Pages

Saturday, 29 June 2013

45 நாள் ---30 ஆங்கில படங்கள்:

45 நாள் ---30 ஆங்கில படங்கள்: 

என் பதிவுகள் படித்திருப்பவர்களுக்கு எனக்கு எப்படி பட்ட ஆங்கில படங்கள் பிடிக்கும் என்று ஓரளவு தெரிந்திருக்கலாம்.எனக்கு பரபரப்பான ,த்ரில்லான படங்கள் பிடிக்கும் .கவிதையாய் ஆமை வேகத்தில் நகரும் படங்கள் பிடிக்காது.அதே சமயம் "THE BUTTERFLY EFFECT" மற்றும்   "TRIANGLE" போன்ற குழப்பி அடிக்கும் படங்கள் பிடிக்கும் என்று சொல்வதா இல்லை பிடிக்காது என்று சொல்வதா என்று ஒரே குழப்பம்.நான் குழம்பி உங்களை குழப்புகிறேனோ ? போதும் அறிமுக பத்தி .



மே 1 முதல் ஜூன் 15 வரை 45 நாட்கள் .எனக்கு வீட்டில் நான் மட்டும்.மனைவி குழந்தை இருவரும் மனைவியின்  வீட்டிற்கு போய் இருந்தார்கள்.எனக்கு பிரச்சனை என்னவென்றால் வீட்டில் மனைவி ,பையன் இருந்தால் நிச்சயம் சேர்ந்தாற்போல் ஒரு அரை மணி நேரம் படம் பார்க்க முடியவில்லை.அதற்குள் பலமுறை அழைக்கபடுவேன்.கணினியில் பார்க்கலாம் என்றால் இந்த பிரச்சனை என்றால் சரி PEN டிரைவில் காப்பி செய்து டிவியில் போட்டு பார்க்கலாம் என்றால் அந்த படங்களில் வரும் ஆபாச வசனங்களை காது கொடுத்து கேட்க்க முடியாத  மனைவியிடம் திட்டு வாங்க முடியவில்லை.குறைந்த பட்சம்  F_CK இந்த வார்த்தை இல்லாத ஆங்கில படங்களே  வருவதில்லை என்று சொல்லும்படி உள்ளது.எவ்வளவோ எடுத்து சொல்லியும் என் மனைவி கேட்பதில்லை .நான் என் வீட்டிற்கு போய் இருக்கும் நாட்களில் இந்த படம் எல்லாம் பாருங்கள் என்று முடிவாக சொல்லி விடுவதால் நானும் அதோடு விட்டு விடுகிறேன்.வீட்டில் நான் அம்மா வீட்டிற்கு  போய் 1 மாதம் இருக்க போகிறேன் என்றதும் எனக்கு செம ஜாலி .காரணம் இதுவரை பார்க்காமல் இருக்கும் உலக ,ஆங்கில படங்கள் பார்க்கலாமே.எனக்கு செம வேட்டை.அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் போல் நண்பர்களுக்கு போன் போட்டு பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா  என்று சொல்லி கொண்டிருந்தேன்.

என் டார்கெட் 45 நாளில் 45 படம் என்பது ஆனால் பார்த்தது 30 படங்கள் மட்டுமே.காரணம் IPL.

என் அலுவலக பணி காலை 8 முதல் 2 வரை அல்லது மதியம் 2 முதல் 8 வரை.இருந்தாலும் நான் வீட்டில் இருந்தே LOG-IN செய்து வேலை செய்ய முடியும் என்பதால் பணி  நேரம் என்பது அவ்வுளவு STRICT கிடையாது.இந்த 45 நாட்களில் தினசரி இரவு 8 வரை என் அலுவலக பணிகள். 8-11.00 அல்லது 11.30 IPL. அதன் பின் 11.30 முதல் 1 மணி அல்லது படம் முடியும் வரை என தினசரி ஒரு படம் என்று ஒரு வெறியோடு படம் பார்த்தேன்.காலையில் எழ முடியாமல் கஷ்டப்பட்டு எழுந்து வேலையை பார்த்தாலும் அன்று இரவும் அதே அட்டவனைதான்.

இடையில் வார இறுதியில் நன்றாக இருப்பதாய்  கேள்விப்பட்ட சில தமிழ் படங்கள் (சூது கவ்வும் உட்பட சில படங்கள்) பார்த்தேன்.ஏப்ரலில் கடைசியாக பதிவு போட்ட நான் அதோடு ஜூன் நடுவில் தான் .அந்த அளவிக்கு பிஸி .நடுவில் சில சுப ,துக்க நிகழ்வுகள் என்று சொந்த ஊர் (பக்கத்தில் தான் காஞ்சிபுரம்) செல்லும் வேலை வேறு .

நடுவில் சில படங்களுக்கு எழுத ஆரம்பித்து டிராப்டில் உறங்குகிறது.அப்படி சேர்த்து சேர்த்து விட்டதால் அப்படியே விட்டு விட்டேன்.30 படம் பார்த்தாலும் அதில் தேறியது  என்னவோ 5 அல்லது 6 தான். மேலும் ஒரு 6 அல்லது 7 படங்கள் ஓகே ராகம் .மற்றதெல்லாம். நேரம் தான் வேஸ்ட்.இருந்தாலும் சமீப காலங்களில் இத்தனை தொடர்ச்சியாக படங்கள் பார்த்தது கிடையாது.பாருங்கள் என் வீட்டிற்கு மனைவி திரும்பி 10 நாட்களுக்கு மேல் ஆகிறது .ஒரு ஆங்கில படம் ஏன் ஒரு அரை மணி நேரம் கூட காண முடியவில்லை. 

அதனால் திருமணம் ஆகாத சக பதிவர்களே,இதை படிக்கும் உலக பட ரசிகர்களே திருமணம் ஆகும் முன்பே முடிந்தவரை படங்கள் பாருங்கள்.அதன் பின் நினைத்தாலும் நினைத்த நேரத்தில் முடியாது.



இது 30 படம் பார்த்த முன் கதை.பார்த்த 30 படங்கள் பற்றி அடுத்த பதிவில்.

Friday, 21 June 2013

தில்லு முல்லு --தீயா வேலை செய்யணும் எது பெட்டர் ? ஒரு ஒப்பீடு

தில்லு முல்லு  --தீயா வேலை செய்யணும் எது பெட்டர் ? ஒரு ஒப்பீடு 


இரண்டு படங்களும் ஒரே நாளில் வந்துள்ளது  .இரண்டு படங்களின் மீதும் சிறிதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன்.என் நண்பனிடமும் இரண்டுமே தேறாது என்று தான் சொல்லி கொண்டு இருந்தேன்.இப்போதெல்லாம் காமெடி படம் என்று தெரிந்தால் நம் ஆட்கள் தியேட்டர் உள்ளே போகும்போதே சிரிக்க தயார் ஆகிவிடுகிறார்கள் போல. பணம் கொடுத்து உள்ளே வந்துள்ளோம் சிரிக்கவிடால் எப்படி என்று நினைக்கிறார்களோ என்னவோ இன்னைக்கு சனிக்கிழமை என்றாலும் சிரிக்கிறார்கள் (நன்றி- சுஜாதா) சமீபத்தில் கேடி பில்லா படத்தில் நான் எங்குமே சிரிக்க வில்லை.படத்தில் உட்காரவே முடியவில்லை.ஆனால் அரங்கம் அதிர சிரித்து கொண்டிருக்கிறது.அப்போதுதான் ஒன்று நன்றாக உரைத்தது.காமெடி கூட ரசனை மாறுபடும் என்று.நான்  23 ஆம் புலிகேசி,ஓகே ஓகே போன்ற படங்களை சிரிப்பு வராமல் பார்த்துவிட்டு வந்தேன்.கலகலப்பு பிடித்தது.சமீப கால முழுநீள காமெடி என்று அந்த படத்தை சொல்லலாம்.

சென்ற வெள்ளி கிழமை பதிவுகளில் மதியம் முதலே தில்லு முள்ளு ,தீய வேலை செய்யணும் 2 படங்களின் விமர்சனம் வர தொடங்கிவிட்டன.தில்லு முள்ளு செம காமெடி ,தீயா வேலை செய்யணும் வயிற்றை பதம் பார்த்தது என்று 2 படங்களுமே பாசிடிவ் ரிசல்ட். 2 நாள் கேப்பில் 2 படங்களையும் பார்த்தேன்.இரண்டை பற்றியும் எழுதும் எண்ணம் இல்லை.அதுவும் இல்லாமல் ஒரு வாரம் ஆகிவிட்டது இனி ஏன் என்று. திடீர் என இரண்டும் காமெடி ,இந்த வார இறுதியில் இரண்டில் ஒன்றை  பார்க்க திட்டம் போட்டிருக்கும் நண்பர்களுக்கு உதவும்படி இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்து எது பெட்டர் என்று எழுதலாம் என்றி ஐடியா.இதோ நீங்கள் படித்து கொண்டிருகிறீர்கள்.



தில்லு முல்லு 

1. ரீமேக் படம் .தெரிந்த கதை .புதிதாய் சேர்த்த விஷயங்களும் பெரிதாய் ஈர்க்கவில்லை. 
2.சிவா அடிக்கும் சில காமெடிகள் ஜஸ்ட் ஓகே.
3.ஹீரோயின்  சரியில்லை.
4. பழைய தில்லு முள்ளில் காட்சிகளில் ஒரு அழுத்தத்தோடு ஒன்றி பார்த்து சிரிக்கலாம்..இதில் காட்சிகளில் அது மிஸ்ஸிங்.வேகமாக கடந்து செல்கிறது.
5.முதல் ஒரு 20 நிமிஷம் ஓகே. நடுவில் பெரிய மொக்கை. இறுதி 15 நிமிடம் சந்தானம் வருகிறார்.ஓகே. கொஞ்சம் யோசித்திருந்தால்  சந்தானம் வரும் அந்த காட்சிகளை இன்னும் சிறப்பாக (சிரிப்பாக ) எடுத்திருக்கலாம்..
6.படத்தில் ஒரு 4, 5 இடங்களில் Instant சிரிப்பு .படம் அவ்வளவே.

தீயா வேலை செய்யணும் குமாரு :

1. ஆரம்ப அறிமுகம் RJ பாலாஜி கொடுக்கிறார்.அதுவே படத்தில் ஒன்ற வைத்துவிடுகிறது. நல்ல தேர்வு.அவர் பேசும் சில காமெடிகளும் சூப்பர்.சந்தானம் வரும் வரை அவர் தான் கலகலப்பு . ( கணேஷ் வெங்கட்ராமை செல்வராகவன் படத்து 2nd ஹீரோ என்று சொல்வது செம.
2.எனக்கு சித்தார்த் பிடிக்காது.அதனால் சொல்ல ஒன்றும் இல்லை.ரொம்பவும் இளைத்த ஹன்சிகா மற்ற படங்களை விட அழகாக காட்டி இருக்கிறார்கள்? இல்லை இளைத்ததால் அழகாகிவிட்டாரா  தெரியவில்லை.
3.சந்தானம். இவரை கொடுத்த கால் சீட்டுக்கு நன்றாக பயன் படுத்தி இருக்கிறார்கள்.(ஒரு நாள் சம்பளம்  17 லட்சமாமே?)  ஒவ்வொரு ரூபாயும் வொர்த் .
4.ஒரே சீனில் வந்தாலும் டெல்லி கணேஷ் இன்னொரு ஒரு சீனில் வரும் மனோபாலா இருவரும் கலக்கி இருக்கிறார்கள்.அதிலும் மேட்டர் புரோக்கர் ஏன் வேட்டி  கட்டுகிறார்கள் என்று மனோபாலா சந்தானத்திற்கு புரிய வைக்கும் இடம் அவர் புரிய வைக்கும் முன்பே அரங்கம் அதிர்கிறது.
5.படத்தில் ஒரு 15 இடங்களில் Instant சிரிப்பு .4, 5 இடங்களில் நினைத்து நினைத்து சிரிப்பு .
6.படம் முடிந்து வெளியே வரும் போது தில்லு முள்ளு தராத நிறைவை தீயா வேலை செய்யணும் தருகிறது .

மொத்தத்தில் 

தில்லு முள்ளு ------   BELOW JUST OK 

தீயா வேலை செய்யணும் குமாரு  ------  BETTER THAN OK 

Saturday, 20 April 2013

404- ERROR NOT FOUND--உண்மையில் பேய் படம் தானா ?


404- ERROR NOT FOUND--உண்மையில் பேய் படம் தானா ?


பேய் படத்தில் இவ்வளவு விஞ்ஞான மருத்துவ விஷயங்களா? இது உண்மையில் பேய் படம் தானா ? அப்படி நினைத்து தான் பார்க்க தொடங்கினேன்.ஆனால் அதிகம் பயமுறுத்தாமல் பல ட்விஸ்ட் மூலம் நம்மை ஆச்சர்யபடுத்திவிடுகிரார்கள்.ஆனால் HORROR படம் இல்லை. PSYCHOLOGICAL THRILLER வகை படம். 
2011 இல் வந்த இந்த படத்தில் தெரிந்த முகங்கள்  யாரும் இல்லை. 

ஒரு மருத்துவ கல்லூரி .அங்கே முதலாம் ஆண்டு படிக்க வருகிறான் நாயகன் அபிமன்யு சுருக்கமாய் அபி.அங்கே சீனியர் மாணவர்கள் பலமாக ராக்கிங் நடக்கிறது.இவனும் சிக்குகிறான்.அந்த கல்லூரியின் விடுதியில் தங்கி இருக்கிறான்.அங்கே விடுதியின் 404 ஆம் எண் அறை யாருக்கும் தராமல் பூட்டபட்டு இருப்பதை பார்கிறான்.அந்த அறையில் 3 வருடங்களுக்கு முன் படித்த ஒருவன் தற்கொலை செய்து கொண்டதால் அவன் ஆவி அந்த அறையில் இருப்பதாய்  சொல்ல படுகிறது.அதை மறுத்து அந்த அறையை தனக்கு தருமாறு கேட்கிறான்.

ஆனால் தர மறுக்க படுகிறது.கல்லூரியில் ஆசிரியிராகவும் பெரிய எழுத்தாளராகவும்,பெரிய மேதையாக இருப்பவர் அனிருத் .அவரும் அந்த கல்லூரியில் பணிபுரிகிறார்.அந்த 404 அறையை அபி கேட்பதை தெரிந்து அதை அவனுக்கு தருமாறு பரிந்துரைக்கிறார்.அவனுக்கு அந்த அறை  கிடைக்கிறது.அடுத்த சில நாட்களில் மீண்டும் ராகிங் .அவன் அந்த அறையில் இருப்பதாய் தெரிந்த சீனியர் ஒருவன் அபியிடம் அவன் அறையில் இறந்தவனை பற்றி முழு விபரமும் அபி தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் அடுத்த முறை பார்க்கும்போது கேட்பேன் என்றும் சொல்கிறான்.


அபி சீரியசாக இறந்தவனை பற்றி தெரிந்து கொள்கிறான்.அப்போது தொடங்குகிறது பிரச்சனை .அந்த அறையில் இவன் கண்களுக்கு இறந்தவன் தெரிய தொடங்குகிறான்.இவனிடம் அவ்வபோது பேசுகிறான்.இவனுக்கு உதவ வருகிறார் அந்த ஆசிரியர் அனிருத் .உண்மையில் அவன் பார்ப்பது இறந்தவன் தானா? என்று பல பல அதிர்சிகளை நமக்கு தருகிறார்கள்.மனித மனம் பற்றி டாக்டர் அனிருத் சொல்லும் விஷயங்கள் அருமை.நம் மாதவன் நடித்த எவனோ ஒருவன் படத்தை இயக்கிய நிஷிகாந்த் காமத் DR.அணிருதாக நடித்துள்ளார்.அதிலும் கடைசி 5 நிமிடம் .CLASS

எனக்கு தெரிந்து இந்த படம் எந்த ஆங்கில உலக படத்தின் காப்பியும் இல்லை. ஒரு துணிச்சாலான ,புத்திசாலிதனமான படம்.கொஞ்சம் வித்யாசமான சில திடுக்கிடும் ட்விஸ்ட்கள் கொண்ட படம் பார்க்க விருப்பம் என்றால் நிச்சயம் பார்க்கலாம். இந்திய அளவில் ஒரு சிறந்த ,ORIGINAL ஆன கதையோடு கொண்ட ஒரு முயற்சி என்ற முறையில் இந்த படத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.