்று சொல்லிவிடமுடியாது.

குமுதம்:
           இதுவும் கிட்டத்தட்ட தினத்தந்தி போலதான்.ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு சார்பாக எழுதும்.ஆளுங்கட்சி இடைதேர்தலில் ஜெயிக்கும்  என்பது தெரிந்தது.இதற்க்கு போய் அம்மாவின் வெற்றி என்று பக்கத்தை வீணடிக்கும் கட்டுரைகள்.வார வாரம் ரஜினி,விஜய் ,அஜித் என்று முக்கிய நடிகர்கள் பற்றி உசுபேற்றும் கட்டுரைகள்.இவர்கள் போடும் கற்பனைகள் நடக்கவிட்டால் வாய் திறக்க மாட்டார்கள்.அப்படி ஒன்று இவர்கள் சொன்னது போல் நடந்து விட்டால் அவ்வளவுதான்.வானத்துக்கும் பூமிக்கும் துள்ளி குதிப்பார்கள்.ரஜினி பற்றி இவர்கள் இஷ்டத்திற்கும் எழுதி சம்பாதித்தது அளவில்லாதது.
விகடன் :
           இவர்கள் சீசன் பறவைகள்.அடிமைகள் சிக்கிவிட்டால் தீர்ந்தது.கலைஞரை பற்றி எழுதும் இவர்கள் மாறன்களை பற்றி அடக்கி வாசிப்பார்கள்.காரணம் விகடன் சன் டி.வி சீரியல்கள்.இப்போது ஜெயலலிதா ஆட்சி பற்றி மெல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள் .பார்க்கலாம்.
நக்கீரன்:
        இதை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.கிட்ட தட்ட மூன்றாம் தர பத்திரிக்கை போல் செயல் படும்.கேட்டால் புலனாய்வு என்று பெயர்.அதிலும் கலைஞர் சார்பு.

முக்கிய பிரபலான பத்திரிகைகள் பற்றி மட்டும் பார்த்தோம்.இப்படி ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொரு சார்பு.இதில் நாம் நடுநிலையான செய்திகளை தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை.இப்படி ஒரு நிலையில் பாவம் தான் தமிழன்.




Thursday, 21 June 2012

The Devil's Double -- ஆங்கில பட விமர்சனம்


The Devil's Double -- ஆங்கில பட விமர்சனம் 


பிரபலமானவர்கள் குறிப்பாக உயிருக்கு ஆபத்து இருப்பவர்கள் ,தன்னை போலவே இருப்பவரை தன் "டூப்பாக" அதாவது போலியாக பொது இடங்களுக்கு அனுப்புவார்கள்.சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட போலிகள்  கூட உண்டு. சதாம் உசேன்,ஒசாமா பின் லேடன் போன்றவர்கள் ஏழு எட்டு போலிகளை தன்னை போலவே தயார் படுத்தி வைத்திருந்ததாக கேள்விபட்டிருக்கிறோம்.அப்படி ஒரு போலியின் கதை தான் இந்த படம்.இது உண்மை கதை என்று சொல்ல படுகிறது.சதாம் உசேனின் மகன் உதய் தன் தந்தைக்கு கொஞ்சமும் சளைக்காமல் கொடூர குணங்கள் கொண்டவன்.அவன் தன் உயிருக்கு தன்னால் பாதிக்க பட்டவர்களால் ஆபத்து என்று தெரிந்ததும் தனக்கு போலி ஒருவனை தேர்ந்தெடுக்கிறான்.அதன் பின் என்ன என்பதே படம்.


ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் போது மிகவும் கவனம் தேவை.எவற்றை சொல்ல வேண்டும் .எதை தவிர்க்க வேண்டும்.இந்த அளவுகோல் சரியில்லை என்றால் படம் இழுவை ஆகிவிடும்.இந்த படம் அந்த குறைகள் இல்லாமல் மிகுந்த நேர்த்தியோடு எடுக்க பட்டிருகிறது.படம் 1987 வருடம் இராக்கில் தொடங்குகிறது.ஈராக் படையில் இருக்கும் லதிப் என்பவன் ஈராக் இளவரசனும் சதாம் உசேனின் மகனும் ஆன உதயின் போலியாக நடிக்க அழைக்க படுகிறான்.காரணம் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.அப்போது எல்லோரும் இருவரும் ஒரே மாதிரி இருப்பதாக வகுப்பில் பேசப்பட்டதால் ,இவனை தேர்ந்தெடுக்கிறான் .முதலில்  மறுக்கும் லதிப் ,குடும்பத்தை காட்டி மிரட்டப்பட்டதும் ஒப்புகொள்கிறான்.இருவருக்கும் உள்ள மிக சில வேறுபாடுகளையும் டாக்டர்களை வைத்து சரி செய்கிறான்.உதய் தான் பயன் படுத்தும் எல்லாவற்றையும் லதிப் பயன் படுத்த அனுமதிக்கிறான்.மேலும் லதிப் போரில் இறந்துவிட்டதாக அவன் குடும்பத்தை நம்ப வைக்கிறான்.


உதயின் கொடூர குணங்களை வெறுக்கும் லதிப் வேறு வழியில்லாமல் தொடர்கிறான்.இதற்கிடையில் உதையின் காதலி லதிப் காதலி ஆகிறாள்.ஒரு கட்டத்தில் ஒரு 14 வயது பள்ளி சிறுமியை ஒரு பார்ட்டியில் பல பேர் முன்னிலையில் அவளை மானபங்க படுத்த முயற்சிக்கிறான்.தன் தந்தையின் நண்பர் வற்புறுத்தலால் அதை நிறுத்துகிறான்.இருந்தாலும் மறுநாள் அவன் ஆட்கள் அந்த பெண்ணின் இறந்த உடலை வீசிவிட்டு போகிறார்கள்.உதயாக நடிக்கும் லதிப் தன் படை வீரர்களை உற்சாக படுத்த அனுப்பபடுகிறான்.அங்கேயும் அவனை கொள்ள முயற்சி நடிக்கிறது.அதில் தனது விரலை இழக்கிறான் லதிப் .இதனால் கோபப்படுகிறான் உதய்.காரணம் லதிப் விரலை இழந்தால் இவனும் இழக்க வேண்டும்.இல்லாவிட்டால் இவன் வேறு அவன் வேறு என்று தெரிந்து விடும்.அவன் பிறந்த நாள் விழாவின் போது காதலியோடு தப்பிக்கிறான் லதிப் .காதலி தந்திரமாய் இவனை சிக்கவைக்க பார்க்கிறாள்.தப்பிக்கிறான்.


ஈராக் திரும்பும் லதிப் உதயை கொள்ள நேரம் பார்கிறான்.அவனால் பாதிக்க பட்ட சிலர் அவனுக்கு உதவுகிறார்கள்.வழக்கமாய் வீதிகளில் வந்து தனக்கு பிடித்த பெண்களை தூக்கி கொண்டு போய் கற்பழிக்கும் உதய் அன்று 1996 இல் லதீப்பால் ஆணுறுப்பில் சுடப்படுகிறான்.லதீப் தப்பிக்கிறான்.சுடப்படவன் இறக்கவில்லை.லதீபும் அகப்படவில்லை.


உண்மை சம்பவங்கள் என்று சொல்லப்படும் படத்தில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் அதிகம்.பிறந்த நாள் விழாவில் வந்த விருந்தினர்கள் அனைவரையும் நிர்வாணம் ஆக்குதல்,திருமணதிற்கு போய் அந்த மணபெண்ணையே கற்பழிப்பது இப்படி படம் முழுவதும்.அந்த நாடு மக்கள் இவனிடம் என்ன பாடு பட்டிருப்பார்கள் பாருங்கள்.நடுநடுவே சதாம் உசேன் வேறு வருகிறார்.

டிஸ்கி : தன்னை போலவே லதீபையும் மாற சொல்லும் உதய் முகம் ,தாடை மற்றும் பிற விஷயங்களில் என்ன மாற்றங்கள் என்று சொல்லிக்கொண்டே இருவரும் அருகருகே குளிக்கிறார்கள் .அப்போது எட்டி பார்க்கும் உதய் லதிபிடம் அவனின் ஆணுறுப்பை சில இன்ச் வெட்டிக்கொள்ள சொல்கிறான்.அதிர்ச்சியுற்று இதை யார் கண்டுபிடிக்க போகிறார்கள் என்று இவன் கேட்க ,அதற்க்கு பாக்தாத் பெண்கள் என் ஆணுறுப்பை பற்றி அறிவார்கள்.அதனால் அதன் அளவை தனது போல் குறைத்து கொள்ள வேண்டும் என்று சொல்வான்.இந்த ஒரு சீன் படத்தை பற்றி சொல்லிவிடும்.

Tuesday, 19 June 2012

புதிய இயக்குனர்களா ? ஐயோ வேண்டாம் !

புதிய இயக்குனர்களா ? ஐயோ வேண்டாம் !

ஒரு நடிகர் எந்த நிலையில் உள்ள இயக்குனர்களின் படங்களில் நடிக்க விரும்புவார்.நடிக்க வரும் புதிதில்,யார் வாய்ப்பு குடுத்தாலும் நடிப்பார்.இது ஒரு ஹிட் படம் கொடுக்கும் வரை தான்.அதற்க்கு பின் படங்களை அவரது விருப்பம்.இந்த படத்தில் நடித்தவரின் அடுத்த படம் என்று மக்கள் ஒரு படத்தை பற்றி பேசும் வரை தான் இந்த நிலைமை .புதிய இயக்குனர் படங்களில் நடிப்பவர் யார்?.ஒரு நடிகர் கொஞ்சம் வளர்ந்த பின் பிரபலமான இயக்குனர்கள் படங்களில் மட்டுமே என்று முடிவெடுப்பதும் உண்டு.ரஜினிகாந்த் எந்த புதிய இயக்குனர் படத்தில் கடைசியாக நடித்தார் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்குமா? ஒரு நிலைமை அடைந்ததும்  இனி புது இயக்குனர் படங்களில் நடிப்பதில்லை என்றும்,அந்த நேரத்து ஹிட் கூட்டணி அமைத்து படம் வெற்றி பெற்றால் போதும்.புதியவர்களுக்கு வாய்ப்பு  கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை.இதில் அவர் ரசிகர்கள் வேறு ரஜினி படம் எப்படி இருந்தாலும் பாப்போம் என்று.அப்ப ஒரு புதிவருக்கு வாய்ப்பு தரலாமே.இதை அப்படியே கொஞ்சமும் மாறாமல் இப்போது சூர்யா தொடர்ந்து வருகிறார்.வரிசையாக ஹிட் கொடுப்பது இருந்தாலும்,ஒரு புதியவரை கதை பிடித்திருந்தால் கூடவாய்ப்பு தர  தயங்குகிறார்.அவர் கடைசியாக சிலுன்னு ஒரு காதல் படத்தில் கிருஷ்ணா என்பவருக்கு வாய்ப்பு தந்தார்.அதற்க்கு பின் யாருக்கும் இல்லை.விக்ரமும் அப்படியே.


இந்த விஷயத்தில் விஜய் ,அஜித் இருவரும் பரவாயில்லை.விஜய் ஆரம்பத்திலிருந்தே புதியவர்களுக்கு வாய்ப்பு தந்து வருகிறார்.ஆரம்பத்தில் அதாவது அவரது ஹிட் படங்களான லவ் டுடே ,துள்ளாத மனமும் துள்ளும்,திருமலை ,திருப்பாச்சி போன்ற படங்கள் புதிய இயக்குனர்கள்  படங்களே.தான் சொல்வதை கேட்பார்கள் என்பதற்காக பெரும்பாலும் அவர்களுக்கு வாய்ப்பு தருவார். ஆனால் அவரது மார்கெட் சரிய காரணமும் அவர்களே .வேட்டைக்காரன்,அழகியதமிழ் மகன்,சச்சின்,கீதை,தமிழன்,ஷாஜகான்,பத்ரி,நிலாவே வா என்று இவர் வாய்ப்பு கொடுத்து ஊத்தி கொண்ட படங்களை சொல்லி கொண்டே போகலாம்.அவர் மட்டும் சூர்யா போல் பிரபல இயக்குனர்கள் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று முடிவெடுத்து இருந்தால் நிச்சயமாக அவருக்கு சரிவு இருந்திருக்காது.இப்போது அதை உணர்ந்து முருகதாஸ்,கௌதம் மேனன்,ராஜேஷ் என்று வரிசையாய் பிரபல இயக்குனர்கள் படங்களில் நடிக்க உள்ளார்.

அஜித் படங்களில் வாலி,தீனா என்று கொஞ்சமே புதிய இயக்குனர்கள் படங்களில் வெற்றியை கண்டாலும்,முகவரி,சிடிசன் போன்ற படங்கள் எதிர்பார்த்தது போல் ஓடாததால் ,அவர் புதிவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதை குறைத்து கொண்டார்.கொஞ்சம் இடைவேளைக்கு பின் கிரீடம்,ஆழ்வார் என்று முயற்சித்து பார்த்தார்.அவை கைவிட்டு விடவே ,பிரபல இயக்குனர்கள் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.குறைந்த பட்சம் ஓரிரு படங்களாவது இயக்கி இருக்கிறார்களா என்று பார்த்தே வாய்ப்பு அளிக்கிறார்.



ஒரு நடிகர் தொடர்ந்து வெற்றி பெற்று பின் கொஞ்சம் வளர்ந்த பின் புதியவர்கள் குறிப்பாக திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்பளித்து பார்த்தார்.சில படங்கள் வெற்றி அடையவே ,பின் தொடர்ச்சியாக பல வருடங்களுக்கு அவர்கள் படங்களில் மட்டுமே நடித்து பெரும்பாலும் தோல்வி கண்டு தன் மார்கெட்டை இழந்தார்.அவர் வேறு யாரும் இல்லை .நம் கேப்டன் விஜயகாந்த் தான்.கமல் வேறு பாதையில்  சென்று விட்ட பின் ரஜினிக்கு போட்டியாக அதிரடி மசாலா படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற்றுகொண்டிருந்த விஜயகாந்த்  புதிவர்களாலேயே தன் இடத்தை இழந்தார்.அவர் மட்டும் ரஜினி போல் பிரபலங்களுடன் மட்டுமே கூட்டணி என்று சென்றிருந்தால் ,ரஜினிக்கு கடும் போட்டியாக இருந்திருப்பார்.
படம் ஓட வேண்டும் என்பதை மட்டுமே எண்ணிய ரஜினி,சூர்யா படங்கள் நன்றாக ஓடியது -ஓடுகின்றது.தன் இஷ்டம் போல் படம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் விஜயகாந்த் ,விஜய் படங்கள் ஓடவில்லை.இதுதான் முரண்.