கௌதம் மேனன் இதுவரை என்ன கிழித்துவிட்டார்?
கடந்த மூன்று நாட்களாக பதிவுகளில் ஒரே குரலில் அழுகை சத்தம் .கௌதம் ஏமாற்றிவிட்டார்.படத்தில் ஒன்றுமே இல்லை ஏற்கனவே பார்த்த அவரது படங்கள் போலவே இருக்கு .படம் ஒரே இழுவை.ரொம்ப ஸ்லோ .கதை நகரவே மாட்டேன் என்கிறது என்று பல்வேறு விமர்சனங்கள்.இதில் கௌதம் மேனன் பட ரசிகர்கள் வேறு தனி ட்ராக்கில் விமர்சனம் போடுகிறார்கள் .நான் கேட்கிறேன் அப்படி இதுவரை அசத்தும் படங்கள் எத்தனை கொடுத்துவிட்டார்.அவர் படங்களுக்கு ஏன் இவ்வளோ எதிர்பார்ப்பு.என் எதிர்பார்ப்பு இந்த படத்தை பொறுத்தவரை அவர் படம் தொடங்கும் போதே முடிவு செய்துவிட்டேன்.இது லவ் படம்.ரொம்ப மெதுவாக போகும்.பாட்டு அருமையாய் இருக்கும்.ஆனால் படம் மொக்கையாய் இருக்கும்.என்று.
கௌதம் மேனன் இதுவரை இரண்டு வகையான படங்களே அதிகம் எடுத்து உள்ளார்.
1.slow moving love stories
2.partly fast paced police stories.
இதுவரை 13 படங்கள் எடுத்துள்ளார்.
1.மின்னலே , 2.மின்னேலே (ஹிந்தி).3.காக்க காக்க 4.காக்க காக்க (தெலுகு) 5.வேட்டையாடு விளையாடு 6.பச்சைக்கிளி முத்துச்சரம் 7.வாரணம் ஆயிரம்
8.விண்ணை தாண்டி வருவாயா 9.தெலுகு 10.ஹிந்தி 11. நடு நிசி நாய்கள் 12.நீதானே என் பொன்வசந்தம் 13.தெலுகு
ரீமேக் கழித்தால் 8 படம் .
1.மின்னலே : முதல் படம் ஓரளவு பார்க்கும்படி இருந்தது.கதையோ,திரைக்கதையோ எதுவும் புதிதில்லை.இருந்தாலும் அலைபாயுதே மாதவன் ,ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என்று கரை ஏறிய படம்.இன்று அவர் எடுக்கும் படங்களுக்கு மின்னலே பரவாயில்லை
2.காக்க காக்க : அவரது முழு ஸ்டைல் வெளியே வந்த படம்.இன்றும் போலீஸ் படங்களில் இடம் உண்டு.எனக்கு முழு திருப்தி தந்த படம்.சூர்யாவை வெளி காட்டிய படம்.
3.வேட்டையாடு விளையாடு: கமலுக்கு அப்படியொரு அறிமுக காட்சி ரொம்ப நாட்களுக்கு பின்.அடக்கி வாசித்த கமல்,ஆர்பாட்டம் செய்யும் வில்லன்கள் ,கௌதமின் அமெரிக்கா என்று படம் விளையாடியது.சரி கௌதம் என்று ஒரு ஆள் வந்துவிட்டார் என்று நினைத்தேன்.
4.பச்சைக்கிளி முத்துச்சரம்: எனக்கு பிடித்த படம்.சரத் படத்திற்கு பொருந்தவில்லை.இந்த கதையை முதலில் கமலிடம் வேட்டையாடு விளயாடுவிர்க்கு முன் சொன்னாராம்.கமலுக்கு பிடிக்கவில்லை .நிறைய பேருக்கு படம் பிடிக்க வில்லை.
இதற்க்கு பின் வந்த படங்கள் எல்லாமே எனக்கு பிடிக்கவில்லை
5.வாரணம் ஆயிரம்: ரொம்ப போர்,படம் ரொம்ப நீளம்.கடத்தல் காட்சிகள் என்று தேவை இல்லாத நிறைய காட்சிகள் படத்தில் உண்டு.படம் முடிவதற்குள் ஒரு வித அயர்ச்சி வந்து விட்டது.வழக்கம் போல ஹாரிஸ் காப்பாற்றினார்.
6.விண்ணை தாண்டி வருவாயா : இந்த படம் சிலருக்கு பிடித்திருக்கிறது என்று கேள்வி பட்டு ஆச்சர்யம் அடைந்தேன்.எப்பா செம போர்.ரகுமான் இல்லாவிட்டால் என்ன ஆகி இருக்கும். ரெட் ஜியான்ட் -உதயநிதி இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்காவிட்டால் படம் ஊத்தி கொண்டிருக்கும்.நான் இந்த படத்தை டி.வி.டியில் பார்க்க தொடங்கி போர் அடித்தால் பொறுமை இழந்து நிறுத்தி நிறுத்தி அடுத்த நாள் அடுத்த நாள் என்று 5 நாள் பார்த்தேன்.இன்றும் கிளைமாக்ஸ் என்ன என்று நினைவில்லை .
7.நடுநிசி நாய்கள் : எப்பா படமா அது .உவ்வே .
எனக்கு தெரிந்து கௌதமிடம் எதிர்பார்க்க ஒன்றும் இல்லை.அவர் படம் இப்படிதான் இருக்கும் என்று தெரியும் .பல உலக சினிமா கரைத்து குடித்த பல பதிவர்கள் நீதானே என் பொன்வசந்தம் பார்த்து ஏன் புலம்புகிறீர்கள் ? கௌதம் படத்தை ஏன் எதிர்பார்க்க வேண்டும்.?கிட்டத்தட்ட அதே மன நிலையோடு
மணிரத்னத்தின் கடல் படத்தையும் எதிர்பார்த்து ஏமாற போகிறீர்கள்.வாழ்த்துக்கள்.கௌதமின் அடுத்த படம் சூர்யா உடன் .செம ஜாலி .




