Pages

Thursday 17 May 2012

ஆனந்த விகடன் -- ஹாய் மதன் மோதல் .

ஆனந்த விகடன் -- ஹாய் மதன் மோதல் .





தமிழ் வார பத்திரிகைகளில் ஆனந்த விகடனுக்கு முக்கிய இடம் உண்டு.அதில் ஹாய் மதன் கேள்வி பதில்கள் ஒரு பகுதி.நிறைய பேர் தொடந்து படித்து வரும் ஒரு சிறந்த பகுதி. மதன் ஒரு சிறந்த DICTONARY எனலாம். எழுத்தாளர் சுஜாதாவிற்கு பிறகு எந்த துறை பற்றி வேணும் என்றாலும் எழதும் ,பேசும் திறைமை படைத்தவர். வாரா வாரம் வாசகர்களின் பல துறை  கேள்விகளுக்கு ஸ்வரசயமாகவும் ,நகைச்சுவையோடும் பதில்கள் வழங்கி வந்தார். அவை விகடன் பதிப்பகம் தனி புத்தகமாகவும் வெளிவந்துள்ளன.



சரி விஷயத்துக்கு வருவோம்.அந்த பகுதி இப்போது நிறுத்த பட்டுள்ளது.மேலும் மதன் வரையும் அரசியல் கார்டூனும் இனி வரதாம்.என்ன காரணம்.அவர்களே கூறியுள்ளார்கள்.சென்ற வாரம் ஒரு கேள்வியில் ஒருவர் மற்ற  உயிர் இனங்கள் காலில் விழும் பழக்கம் இல்லாத போது,மனிதர்கள்  மட்டும் ஏன் காலில் விழுகிறார்கள் என்று கேட்டுள்ளார்.அதற்க்கு  மதன் ஒரு பாதுகாப்புக்காக தான் ஒருவர் மற்றவர் காலில் விழ்கிறார் என்று பதில் அளித்து உள்ளார்.அதற்க்கு பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற படம் வெளியாகி உள்ளது. இது மதனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.காரணம் மதன் ஜெயா டி.வியில் மதன் திரை பார்வை என்ற நிகழ்ச்சியை வழங்குகிறார். இந்த நேரத்தில் இப்படி ஒரு படம் அவரது பகுதில் வந்ததை அவர் விரும்ப வில்லை.அதற்காக அவர் வார வாரம் பதில் சொல்வது மட்டுமே தன் வேலை என்றும் அது சம்மந்தமான படங்கள் போடுவது விகடன் தான் என்று    சொல்லி அந்த விளக்கத்தை விகடன் வெளியிட வேண்டும் என்று சொல்லி உள்ளார்.இது விகடன் நிறுவனத்துக்கு கோபத்தை கிளப்பி மதன் சம்பத்தப்பட்ட பகுதிகளை இனி தொடரபோவதில்லை என்று அறிவித்துவிட்டனர்.

நம் விருப்பம் எல்லாம் இந்த சிறிய பிரச்சனை ஒரு நல்ல பகுதி வராமல் தடுக்க கூடாது என்பதே.இது நேரடியாக பேசி தீர்க்க கூடியது தான்.விரைவில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்ப்போம்.இல்லா விட்டால் அநேகமாக மதனை குமுதம் அழைத்துகொள்ளும் என்பதே என் யூகம்.

படித்தவர்கள் கமெண்ட் போடவும்.


3 comments:

  1. madan vilakka pattathe sari

    ReplyDelete
  2. இது எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி காலமன்று. இன்று ஒரு பக்கக் கதவு மூடினால் மறுபக்கக் கதவைத் திறக்கப் பலர் மனமகிழ்வோடு காத்துக்கிடக்கின்றார்கள். கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்சிறப்பு. மதன் இழப்பு பத்திரிகைகளுக்குத்தான் இழப்பேயன்றி மக்களுக்கல்ல!

    ReplyDelete
  3. Madhan was not an employee of Vikatan. He worked as a freelancer. A freelancer has the right to protect his interests at all places he does freelancing for. So, Kumudham should have avoided publishing material that will embarass Madhan at other workplace (read as Jaya TV).

    It is a matter of who is big. It is a matter of whether Madhan has the right to protest. In this case, Madhan had the right to protect his iinterest and hence he protested.

    ReplyDelete